Page 162 of 305 FirstFirst ... 62112152160161162163164172212262 ... LastLast
Results 1,611 to 1,620 of 3049

Thread: Nadigar Thilagam : The Greatest Actor of the Universe & The One & Only BO Emperor

  1. #1611
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Quote Originally Posted by Jeev View Post
    Here is the link to watch Sathyam (1976) on line.

    http://www.tamilflix.net/2012/10/sat...ch-online.html

    Jeev
    SIRAPPU THEN KINNAM-- RAMKUMAR SIR JAYATV

    your presentaion is simply fabulous and fantastic sir.
    Especially the diceiption about pudiyaparavai vasantamaligai and thiruvilaiyadal
    and selection of galatta kalyanam song amazing.
    totally a lovely presentation. to be preserved for repeated viewing like NADIGARTHILAGAM MOVIES.
    Last edited by Subramaniam Ramajayam; 8th October 2012 at 10:08 AM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1612
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இளைய திலகத்தின் அசத்தல் பேட்டி

    'குமுதம்' 10-10-2012 இதழில் நடிகர் திலகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு 'இளையதிலகம்' பிரபு அவர்களின் சிறப்புப் பேட்டி வெளியாகியுள்ளது. தன் தெய்வத் தந்தையைப் பற்றியும், தங்களுடைய கூட்டுக் குடும்பம் பற்றியும், அப்பாவின் தொழில் பக்தி பற்றியும், 'அன்னை இல்ல'த்து மகாலக்ஷ்மிகள் பற்றியும், கமல், ரஜினி பற்றியும், தன் பிள்ளைகள், உறவினர் பற்றியும், தன்னுடைய திரையுலக அனுபங்களைப் பற்றியும் மொத்தம் நான்கு பக்கங்கள் அழகாக, அம்சமாக பேட்டி அளித்திருக்கிறார் நம் 'இளைய திலகம்'. இப்போது அந்தப் பேட்டி சுடச்சுட நமது பார்வைக்கு.

    பக்கம் 1



    பக்கம் 2



    பக்கம் 3



    பக்கம் 4



    அன்புடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 8th October 2012 at 02:01 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  4. #1613
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    Dear JEEV sir,

    Thanks a lot for providing the link for the movie 'SATHYAM'.

    (many of you know why I am this much like Sathyam. (yes, the last movie of the excellent pair in NT's career)

  5. #1614
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Sierra Leone
    Posts
    0
    Post Thanks / Like
    When I watched 'Gnana Oli' I straightaway recognized where Rajinikanth's acting came from.

  6. #1615
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மறைந்த இயக்குனர் திரு. ஜெகந்நாதன் அவர்களுக்கு நம் இதய அஞ்சலி.




    Last edited by vasudevan31355; 8th October 2012 at 12:41 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. #1616
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Sierra Leone
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    Dear Vankv
    Welcome to the world of the ONLY EMPEROR IN CINEMA the Nadigar Thilagam Sivaji Ganesan world. Happy to read your post and delighted. PLEASE INTRODUCE YOURSELF, your real name, where are you from and so on, so that you may have a chance to meet like minded friends in person in your surroundings.

    Also from your posts I guess you might be in your mid fifties or late forties. This is only a wild guess. It may be wrong because we come across so many youngsters belonging to the current generation being ardent / hardcore fans of NT. If it is so, it will be more happier for seniors like us. Please share your nostalgia on NT, away from his movies. This will enlighten us on his social and public contributions hitherto unknown to the Society.

    Warm welcome once again

    Raghavendran
    Thank you Mr Raghavendran. I'm Sasidharan, originally from Jaffna, Srilanka . You've guessed my age correctly, I'm 49. My mother was an ardent fan of Sivaji Ganesan. Growing up as kids in the 70's, going to the movies means, going to Sivaji movies to us. Never much heard of other actors or didnt bother to watch others' movies. Having lived in the UK for a long time,(currently living in Colombo) I started watching& collecting most of Sivaji movies on my spare time. Watching English movies changed my conception towards Tamil movies but not about Nadigar Thilagam. He was one of a kind of actor. My late mother mentioned him as 'genious'! It was unfortunate that Indian government didnt recognize him properly for his talents but used him as a vote bank though! He shouldn't have wasted his time with politics, it didnt suit an honest person like him. But I'm glad he acted more than 300 movies, as they are a life-time treasure for his fans. I've probably watched more than 200/250 of his movies. Still watching them again and again. Nice to be part of this forum! Keep posting write-ups, they boost my energy levels! Thank you all!
    Last edited by Vankv; 8th October 2012 at 01:46 PM.

  8. #1617
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் வித்தியாசமான மிகச் சிறந்த நடிப்பில் உருவான பாடல்கள் (தொடர்ச்சி...)



    5. "நல்லவன் எனக்கு நானே நல்லவன்"; படம்:- படித்தால் மட்டும் போதுமா? (1962); இயக்கம்:- ஏ. பீம்சிங்

    கிட்டத்தட்ட 9 மாதங்களுக்குப் பின், இந்தக் கட்டுரையை மறுபடியும் எழுதுவதில் பேருவகை அடைகிறேன்.

    1952-க்குப் பிறகு, தமிழ்க் கலையுலகில், எடுக்கப்பட்ட பல புதிய முயற்சிகளில், நடிகர் திலகத்தின் பங்கு நான்கில் மூன்று பங்கு என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இருக்காது. சினிமா என்கிற விஷுவல் மீடியத்தை எப்படி நடிகர் திலகம் புதிய கோணத்தில், விஷுவலாகக் கையாளத் துவங்கினார் என்பதைப் பற்றி ஏற்கனவே விரிவாக எழுதி இருக்கிறேன். நிற்கும் விதம் (posture), உடல் மொழி (கை கால்களை மனம் போன போக்கில் அசைக்காமல், அளவோடும், அழகாகவும்) மற்றும் மூவ்மென்ட். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். (இன்னமும் நிறைய பேர் பத்தாம் பசலித் தனமாக, சில படங்களில் வந்த வசனங்களைப் பற்றியும், ஓரங்க நாடகங்களைப் பற்றியும் மட்டுமே, (வேறு எதுவும் கிடைக்காததால்) பேசிக் கொண்டிருக்கின்றனர்!)

    அந்த வகையில், இதோ நடிகர் திலகத்தின் இன்னுமொரு புதிய முயற்சி -

    எப்போதும் டூயட்டுகளில், ஆணும் பெண்ணும் பாடியது போக, இரண்டு ஆண்கள் பாடும் புதுமை இந்தப் பாடலில் இதே படத்தில் மறுபடியும் இடம் பெற்றது. ("பொன்னொன்று கண்டேன்" பாடலை வேறொரு கட்டுரையில் எழுதி விட்டேன்!). இந்தப் பாடலை நடிகர் திலகம் அணுகிய விதம் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்.

    இது ஒரு நிறைய பேரின் பங்களிப்பு கொண்ட ஒரு குழுவின் பாடல் (குரூப் டான்ஸ்). இந்தப் பாடலில், பாடும் இரு கதாநாயகர்களும், அவர்களைப் பற்றியும், சில வாழ்க்கைத் தத்துவங்களைப் பற்றியும், அந்தக் குழுவினரோடு சேர்ந்து சந்தோஷமாகப் பாட வேண்டும்.

    இந்தப் பாடலின் துவக்கத்திலேயே, ஒரு வித அசுர வேகம் தெரியும்.

    இந்தப் பாடல் துவங்குவதற்கு முன்னர், படித்த அண்ணன் (பாலாஜி), படிக்காத எப்போதும் வேட்டையாடிக் கொண்டு பார்ப்பதற்கு முரடனாக இருந்தாலும் கள்ளமில்லா மனம் கொண்ட தம்பி (நடிகர் திலகம்) இருவருக்கும் திருமணம் நிகழ்ந்து, அதில் அண்ணன் மட்டும் நினைத்த மாதிரியே மனைவியை அடைந்து விடுவார். ஆனால், தம்பி, துரதிர்ஷ்டவசமாக, பொருத்தமில்லாத படித்த ஒருவரை மணம் புரிந்து, மனைவி, அவரைத் தன்னைப் படித்தவன் போல் நடித்து ஏமாற்றித் திருமணம் புரிந்து விட்டார் என்று வெறுப்புடன், பிறந்த வீட்டுக்குச் சென்று விடுவார். இந்த விஷயம், தம்பி தவிர வேறு ஒருவருக்கும் தெரியாது. இருப்பினும், எல்லோரும் சொந்த கிராமத்துக்கு (எஸ்டேட்) செல்ல, அங்குள்ளவர்கள், இவர்களை வாழ்த்தும் விதமாக கூட்டமாக நடனமாடி மகிழ்விக்கத் துவங்குகையில், அண்ணன் பாடத் துவங்குவார்.

    அண்ணன் (பாலாஜி) பல்லவியைத் துவக்கி முடித்தவுடன், சற்றும் எதிர்பாராதவிதமாக, தம்பி (நடிகர் திலகம்) அனு பல்லவியைத் துவங்குவார். தன்னுடைய குணாதிசயத்தை அழகாகக் கூறுவார் - "உள்ளம் சொன்னதை மறைத்தவனில்லை - ஊருக்குத் தீமை செய்தவனில்லை - வல்லவன் ஆயினும் நல்லவன்" என்று பாலாஜியின் பின்னாலிருந்து முகத்தை மட்டும் காட்டும் போது அந்த முகத்திலும், அந்தக் கண்களிலும் தெரியும் அந்தக் குழந்தைத்தனம், மறுபடியும், அந்த வரிகளைப் பாடி அசாத்திய வேகத்துடன், பாலாஜியை நோக்கித் திரும்பி நிறுத்தும் ஸ்டைல்!

    இப்போது, சரணம் -

    பள்ளம் மேடு கண்டால் பார்த்துச் செல்லும் பிள்ளை .... சேர்த்துக் கட்டிய முல்லை" எனும்போது ஒரு வித ஸ்டைல்.

    "இல்லை இல்லை என்று என்றும் சொன்னவர் இல்லை" என்று பாலாஜி பாடும் போது, இவரது ரியேக்க்ஷன்!

    அடுத்து, இரண்டாவது சரணம் -

    "சிட்டு போல வானில் துள்ளிச் செல்ல வேண்டும்" - அந்த ஆர்ப்பரிப்பைக் கவனியுங்கள் - கைகளை வானத்தை நோக்கி அசாத்திய வேகத்துடன் உயர்த்தும் விதம்! "கீரிப்பிள்ளை போலே ஊர்ந்து செல்ல வேண்டும்" எனும் போது காட்டும் பாவனை! பாலாஜி பதிலுக்கு, "தொல்லை என்ற பாம்பைக் கவ்விக் கொல்ல வேண்டும்; தூய உள்ளம் வேண்டும், என்றும் சேவை செய்ய வேண்டும்" எனும்போது, நடிகர் திலகம், இரண்டு கைகளையும் ரொம்பவே லூசாக வைத்துக் கொண்டு இலேசாக ஆடுவது -அவருடைய ஸ்டைலையும் சேர்த்து! குறும்பு கொப்பளிக்கும்!!

    இந்தப் பாடல், இந்தப் படத்தின் அந்தச் சூழலுக்குத் தேவையில்லை என்றே தோன்றினாலும், அதற்கு முன்னர் ஏற்படும் ஒரு விதமான இறுக்கமான சூழலை மக்களை மறக்க வைத்து, வேறு ஒரு சூழலை, மக்களுக்கும், ஏன் அந்தப் பாத்திரங்களில் நடிப்பவர்களுக்குமே கூடத் தரும்.

    பாடல் நெடுகிலும், நடிகர் திலகத்திடம் காணும் அசுர வேகமும், ஸ்டைலும், அதன் மூலம், அவருடைய பாத்திரத்தின் குண நலன் என்ன, பாங்கு என்ன என்பதையும் அவர் காட்டியிருக்கும் விதமும், அற்புதமாக இருக்கும். அவரது குடும்பத்தில் இவர் ஒருவர் தான் காட்டிற்கு அடிக்கடி வேட்டையாடச் செல்வதாலும், அவர் எல்லோருடனும் கள்ளம் கபடமின்றி பழகுவதாலும், அவர் மட்டும் பந்தா இல்லாமல் எல்லோரையும் போல் தன்னை மறந்து ஆடி இருப்பார்!

    உத்தம புத்திரன் படத்தில் "யாரடி நீ மோகினி" பாடலில், எப்படி பார்வையாளர்களாக நின்ற கொடிய வில்லன்கள் நம்பியார் மற்றும் ஓஎகே தேவர் ஆகியோரையும் சேர்த்து கைத் தட்ட வைத்தாரோ, அதே போல், இந்தப் பாடல் முடிவில், பார்வையாளர்களான, எம்.ஆர்.ராதா மற்றும் ஏ.கருணாநிதி அவர்களையும் சேர்த்து ரசிக்க வைத்து விடுவார். அந்த அளவிற்கு, பாடலும், நடிகர் திலகத்தின் பிரத்யேக வேகமும், நடிப்பும், துடிப்பும், ஸ்டைலும், அந்த இடத்தையும், பார்ப்பவர்களையும் சேர்த்து மயிர்க் கூச்செறிய வைத்து விடும். பாடல் முடிந்து, சில கணங்கள், அந்த பாதிப்பு நீங்காமலேயே இருக்கும்!

    குழுவினர் ஆடிக் கொண்டிருக்கும்போது, நடிகர் திலகமும், பாலாஜியும் நின்று பார்த்துக் கொண்டிருக்கும்போது கூட, நடிகர் திலகம் மட்டும் ஒரு வித தயார் நிலையில் நின்று கொண்டிருப்பதை கவனிக்கலாம்.

    என்னடா புதிதாக ஏதேதோ செய்யப் போகிறோமே, மக்கள் ரசிப்பதற்குப் பதில், சிரித்து விடுவார்களோ என்று நினைக்காமல், துணிந்து வித்தியாசமாக நடித்த விதம் தான், அவரை மற்ற நடிகர்களிடமிருந்து வேறு படுத்திக் காண்பிக்கிறது. எவ்வளவு தான், புதிதாகச் செய்தாலும், பாத்திரத்தை விட்டு விலகாமல், மாறாக, அந்தப் பாத்திரத்தையும், அந்த கணத்தையும், அந்தப் படத்தையும், மேலும் மெருகேற்ற இவர் ஒருவரால் தான் முடியும் போலும்!

    தொடரும்,

    இரா. பார்த்தசாரதி

  9. #1618
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் சாரதி,
    அட்டகாசமான பாடலுடன் அமர்க்களமாக ஆய்வு செய்துள்ளீர்கள். இந்தப் பாடல் கொட்டகைகளில் திரையிடப் படுமேயானால் ரசிகர்களைக் கட்டுப் படுத்தவே முடியாது. ஸ்டைல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தந்தவர் நடிகர் திலகம். அந்த ஸ்டைலையும் அவர் நுணுக்கமாக செய்யும் போது அதன் பரிணாமம் பல மடங்கு உயரும். பாத்திரமறிந்து பிச்சையிடு என்ற பழமொழிக்கேற்ப, தான் ஏற்றுக் கொண்ட பாத்திரங்களின் குணாதிசயங்களை சற்றும் பாதிக்காதவாறு அந்த ஸ்டைலை அதற்குள் கொண்டு வருவார். அது உலகிலேயே அவருக்கு மட்டுமே உரித்தான பாணி. எத்தனையோ நடிகர்கள் எத்தனையோ விதமான ஸ்டைல் கடைப் பிடித்திருக்கலாம், அல்லது நடித்திருக்க்லாம். ஆனால் அந்த வார்த்தைக்கே உயிர் கொடுத்தவர். கீரிப்பிள்ளை என்ற வார்த்தைக்கு அந்த ஜீவனையே கண்முன்னே கொண்டு வருவார். கீரிப் பிள்ளை வேகமாக வந்து தன் இரையைக் கண்டவுடன் முற்றிலும் மெதுவாக ஊர்ந்து செல்லுமாம். அந்த லட்சணத்தினைத் தன் கைகளில் காட்டி விடுவார் இந்தப் பாட்டில்.

    தங்களுக்காகவும் நமது மற்ற நண்பர்களுக்காகவும் இதோ அந்தப் பாடலைப் பார்ப்போமா



    நான் கவிஞனுமில்லை பாடலில் மேண்டலின் வாத்தியத்தை முறுக்கி கலக்கினார் என்றால் இந்தப் பாடலின் முடிவில் அந்த டேப் கருவியை முகத்தின் அருகே வைத்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டு வேகமாக வாசிப்பதைப் பாருங்கள். அந்தக் காலத்தில் 50களின் கடைசியில் 60களின் துவக்கத்தில் டேப் கலைஞர் ஒருவர் வாசிப்பதைக் கவனித்து அதனை இங்கு பிரதிபலித்துள்ளார். அதே கருவியை சற்றே வித்தியாசமான சூழ்நிலையில் பாவ மன்னிப்பு படத்திலும் வாசிக்கும் போது பாருங்கள். அங்கே அந்தப் பாடலில் கண்கள் திறந்திருக்கும். இந்தப் பாடலில் கண்களை சற்றே மூடினாற் போல் வைத்திருப்பார்.

    சூப்பர் பாட்டு ... சூப்பர் தேர்வு ... கலக்கல் சாரதி....
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #1619
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டியர் பார்த்தசாரதி சார்,

    அருமை. 'படித்தால் மட்டும் போதுமா' காவியத்தின் 'நல்லவன்... எனக்கு நானே நல்லவன்' பாடலையும், அதற்கு நடிகர் திலகம் தந்த ஒத்துழைப்பையும் அற்புதமாக பாடல் பிடித்துள்ளீர்கள் இல்லை இல்லை படம் பிடித்துள்ளீர்கள். தாங்கள் கூறியது போல நடிகர் திலகத்தின் இந்த புதிய முயற்சி நகைப்புக்கு இடமாகக் கூடவாய்ப்புகள் இருந்தும் தன்னுடைய அசாத்திய திறமையில் பாடலை இமாலய உயரத்திற்கு கொண்டு சென்று ஸ்டைலில் பின்னி எடுத்திருப்பார். இதற்கே சற்று பருமனுடன் (விக் மற்றும் மேக்-அப் கூட சுமாராகத்தான் இருக்கும்) படிப்பறிவில்லாத ஒரு வேட்டைக்காரன் போல கதையும், காட்சியமைப்பும் இருந்தும் கூட இப்பாடலில் கண்கள், புருவம், கைகள் இவற்றாலேயே அனைத்தையும் மறக்கச் செய்து வழக்கமான நெம்பர் ஒன் இடத்தை எப்போதும் போல தக்க வைத்துக் கொள்வார். அதுதான் நடிகர் திலகம். "நல்லவன் எனக்கு நானே நல்லவன்" அற்புதப் பாடலை அட்டகாசமாய் ஆய்வு செய்த நீங்களே வல்லவர். பெருமகிழ்ச்சியுடன் கூடிய பாராட்டுக்கள்.
    Last edited by vasudevan31355; 8th October 2012 at 06:59 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #1620
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கீரிப்பிள்ளை என்ற வார்த்தைக்கு அந்த ஜீவனையே கண்முன்னே கொண்டு வருவார். கீரிப் பிள்ளை வேகமாக வந்து தன் இரையைக் கண்டவுடன் முற்றிலும் மெதுவாக ஊர்ந்து செல்லுமாம். அந்த லட்சணத்தினைத் தன் கைகளில் காட்டி விடுவார் இந்தப் பாட்டில்.
    சபாஷ் ராகவேந்திரன் சார். பின்னி எடுத்திட்டீங்க.. நீங்கள் எழுதியதைப் படித்தவுடன் எனக்கு 'சிந்து நதியின் மிசை' ஞாபகம் வந்து விட்டது. "வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்" வரிகளின் போது மிகுதியான நீர் ஆற்றோட்டமாய் வளைந்து நெளிந்து வந்து கடலில் சேர ஓடிவரும் வேகத்தை இரு கைகளின் வளைவுகளின் மூலம் அவர் காட்டும் அழகு... அடடா! மிகுதியான நீர் கடலில் கலந்து வீணாகாமல் பயிர் செய்ய உதவ வேண்டும் என்பதை உணர்த்த, நல்ல நீரை கடலில் சேராமல் தடுப்பது போன்ற பாவனையில் கைகளாலேயே சட்டென்று நிறுத்துவார்... பின் கடலில் சேரவிருக்கும் நல்ல நீரை தடுத்த பின் அந்த நீரோட்டத்தை திருப்பி மையத்து நாடுகளில் பயிர் செய்ய அனுப்பி வைப்பார்.(கைகளாலேயே). கைகளை சமமாக்கி நீரை சமமாக பங்கிட்டு வேறு கொடுப்பார். ஒரு செகண்ட் காட்சி. ஒரு கோடி தலைமுறைக்கும் எழுதலாம். பாரதி மட்டும் இதை கண்டிருந்தால் "என் பாட்டில் இவ்வளவு அர்த்தமா?" என்று அவனே ஆச்சரியப்பட்டுப் போவான்.
    Last edited by vasudevan31355; 8th October 2012 at 09:55 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •