-
28th August 2014, 11:10 PM
#1451
Senior Member
Diamond Hubber
Originally Posted by
chinnakkannan
அனிதா இளம் மனைவி // குமுதமோன்னோ..
விகடனோன்னோ
-
28th August 2014 11:10 PM
# ADS
Circuit advertisement
-
28th August 2014, 11:16 PM
#1452
Senior Member
Seasoned Hubber
தங்கள் ஆதரவான வார்த்தைக்கு மிக்க நன்றி வாசு சார்...
பொங்கும் பூம்புனல்
பாக்க நெனச்சாராம் பாத்துட்டாராம்.. கேக்க நெனச்சாராம் கேட்டுவிட்டாராம்..
அந்த அம்மா அதுக்கு மேலே என்ன சொல்றாங்க கேளுங்க..
புதுசா என்ன கேட்டுக்கிட்டே... என்று அவர் கேட்டதை ஒண்ணுமே இல்லாமே பண்ணிட்டாராம்...
எதைப் பத்தி...
நீங்களே பாட்டைக் கேட்டு தெரிஞ்சுக்குங்க..
அவசரக்காரி படத்தில் சங்கர் கணேஷ் இசையில் எஸ்.பி.பாலா வாணி ஜெயராம் பாடிய துள்ளல் பாடல்...
http://www.inbaminge.com/t/a/Avasarakari/
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
28th August 2014, 11:16 PM
#1453
Senior Member
Diamond Hubber
சி.க சார்,
மாயா ஓல்ட் படம் இருக்கு. ஆனால் போட இயலாது. சென்சார். உங்க ஆசையையும் நிறைவேத்தி ஆகணும். ம். என்ன பண்ணலாம்? ஒரு மாயா பாட்டப் போட்டுடலாம். சின்னக் கண்ணனார் ஆசைப்பட்டு இல்லாமல் போவதா? விடுவோமா?
'அவனுக்கு நிகர் அவனே' கர்ணன் படம் சுமன் ஹீரோ. அதுல மாயா ஆண்டி சுமன் கூட ஜலத்துல தோழியரோடு குளத்தாட்டம் போட்டு ஒரு பாட்டு பாடுவாங்க. குரல் ராட்சஸியுடையது. கேட்டு என்ஜாய் பண்ணுங்கோ.
பயப்பாடமே பாருங்க. மோசமா எல்லாம் இருக்காது.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
28th August 2014, 11:21 PM
#1454
Senior Member
Seasoned Hubber
பொங்கும் பூம்புனல்
ஆஹா... எத்தனை நாளாச்சு இந்தப் பாட்டைக் கேட்டு... என்று சந்தோஷப் படவைக்கும் பாட்டு...
சங்கர் கணேஷ் 80களில் நிலைத்து நிற்க உதவிய பாடல்களில் ஒன்று.. ஒரு பக்கம் மெல்லிசை மன்னர், இன்னொரு பக்கம் பட்டி தொட்டி எங்கும் இளையராஜா அலை, இதன் நடுவில் ... சங்கர் கணேஷ் தனி ட்ராக்கில் தூள் கிளப்பிக் கொண்டிருந்தார்கள். உபயம் வாணி ஜெயராம்...
சங்கர் கணேஷ் வாணி ஜெயராம் கூட்டணியில் சூப்பர் டூப்பர் பாட்டு...
மாலையில் பூத்த மல்லிகைப் பூக்களே...
http://www.inbaminge.com/t/e/Engamma%20Maharani/
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
28th August 2014, 11:22 PM
#1455
Senior Member
Senior Hubber
ஃபையர் பாக்ஸ் தான்..ஆனாலும் இன்பமிங்கே என் கம்ப்யூட்டர்ல ஒர்காகலை.. ம்ம் பார்க்க நினச்ச்பாட்ட எப்படியும் நாளைக்குக் கேட்டுடறேன் ராக்வேந்தர் சார்..
வாசு சார்.. மாயா பாட் கேக்கலை..இருந்தாலும் நன்றி..(அப்புறமா பாக்கறேன்) ஆமா..அது குமுதம் தாங்க..என் அக்கா பைண்ட் பண்ணிவைத்தகதைகளில் ஒன்று அனிதா இளம் மனைவி..இதுஎப்படி இருக்கு எனப் பின்னாளில் ஜெய் ஸ்ரீதேவிஎன வந்தது..
-
28th August 2014, 11:22 PM
#1456
Senior Member
Diamond Hubber
மதுஜி,
தங்களுக்கு மிகப் பெரிய என் நன்றி! ரொம்ப நாளாக நான் தேடிக் கொண்டிருந்த 'யானையின் பலம் எதிலே' பாடலைத் தந்து வயிற்றில் பால் வார்த்தீர்கள்.
திரியின் பலம் எதிலே
மதுஜியின் மகத்தான வீடியோவிலே
மதுஜி!
இன்னொரு ரிக்வெஸ்ட். 'இதயம் பார்க்கிறது' அனைத்துப் பாடல்களும் கிடைக்குமா?
-
28th August 2014, 11:27 PM
#1457
Senior Member
Seasoned Hubber
பொங்கும் பூம்புனல்
உமா ரமணன் சூப்பர் வாய்ஸில் அருமையான பாடல்.. கர்ஜனை படத்திலிருந்து ... என்ன சுகமான உலகம் ஹோ... இளையராஜா இசையில்...
http://www.inbaminge.com/t/g/Garjanai/
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
28th August 2014, 11:32 PM
#1458
Senior Member
Seasoned Hubber
பொங்கும் பூம்புனல்
கங்கை கொண்டான்... இளைய திலகம் பிரபுவின் பிரியமுடன் பிரபு படத்தின் மூலம் பிரபலமானவர். இப்படத்தின் ஹீரோயின் கூட யாரோ பிருந்தா என நினைவு. அவருடைய முந்தைய திரைப்படம் கண்ணீரில் எழுதாதே.. இத்திரைப்படத்தில் ஷ்யாம் இசையில் இப்பாடல் மறக்க முடியாத பாடலாகும். சிலோன் ரேடியோவில் மட்டுமே போடுவார்கள்..
http://www.inbaminge.com/t/k/Kanneeril%20Ezhuthadhe/
இப்பாட்டைப் பாடியவர் கௌசல்யா... இவர் தான் கண்ணன் என் காதலன் திரைப்படத்தில் கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும் பாட்டைப் பாடிய கௌசல்யாவா தெரியவில்லை. யாராவது தெரிந்தவர் இருந்தால் சொல்லலாம்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
28th August 2014, 11:39 PM
#1459
Senior Member
Seasoned Hubber
பொங்கும் பூம்புனல்
ஆஹா.. இந்தப் பாட்டிற்காகவே இன்பமிங்கே இணையதளத்திற்கு வாழ்நாள் பாராட்டுக் கூறிக்கொண்டே இருக்கலாம்..
சங்கர் கணேஷ் அளித்த பல நல்முத்துக்கள் மக்களிடம் சென்று சேராததன் காரணம் புரியவில்லை.. இந்தப் பாட்டில் ட்ரம்பெட் ஸோலோ, கிடார் ஸோலோ, என இசை விருந்தே காத்திருக்கிறது.. எஸ்.ஜானகி கட் நோட்ஸில்லாமல் மூச்சு விடாமல் ஒரு சரணத்தில் இரண்டு மூன்று வரிகள் பாடியிருப்பது பிரமிப்பூட்டுகிறது.. குறிப்பாக வருஷம் புதிய வருஷம் நல்ல வாழ்வை நாடியது வரிகளைப் பாடும் போதும் அதனைத் தொடர்ந்து சாக்ஸ் வரும் போதும் பரவசம் நம்மை உச்சத்தில் கொண்டு செல்கிறது. பிஜிஎம் முடிந்த வுடன் சிலரது வாழ்வில் என்ற பல்லவி தொடங்கும் போது லேசான சோகம் தொடங்குகிறது...
இதற்கு மேலும் விவரிப்பதை விட பாடலைக் கேட்டு நீங்களே உணர்ந்து கொள்வது உசிதம்...
ராஜசேகர் இயக்கிய படம் கண்ணீர்ப் பூக்கள்... பாடல்களுக்கென்றே பிரபலமான ஆக வேண்டிய படம் இது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை..
குறிப்பாக எஸ்.பி.பாலா பாடிய காவிய முல்லை பாடல்... ஆஹா... சிம்ப்ளி கிரேட்
பாடல்களைக் கேளுங்கள்.
http://www.inbaminge.com/t/k/Kanneer%20Pookkal/
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
28th August 2014, 11:45 PM
#1460
Senior Member
Diamond Hubber
டியர் கார்த்திக் சார்,
மிக்க நன்றி! 'உலகம் நீயாடும் சோலை' மிக அற்புதமான பாடல் . காட்சியமைப்பும் அமர்க்களம். ஆனால் பாடல் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. 'சிவகாமி ஆட வந்தாலும், 'கற்பனைக்கு மேனி'யும் எல்லாவற்றையும் அழுத்தி விட்டன. வாணியின் 'மழைக்காலம் வருகின்றது' கூட நல்ல பாடல். மனோரமா பாவமாக நடன மாதருடன் சைடில் ஆடிக் கொண்டு இருப்பார் உடல் முழுதும் தங்க வர்ணம் பூசியபடி.
தலைவர் வாட்சில் அடிக்கடி நேரம் பார்த்தபடி 'எப்படா முடியும்? கிளம்பலாம்' என்று இருப்பார். பாடலைப் பார்க்காமல், சுவாரஸ்யமில்லாமல், பக்கவாட்டுகளில் பார்த்துக் கொண்டு கிளப்புவார் நடிப்பில். பின் மேடையில் ஏறிப் பேசும்போது அழகாக அந்தக் காட்சியைக் கன்டின்யூ செய்வார் வார்த்தைகளில். ('ஒரு பொண்ணு மேடையிலே கைய கால தூக்குச்சி... நீங்களும் வந்து ஏதோ கை தட்டுனீங்க' )
ஒரு செகண்ட் காட்சி என்றாலும் நம்ம 'ராஜா'வோட பாணியே தனிதான். எப்பேர்பட்டவராயினும் கிட்ட நெருங்கக் கூட முடியாது. கொள்ளை அழகு வேறே. பாட்டை யார் பார்த்தா? தலைவனின் முகத்தைத்தான் பார்த்து காத்துக் கிடந்தோம். கிடக்கிறோம். கிடப்போம்.
அதற்காகவே இந்தப் பாடலைப் பார்ப்போம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
Bookmarks