-
31st July 2010, 06:06 PM
#11
Senior Member
Diamond Hubber
"அரிசி குத்தும் அக்கா மகளே" பாடலை திரும்ப திரும்ப கேட்டு ரசித்துக்கொண்டிருக்கிறேன். ஆரம்ப இசைதான் இந்தப் பாடலுக்கே உச்சம் என நினைக்கிறேன். நாட்டுப்புற இசையையும், குரலடிக்கும் ஓசையினையும் ஒன்றாக நெய்யும் நேர்த்தியை கேட்பதே சுகானுபவம்...
அடி மூக்கி அரை மூக்கம்மா பாடலில் சசிரேகாவுடன் இணைந்த ம.வாசுதேவன் இதில் ஷைலஜாவுடன். நாயகனுக்கும் நாயகிக்கும் இடையே நடக்கும் கிண்டல், கேலியாக பாடலின் முதல் சரணம் நகைச்சுவை தோரணம். "கழனிப் பானையில" என்ற இடத்தை ரொம்ப அனுபவித்து பாடியிருப்பார் ம.வாசுதேவன்.
வக்கணையா சோத்தைப் பொங்கி ஆக்கி வச்சாக்கா
தினம் முக்குவியே மூக்கு முட்ட மிச்சம் வைக்காமே
மூக்காலே மூணு வேள திண்ணு கொழுத்தெ
உங்க அக்காவ தின்னு ஏப்பம் விட்ட உலக்க கொழுந்தே
காலங் காத்தால எதிரே வந்தே
கழனிப் பானையில எலியப் போலே
ஆளான நாளுத் தொட்டே அல்வா வித்து
அட அலைஞ்சாலே பொட்ட புள்ள
கொட்டம் தீர்க்க நானாச்சு
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
31st July 2010 06:06 PM
# ADS
Circuit advertisement
Bookmarks