கணவனும், மனைவியும் நடந்து போய்க் கொண்டுள்ளனர். சாலையில் ஒரு குரங்கு கிராஸ் செய்து ஓடுகிறது.
மனைவி - என்னங்க, உங்க உறவுக்காரர் இப்படி பொறுப்பில்லாமல் ரோட்டை கிராஸ் செய்கிறார் பாருங்க... யாருங்க இது?.
கணவன் (கடுப்பை அடக்கியபடி)- என் மாமனார்தானே போகிறார். உனக்கு அவரைத் தெரியாதாக்கும்....!!!!!
-----------------------------------------------------------------------------------------------------------------------
காதலியை கூட்டிக் கொண்டு ரவுண்டு அடிக்கப் போனான் காதலன். ஆனால் காதலியுடன் ரொம்ப நேரம் சுற்ற அவனுக்குப் பிடிக்கவில்லை. இதையடுத்து தனது நண்பனிடம் ஏற்கனவே சொல்லி வைத்திருந்தான்- சரியாக சாயந்திரம் 5 மணிக்கு எனக்கு போன் செய், நான் ஏதாவது காரணம் சொல்லி என்னோட ஆளை கட் செய்வேன் என்று.
அதன்படி மாலை 5 மணியும் வந்தது. நண்பனின் காலுக்காக காத்திரு்நதான் காதலன். காதலியிடம் செயற்கையாக சிரித்துப் பேசியபடி. போனும் வந்தது. எடுத்துப் பேசினான், பின்னர் வைத்தான்.
பிறகு காதலியிடம் திரும்பி, ஸாரி டியர் என்னோட தாத்தா செத்துப் போய்ட்டாராம். நான் உடனே போகனும் என்றான் சோகத்துடன்.
அதைக் கேட்ட காதலி சொன்னாள்.. அப்பாடா, நல்லவேளை உன்னோட தாத்தா செத்தார்.
இல்லாட்டி என்னோட தாத்தாவை நான் கொன்றாக வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்...!
--------------------------------------------------------------------------------------------------------------------
ஆசிரியர் - எங்கடா உன்னோட ஹோம் ஒர்க்...?
மாணவன் - அதை வச்சு பேப்பர் பிளேன் செஞ்சிருந்தேன் சார். அதை எவனோ ஹைஜாக் பண்ணிட்டான்.