
Originally Posted by
venkkiram
நன்றி ஐயா!
கீழ்கள் = கயவர். ஒரு சந்தேகம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னாடி அப்போதிருந்த சமூகப் படிக்கட்டுக்களுக்கிடையே எழுதப்பட்ட திருக்குறளின் பதங்களுக்கு பொருள் காண எப்படி சரியா "=" போட்டு விளக்கத்தை உரித்துக்கொள்கிறீர்கள்?
நீங்கள் கேட்டது நல்ல கேள்வி. கணக்கியல் திட்டவட்டமுடையதுபோல (mathematical precision), "=" என்னும் குறியீடு போட்டுப் பொருள்சொல்வது, அறிஞர் சிலரையாவது வியப்பிலாழ்த்தக்கூடும். என்னைப் பொறுத்தவரை ஐயப்பாடொன்றுமின்றிக் கூறுகிறேன் என்று நீங்கள் கொண்டாலும், தவறொன்றுமில்லை.
"என்பது யாதெனின்" என்ற தொடருக்கு ஈடாக அதனைப் பயன்படுத்துகிறேன். நீங்கள் குறிப்பிடுவதுபோல வள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகட்கு முன் வாழ்ந்தவர் என்பதால், அவரெழுதியதைக் கணக்கியல் திட்டவட்டத்துடன் பொருள்விளக்கம் செய்யும் எவரும் இன்றில்லை என்பது உண்மைதான். ஆசிரியர்கள் ஓருவருக்கொருவர் மாறுபடுவதினின்று அது தெளிவாகிறது.
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
கயவர் யார், கீழ் யார், கீழ்மகன் யார் என்பது வள்ளுவரால் ஒரு வரையறவாக (definition) இவ்வதிகாரத்திற் கூறப்படவில்லை (அவர் காலத்தில் அது தெளிவாய் இருந்திருக்கும் ) எனினும், திருக்குறளையும் ஏனைத் தமிழ் நூல்களையும் நுணுகியாய்ந்து அதற்கு ஒருவாறு பொருள்கூறுவது இயலாத ஒன்றன்று. நீதி நூல்கள் மிகப்பல தமிழிலுண்டு ஆதலின், அதற்கு மிக்க இடமும் வசதியும் தமிழில் உண்டு என்பதுண்மை.
"=" என்பதற்குப் பதிலாக "≈" என்ற குறியீட்டை நீங்கள் போட்டு வாசித்தாலும், எனக்கு மறுப்பொன்று மில்லை.
இக்காலத்தவர் "கீழ்" என்பதைக் கீழ்ச்சாதி என்று தவறாகப் பொருள் கொள்ளக்கூடும். . இதன்பொருள் அதுவன்று.
இன்னொரு கேள்வி வரும் என்று எனக்குத் தெரியும், கயவர் யார் என்று கேட்பீர்கள் என்று அல்லது, கீழ் என்பது எப்படிக் கயவரைக் குறிக்கும் என்று! பொருள் தெளிவாய் உள்ளது என்று எண்ணிக்கொண்டேன். So you have not asked. Thank you.
You are welcome to ask more and others may also upload their input if any.
≈