-
31st July 2010, 09:21 AM
#11
Senior Member
Diamond Hubber
பள்ளி செல்லும் காலங்களில் தாள ஓசைகளின் மீது அளவு கடந்த பிரியம் இருக்கும். டப்பாங்குத்து பாடல்களில் அப்படியொரு ஈடுபாடு. அந்த வரிசையில் மண் வாசனை படத்தில் வரும் "அடி மூக்க அரை மூக்கமா" ..
ராஜாவின் டப்பாங்குத்து பாடல்களில் விஷேஷம் என்னவென்றால், பாட்டின் ஆரம்ப நொடி முதல் கடைசி வரை ஓய்வில்லாமல் தொடர்ந்து பயணிக்கும் ஆற்றல். மூச்சு விடக் கூட இடம் இருக்காத வகையில் பல்வேறு திசைகளிலும் சென்று கொண்டே யிருக்கும். இவ்வளவு தூரம் ஆடிக் களைத்துவிட்டோமே, கொஞ்சம் இளைப்பாறுவோம் என்ற பேச்சிற்கே இடம் கொடுக்காத இசை ராட்சசன் ராஜா.
அடி மூக்கி அரை மூக்கம்மா
ஏ நாக்கு நீண்ட பொன்னம்மா
பொல்லாப்பு வேணாமம்மா
நான் பாடி வரேன் பாட்டெம்மா
என் பாட்டி பேரு பட்டம்மா
விட்டேன்னா தாங்காதம்மா
முதல் இடை இசையின் அமைப்பிற்கே எத்தனை முறையேனும் ராஜாவை பாராட்டலாம். க்ளாரினெட்டும், உருமி மேளமும் கலந்து செல்லும் பாதையை லாவகமாக புல்லாங்குழலும், தபேலாவும் அபகரிக்கும் அழகோ அழகு!
சரணம் ராஜாவின் கற்பனையில் பல அடுக்குகளில் விளையாடும்.
ஆணும் பெண்ணும் சரணத்தின் சந்தத்திலேயே ஒருத்தரை ஒருத்தர் பரிகாசம் செய்துகொள்ளுவர். ம.வாசுதேவனுக்கு ஏற்ற தளம், கோட்டை இது. சும்மா கலக்கியிருப்பார்.
அடி எட்டாங்கிளாஸ் பெஞ்சிய
வருஷமெல்லாம் தேய்க்கிற
பாஸு பண்ண மனசு இல்லையா?
எனத் தோழி நகைப்பதை எண்ணி,
அய்யய்யோ அய்யய்யோ
அடி என்னத்த நான் பாடுவேன்
என்னத்தாளம் போடுவேன்
எனக்கேதும் புரியலயே
எனத் தோழன் பாடுவது நம்மையெல்லாம் சிரிக்க வைக்கும்.
தொண்ட கட்டி போச்சுது! என சசிரேகா பாடும் விதமே அசத்தல். இயல்பா இதுபோன்ற முயற்சியெல்லாம் ஆண் பாடகரே தமிழ்த் திரையுலகில் எடுத்து செய்வதுண்டு. பெண் குரலில் ராஜா பரிட்சித்துப் பார்த்தது சிறப்பு!
மீண்டும் சிறார் பருவத்திற்கு கைப்பிடித்து அழைத்துச் சென்ற ராஜா, ம.வாசுதேவன், சசிரேகாவிற்கு நன்றிகள்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
31st July 2010 09:21 AM
# ADS
Circuit advertisement
Bookmarks