Page 3 of 14 FirstFirst 1234513 ... LastLast
Results 21 to 30 of 138

Thread: Sivaji Ganesan School of Acting

  1. #21
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சிலர் இவரது நடிப்பைத் தாழ்த்தி உரைக்கையில் அல்லது வீழ்ந்தார் அவ்வளவுதான் என்ற ஏளனக் கூச்சல்கள் வருகையில் சீரியஸ் ஆக மாட்டார். பொறுமை எல்லை கடக்குமளவிற்குப் போன பின் ஒருமுறை அவர் கர்ஜித்தது

    "யாராவது கட்டபொம்மனை இந்த மாதிரி வடித்துக் காட்டுங்கள்
    நான் எனது தொழிலை விட்டு விடுகிறேன்".

    ஏன் இதைக் குறிக்கிறேன் என்றால் அவர் உயிர்ப் பாத்திரமான வ.உ.சி மாதிரி செய்து காட்டுங்கள் என்று அவர் உரைக்கவில்லை. கட்டபொம்மன் போல் செய்ய முடியுமா என்றுதான் கணை எழுப்பினார்.

    இதிலிருந்து அந்த கட்டபொம்மனுக்குக்காக அவர் பட்ட பாடு தெரிகிறது. .

    கட்டபொம்மனை இயல்புமீறி ஒரு ஆக்ஷன் கிங் ஆக அவர் ஒரு இடத்தில் கூட காட்டியதில்லை சந்தர்ப்பங்கள் நிறைய இருந்தும்கூட. இன்னும் சொல்லப் போனால் போர்க் காட்சிகள் கூட தத்ரூபத்தைதான் காட்டும்.

    வீரத்தில் பழுதானவனில்லை... ஆனால் வீரம் மட்டும் காப்பாற்றாதே...மலையோடு எலி போதுவதைப் போலத்தான் மோத முடிந்தது. பீறிட்டுப் பாயும் பீரங்கி குண்டுகளின் தாக்குதல்களுக்கு வாட்களும் வேல்களும் ஈடுகொடுக்க முடியுமா!

    இதை மிக அற்புதமாய் பிரதிபலிப்பார். படைகள் எதிரிகளிடம் சிக்கித் திணறும் போது உள்ளுக்குள் தோற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதை இந்த மேதை படிப்படியாக முக, உடல், குரல் உணர்வுகளுடன் பார்ப்பவரை தன் கவலைகளோடு ஒன்ற வைப்பார். அதுதானே நடிகனுக்குக் கிடைக்கும் வெற்றி! அதே சமயம் வீரம் கிஞ்சித்தும் குறையாது.. அது வீம்புக்காக அல்ல என்பதையும் அழகாகப் புரிய வைப்பார். அதே சமயம் தோல்வியின் அவமானம் அகத்தைக் கொத்தித் தின்னுவதை உன்னிப்பாக அவரை கவனித்தால் உணரமுடியும். இழிநிலைக்குத் தள்ளப்பட்டு விடுவோம் என்ற கவலை ரேகைகள் படர ஆரம்பிப்பதை தான் காட்டிக் கொடுக்கப்பட்டவுடன் காட்ட ஆரம்பித்து விடுவார்.

    சிறுவயதில் கண்ட கூத்தின் ஒவ்வொரு நிகழ்வுகளும் இவரின் அணுக்களில் குடிகொண்டதால் வேறு இன்னும் வரலாற்றுச் சிறப்படைந்த வரலாற்றுப் பாத்திரம்.
    Last edited by vasudevan31355; 2nd June 2013 at 06:34 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #22
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஒரு சோகம் என்னவென்றால்,இந்த வேறு பட்ட பள்ளிகள் சார்ந்த நடிப்பை ரசிக்க ரசிகன் நன்கு தயார் படுத்த பட வேண்டும் ரசனையில். இந்த காலமே ,நடிப்பின் எல்லைகளை சுருக்கி ,ரசிகனின் ரசனை எல்லையை சுருக்கி ,அவர்களுக்கு பல விஷயங்களில் பரிச்சயம் இல்லாமல் செய்து ,நேரமும் இல்லாத நிலையில் மற்றவற்றை உதாசீன படுத்த வைக்கிறது.(what ever I dont know doesn't have right to exist ) என்ற மோசமான நடத்தைக்கு பெற்றோர்கள்,ஆசிரியர்கள்,நட்பு வட்டம் எல்லாமே காரணியாகி விடுகிறது. ஆனால் உன்னதமான ஒன்றை சரியான படி marketing செய்தால் விழுந்து விழுந்து ரசிப்பார்கள் என்பதற்கு கர்ணன் படத்தின் ஒப்பில்லா இமாலய வெற்றி ஒரு சான்று.
    முற்றிலும் உண்மை! நேரமின்மையைக் காரணம் காட்டி நேர்த்தியானவற்றை புறந்தள்ளிவிடுகிறது ஒரு கூட்டம். இதில் இளைஞர்களும் மாட்டிக் கொண்டு விழிப்பதுதான் பரிதாபம். ஒரு கோக், ஒரு பீசா, குர்குர்ரே சதம் தறிகெட்ட தமிழ்ப்படங்களின் அபத்தங்களை ஆர்ப்பரித்துப் பார்க்கும் அவலநிலை. ரசனையில் மேம்பட யாருக்கும் ஆசை இல்லை. அதெல்லாம் வேண்டாம் என்ற ஒரு குருட்டு நோக்கு. என்னதான் இருக்கிறது என்று ஆவல்பட்டான் என்றால் அதிசயங்களை அள்ளலாம். நாலு கார் துரத்தல்களும், அநியாய ஏய் சத்தங்களும், வெட்டி உயிர் போகும் தருவாயில் எழுந்து வந்து வெட்டுவதும் போதும் என்று முடங்கி விடுகிறான். நம் ஆளுக்கு மார்கெட்டிங் வேண்டாம். ஒரு நிமிடம் ஒரே ஒரு நிமிடம் இவரை ஆழ்ந்து கவனித்தானானால் மட்டும் போதும். மாற்றுக்குப் போகவே முடியாது.

    என் நண்பனின் மகன் நல்ல ரசிகன். ஆனால் முன்னம் நான் தெரிவித்த பட்டியலில் இருந்தான். ஒருமுறை பஸ்ஸில் நீண்ட தூரம் பயணம் செய்ய நேரிடும் போது கண்டிப்பாக முதல் மரியாதையை வீடியோவில் பார்த்தே ஆக வேண்டிய நிலை. வேண்டாவெறுப்பாக பார்க்க ஆரம்பித்தவன் சற்று நேரத்தில் முற்றிலும் ஒன்றிப் போனான்.

    வீடு வந்து வாயார குறிப்பாக நடிகர் திலகத்தைப் புகழ்ந்து இருக்கிறான். இந்த மாதிரி வேறு என்னென்ன படங்கள் இருக்கின்றன என்று விசாரிக்க ஆரம்பித்து விட்டான். ஆக வெற்றி யாருக்கு?

    கோபால் சொல்வது போல எல்லோரும் குறிப்பாக இளைஞர்கள் தயார்ப்படுத்தப்பட வேண்டும். அதற்கு ரசனையில் மேம்பட்டவர்கள் உதவ முன் வரலாம். எப்பேர்ப்பட்டவரையும் எக்காலத்திற்கும் வசீகரிக்க நடிகர் திலகத்தால் முடியும். அதை நம்மைப் போன்றவர்கள்தான் அடுத்தவர்களுக்கு உணர வைக்க முடியும்.

    அதற்கு இந்த கோபாலின் கட்டுரைத் தொடரை மிகச் சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம்.
    Last edited by vasudevan31355; 2nd June 2013 at 06:33 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  4. #23
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-34

    கட்டபொம்மன் ஒவ்வொரு தமிழனின் பூஜா பலன். உச்ச அதிர்ஷ்டம். மேற்கு மக்களுக்கு ஒரு ten commandments ,ஒரு lawrence of Arabia போல கீழை மக்களின் சுதந்திர போராட்ட சரிதம். நிகழ்வுகள்
    இப்போது சொல்லுங்கள் கட்டபொம்மன் அதிர்ஷ்டம் செய்தவரா இல்லை ஒவ்வொரு தமிழனுமா என்று?actors should never feel small என்று சொன்ன Stella Adler கூட இப்படி ஒரு ஏகலைவனை அடைய கொடுத்த வைத்தவர்தானே?

    ----To be Continued .
    அன்பின் கோபால்,

    மிகவும் ரசித்தேன்.மிக்க நன்றி.

    VPKB ஐப்பொறுத்தவரை இன்னொரு முக்கிய விஷயம்..அது தலைவர் நடிக்க வந்து ஐந்தே ஆண்டுகள் கடந்த நிலையில் வந்த படம்.இன்று சுமார் ஐம்பத்தைந்து ஆண்டுகள் வயதானது.அதை அந்த கண்ணோட்டத்தில் ரசிக்க பயிலவேண்டும்.

    இதில் வெள்ளை காரர்கள் (கும்பினியார்கள்) எதிர்க்கப்படுவது ஒரு நிலை என்றால்,வ.உ.சி யாக அவர்களை எதிர்க்கும் போது முற்றிலும் வேறுபட்ட நடிப்பை காட்டியிருப்பார்.(அதை நீங்கள் முன்னமேயே அலசி விட்டீர்கள்).சுருக்கமாக சொன்னால் VPKB காட்டுவது பெரும்பாலும் கோபம் மற்றும் வீரம்.ஆனால் வ.உ.சி காட்டுவது சாதுர்யம் மற்றும் போர்தந்திரம்.முந்தையது "இது என் நாடு என் சட்டம்.இதில் தலையிட வியாபாரியான நீ யார்?" என வெடிப்பது..பின்னதோ அந்த வியாபாரிகளே நம் அரசர்கள் என ஆனபிறகு, அவர்கள் வைத்ததே சட்டம் என ஆனபிறகு,யதார்த்தத்தை உணர்ந்து, அந்த சட்டத்தின் துணை கொண்டே அவர்களை வெல்லப்பார்ப்பது.முன்னது யதார்த்தம் அறியா கோபம்.பின்னது யதார்த்தம் புரிந்த அறிவாற்றல்.

    யார் கண்டார்கள்..நிஜ கட்டபொம்மனுக்கு ஆஸ்த்மா நோய் இருந்திருக்கலாம்.சற்று திக்கிபேசுபவனாக் கூட இருந்திருக்கலாம்.ஆனால் தலைவர் அதையெல்லாம் இல்லை என ஆக்கி ஒரு நல்ல சுத்தமான வீரனை நமக்கு அளித்து விட்டார்.

    ஒரு நப்பாசை.."Gandhi" படத்தில்..Ben Kingsley க்கு ப்பதிலாக...ம்ம்ம்.அது எப்படி சாத்தியம்?நமக்குதான் நம்மவர்கள் வாழ்ந்தால் ஆகாதே!எதாவது சொல்லி படத்தையே நிறுத்தியிருப்பார்கள்..

  5. #24
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    டியர் கோபால் சார்,

    நான் நண்பர்களுடன் வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றி விவாதிக்கும்போது பேசிக்கொள்வதுண்டு. அதனை திரு.கண்பத் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.


    Quote Originally Posted by Ganpat View Post
    யார் கண்டார்கள்..நிஜ கட்டபொம்மனுக்கு ஆஸ்த்மா நோய் இருந்திருக்கலாம்.சற்று திக்கிபேசுபவனாக் கூட இருந்திருக்கலாம்.ஆனால் தலைவர் அதையெல்லாம் இல்லை என ஆக்கி ஒரு நல்ல சுத்தமான வீரனை நமக்கு அளித்து விட்டார்.
    Last edited by KCSHEKAR; 3rd June 2013 at 12:37 PM.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  6. #25
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நண்பர்கள் வாசு, கண்பத் ஆகியோர் கோபாலின் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைக்காவியத்தில் நடிகர் திலகத்தின் நடிப்பினைப் பற்றிய கட்டுரைக்கு மிக அருமையான துணைப் பதிவுகளை அளித்து அசத்தியுள்ளீர்கள். பாராட்டுக்கள் சார்.

    வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தைப் பொறுத்த வரையிலும் பல சவால்களை எதிர்கொண்டு தான் வளர்ந்து வெளியானது. கட்டபொம்மன் பாத்திரத்தை சிறுமைப் படுத்தி வேறு இரு வீரர்களை உயர்த்தி போட்டிக்கென்றே தயாரித்தது ஊரறிந்ததே. இது ஊரறிந்த ரகசியம். சிவகங்கை சீமை திரைப்படத்தைத் தான் சொல்கிறேன். இன்றும் கூட இவ்வாறு கூறுபவர்கள் உள்ளனர். நல்ல விளம்பரமும் அப்படத்திற்குக் கிடைத்தது. அதற்கேற்றார்போல் மெல்லிசை மன்னர்களின் இசையும் பேசப் பட்டது. எப்படியாவது கட்டபொம்மன் புகழையும் அதன் மூலம் நடிகர் திலகத்தின் புகழையும் பின்னுக்குத் தள்ளப் பார்த்தார்கள்.

    இன்று கட்டபொம்மன் திரைப்படமே ஒரு வரலாறாகி விட்டது. வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்க்கை ஒரு தியாகியின் வரலாறாக திகழ்வது ஒரு புறமிருக்க, தமிழ்த் திரையுலகில் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படமும் ஒரு வரலாறாகி விட்டது.

    உலக மகா கலைஞரான நடிகர் திலகம் இறுதி வரை எதிர்ப்பிலேயே வளர்ந்ததால் தான் இன்று அழியாப் புகழுடன் மக்கள் மனதில் வாழ்ந்து வருகிறார்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #26
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-35


    எனக்கு நமது சாஸ்திரிய சங்கீத கீர்த்தனைகளில் விமர்சனம் உண்டு. அது அவ்ளோ பெரிய விஷயமா ,ராகத்தை ஒட்டி வார்த்தை நிரப்பல்தானே என்று? ஆனால் தஞ்சாவூர் சங்கரன் என்பவர் மும்மூர்த்திகளின் கீர்த்தனை சிலதை எடுத்து விளக்கினார். ஒவ்வொரு எழுத்தும் வார்த்தையும் எப்படி முக்கியத்துவம் பெற்று ராகங்களின் அழகை மிளிர வைக்கிறது என்று.

    அதை போல் தான் நடிகர்திலகத்தின் வசன உச்சரிப்புகளும். தமிழனுக்கு தமிழை எழுத கற்று கொடுத்தவர்கள் வள்ளுவர் முதல் பாரதி வரை ஏராளம். ஆனால் தமிழை அதன் அழகுடன், அர்த்தத்துடன் பேச தமிழனுக்கு கற்று கொடுத்த ஒரே மேதை நடிகர்திலகம் அல்லவா?அதுதானே பலரை கவர்ந்து தமிழை பாமரர் முதல் பண்டிதர் வரை பள்ளி மாணவரில் இருந்து பல் போன முதியவர் வரை தமிழ் மீது ஆர்வத்தை தூண்டி புலவர் எழுத்துக்கும் பாமரர் மனதுக்கும் தொடர்பு கண்ணியானது? எனக்கு முதல் பரிச்சயம் கட்டபொம்மனுடன் ஒலிச்சித்திரம் (soundtrack ) மூலமே ஏற்பட்டது.பிறகு வசன புத்தகத்தை வாங்கி வசனங்களை மனனம் செய்தேன். அவரை போல் பேச முயன்றேன்.

    listen only to soundtrack and you will realise the timbre ,modulation ,tonal clarity ,subtle and quick flow of variation in octave levels that plucks every known &buried emotional suggestions from the dialogue with its rhythm and beauty(He lived in his voice) .அவருடைய ஆண்மையான குரலில் வசனத்தின் ஒவ்வொரூ எழுத்தும் சொல்லும் அவரின் பாவம், ஏற்ற இறக்கம், தெளிவு, கவிதையின் அழகு,முக பாவத்திற்கேற்ற கை கால் உடல் அசைவுகளுக்கேற்ப மெல்லிய துல்லிய குரல் மாற்றங்கள், நம்மில் அந்த பாத்திரத்தை அதன் உணர்வை மனகண்ணில் காட்டி விடும் வலிமை கொண்டது.

    நான் இந்த குரலுக்கு அடிமையாகி ஐந்து வருடங்கள் கழித்தே படத்தை வெள்ளித்திரையில் கண்டேன்.ஆனால் சமீபத்தில் எனக்கொரு சந்தேகம். நாம் முதலில் வசனம்,பிறகு படத்தோடு வசனம் மகிழ்ந்து அதில் திளைக்கிறோம். ஆனால் உலக அங்கீகாரம் பெற்ற இந்த படத்தில், அந்நிய நாட்டை,மொழியை சார்ந்தவர்களை ,இந்த வசனங்களின் முழு பொருளும் அருமையும் தெரியாமலே அடிமை ஆக்கி ஆசிய ஆப்பிரிக்காவின் சிறந்த நடிகராக அங்கீகரிக்க வைத்ததே? எப்படி?

    அந்த படத்தை ,முழுவதும், வசனத்தை mute பண்ணி பார்த்தேன்.(மனதில் வசனம் ஓடாமல் பிரயத்தனம் செய்து)

    அந்த அதிசயத்தை அடுத்த பதிவில் சொல்கிறேன்.

    -----To be continued .
    Last edited by Gopal.s; 4th June 2013 at 11:01 AM.

  8. #27
    Junior Member Regular Hubber vidyasakaran's Avatar
    Join Date
    Aug 2006
    Posts
    12
    Post Thanks / Like
    Quote Originally Posted by Ganpat View Post
    VPKB ஐப்பொறுத்தவரை இன்னொரு முக்கிய விஷயம்..அது தலைவர் நடிக்க வந்து ஐந்தே ஆண்டுகள் கடந்த நிலையில் வந்த படம்.இன்று சுமார் ஐம்பத்தைந்து ஆண்டுகள் வயதானது.
    ஆ... இதை நான் உணர்ந்ததேயில்லை.
    நடிகர் திலகம் உச்சத்திலிருந்த நாட்களின் பிரம்மாண்டத்தை அல்ல, அதன் ஒரு சதவீதத்தையாவது இப்போதுதான் தெரிந்து கொண்டிருக்கிறேன். அதேபோல்தான், அவரது நடிப்புத்திறன் பற்றியும்.
    வாழ்க உங்கள் அனைவரது தொண்டு.
    நன்றி.

  9. #28
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    தமிழனுக்கு தமிழை எழுத கற்று கொடுத்தவர்கள் வள்ளுவர் முதல் பாரதி வரை ஏராளம். ஆனால் தமிழை அதன் அழகுடன், அர்த்தத்துடன் பேச தமிழனுக்கு கற்று கொடுத்த ஒரே மேதை நடிகர்திலகம் அல்லவா?அதுதானே பலரை கவர்ந்து தமிழை பாமரர் முதல் பண்டிதர் வரை பள்ளி மாணவரில் இருந்து பல் போன முதியவர் வரை தமிழ் மீது ஆர்வத்தை தூண்டி புலவர் எழுத்துக்கும் பாமரர் மனதுக்கும் தொடர்பு கண்ணியானது?
    உண்மை. இது தான் நிஜம். வெறும் வார்த்தையல்ல கோபாலின் கருத்துக்கள். உண்மையின் பிம்பம். அதற்குச் சான்று இதோ

    இன்றைய கால கட்டத்தில், 2011ல் எல்.கே.ஜி. குழந்தை பள்ளி மாறுவேடப் போட்டியில் கட்டபொம்மன் வசனம் பேசுவதைக் கேளுங்கள். ஏற்ற இறக்கத்துடன் அந்தக் குழந்தை தன் மழலை மொழியில் தமிழைப் பேசும் போது, தமிழ்த் தாய் தன் தவப்புதல்வனை உச்சி முகந்து கொண்டாடி யிருப்பாள் அல்லவா. தன் தாய்த்தமிழை நடிகர் திலகம் வளர்த்த அளவிற்கு வேறு யாரை நினைத்துப் பார்க்க முடியும். லட்சோப லட்சங்களில் புத்தகங்கள் செய்ய முடியாத காரியத்தைத் தன் ஒரு படத்தில் தான் பேசிய வசனத்தின் மூலம் செய்து காட்டி இன்று தமிழை உச்சியில் கொண்டு போய் வைத்துள்ளவர் நடிகர் திலகம் தான் என்று கூறவும் வேண்டுமோ.

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #29
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இதோ இன்னொரு குழந்தையின் வசன வெளிப்பாடு

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #30
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இதோ இன்னொரு குழந்தையின் வசன உச்சரிப்பு

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Page 3 of 14 FirstFirst 1234513 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •