Page 1 of 400 1231151101 ... LastLast
Results 1 to 10 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #1
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like

    மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

    மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4
    ***************************************


    முந்தி வணங்கிடுவோம் முக்கண்ணன் மைந்தனாம்
    தொந்திக் கணபதியின் தாள்..

    *

    ஆகப் பலவாறாய் ஆடலும் பாடலுமாய்
    பாகம் பிரித்திங்கே பக்குவமாய் – தேகஞ்
    சிலிர்க்கவும் மென்மேலும் சிந்திக்கவும் வைத்தே
    மிளிர்ந்ததே இந்தத் திரி..

    *

    ம்ம் என் இனிய வலை மக்களே..!

    முதற்கண் பாகம் துவக்க அழைத்த வாசு அவர்களுக்கும் பணித்த கோபால் அவர்களுக்கும் வாழ்த்திய ராஜேஷ் எஸ்.வி,, கல் நாயக், ரவி, ராகவேந்தர் சிவாஜி செந்தில்,முரளி,கலைவேந்தன் எஸ்.வாசுதேவன் கோபு, ஆதிராம் ராஜ்ராஜ், ராகதேவன், நவ் வேலன் மற்றும் படிக்கும் எண்ணிலா நண்பர்களுக்கும் என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி சொல்கிறேன்.. மிக்க நன்றி..

    மூன்றாம் பாகத்தில் மிளிர்ந்தவர்களை அடுத்த பதிவில் சொல்கிறேன் என்று சொன்னாலும் கூட இந்தப் பதிவில் ஒருவரைப் பற்றிக் கண்டிப்பாகச் சொல்லக் கடமைப் பட்டுள்ளேன்..அவர்.. இனிய நண்பர் கல் நாயக்..

    கொஞ்சம் தொய்வடைந்து சோஓஓஒகமாய் இழை இருந்த போது.. ஹஹஹ..அஹோ வாரும் சி.க எனக் கைகோர்த்து சோர்வடையாமல் மாறி மாறி பதிவு செய்து இழையோட்டத்தை உணர்வோட்டமாய்ச் செய்த கல் நாயக்.. கொஞ்சம் கொஞ்சம் குட்டிக் குட்டிப் பாராவில் சிரிக்க வைத்திருந்தவர், முழுக்கையை மடித்து முழுவீச்சில் இறங்கிப் பதிவுகள் செய்தார்..அதுவும் ஒன்லைன் பஞ்ச்சாய் கடைசியில் எழுதும் ஒருவரியில் ஹி ஹி எனப் புன்முறுவல் தானாகவே முகத்தில் வந்து தொற்றிக் கொள்ளும்.. அவருக்கு நன்றி + மென் மேலும் எழுதிக் குவிக்க வாழ்த்துக்கள்..
    வேலைப்பளுவின் காரணமாகவோ உடல் நிலை சரியில்லையோ என்னவோ வாராதிருக்கும் கிருஷ்ணாவும் வருவார் என மனசுக்குள் ஒரு நம்பிக்கை..

    *
    வான மகளுக்கு என்ன கோபமோ, சோகமோ கட்டியிருந்த கருமேகச் சேலையை முகத்தில் போர்த்தி க் கொள்ள காற்றோ வேண்டாம்மா ப்ளீஸ் கொஞ்சம் சிரியேன்.. ஏன் கண்ணா பாகம் ஆரம்பிக்கிறான்னு பயந்துட்டியா என்பது போல் கொஞ்சம் சீண்ட அதையும் மீறி க் கொஞ்சம் கண்ணோரம் துளியாய் நீர் கோர்த்து இறங்கிக் கீழே விட.. அந்தத் தூறல் மெல்ல மெல்லக் கீழிறங்கி விழுந்து மண்ணில் கலக்கும் போது வருமே ஒரு ச்சிலீர் மண் வாசனை..அடடா அடடா.. அது என்ன செய்யும்..

    அப்படியே இதயத்தைக் கிளறி எத்தனையோ நினைவுகளைக் கிளர்ந்தெழ வைக்குமில்லையா.. அது போல என் இதயத்திலும் கொஞ்சம் நினைவுகள் பின்னோக்கி ஓட விரல் அதை முன்னோக்கி உங்களுக்காக அடிக்கிறது!
    *
    அதாகப் பட்டது மன அம்பாஸடரை ரிவர்ஸ் எடுத்து படக் படக்கென பலவருடம் பின்னோக்கிச் சென்றால்..யார் அது என்ன சொல்றது..

    தெரியுமே தலைகீழ்ப் ப மீசை, ஒல்லி ஒல்லி சி.க.. கல்லூரி மாணவன் அதானே..

    ஆமாங்க்ணா.. கல்லூரி படித்த இறுதியாண்டுஎன நினைக்கிறேன்.. என் கல்லூரி விமான நிலையத்துக்கு அருகில்.. ஆனால் க்விஸ் போட்டி என
    விளாங்குடிக்கு அருகில் இருக்கும் ஃபாத்திமா கல்லூரிக்குச் சென்றிருந்தோம்..

    எங்கள் கல்லூரியில் இருந்து திடுதிப்பென என் வகுப்பில் நானும் இன்னொரு நண்பரும்.. பின் சில பல கல்லூரிகள்.. ஐந்தாறு இருக்கும் என நினைக்கிறேன்..

    க்விஸ் கேட்டது ஒரு ஐ.ஏ.எஸ். ஆஃபீஸர்.. நார்த் இண்டியன். பேசியது ஆங்கிலத்தில் தான்.. நிறையக் கூட்டமெல்லாம் இல்லை..

    அவர் கேட்ட ஒவ்வொருகேள்விக்கும் படக் படக்கென மற்ற கல்லூரி மாணவர்கள் சொல்லிக்கொண்டே இருக்க நாங்களும், ஃபாத்திமா கல்லூரி மாணவிகள் இருவரும் முழிமுழியென மேடையிலேயே முழித்துக் கொண்டிருந்தோம்.. ஏதாவது கேள்விக்கு த் தெரிந்த ஆன்ஸர் என்று சொல்வதற்குள் மற்றவர்கள் சொல்லிவிட நானும் நண்பரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு இருக்க, கடைசியாய் ஒரு கேள்வி..

    அந்தக் கேள்வி கேட்கும் போது அந்தக் கலெக்டர் உணர்ச்சி வசப்பட்டார்..இந்தப் பாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும்..ஏனெனில் இந்தப் பாட்டு என் தம்பிக்கு மிகப் பிடிக்கும்..ஆனால் அவன் மரித்துவிட்டான் ஒரு விபத்தில் எனச் சொல்லி டேப்ரிகார்டரில் அந்தப் பாட்டின் இடையில் வரும் இசையைப் போட்டு என்ன பாடல் எனக் கேட்க எங்கள் கண்களில் பலப்பல மின்னல்கள் அடிக்க கோரஸாய்ச் சொன்னோம் பாடலையும் படத்தின் பெயரையும்..

    பாடல் செல்வமே..ஒரே முகம்காண்கிறேன் எப்போதும்.. படம் அமர காவியம்..

    முக்கந்தர் கா சிக்கந்தர் என ஹிந்தியில் வந்து ஓட்டஓட்டமாய் ஓடிய படம்.. தமிழில் சிவாஜி மாதவி ஜெய்கணேஷ் என சினிப்ரியாவில் ரிலீஸாகி சகோதரி வெளி நாட்டிலிருந்து வந்திருந்த போது அவருடன், அவர் கணவருடன் சென்று பார்த்த படம்..

    நன்றாகத் தான் இருக்கும் ஆனால் சற்றே நீளம் என நினைவு.. அதன் பிறகு அந்தப் படத்தைப் பார்க்கவில்லை..

    பாருங்கள் இதயத்தின் ஆழத்திலிருந்து இவையெல்லாம் வருகின்றன..இவை சொல்லும் செய்தி என்னன்னாக்க..

    சரி சரி..இதயத்தைப் பற்றிப் பாட்டுதான்..

    கண்களில் மயக்கம் கொண்டுவிட்ட அக்கன்னி
    .. காதலதன் தாக்கம் மேனியதை வாட்டிவிட
    எண்ணமது பலவாய் எங்கெங்கோ செல்லும்படி
    ..ஏக்கமாய்ப் மூச்சும் எழிலாக வந்தபடி
    தென்றலும் தீண்ட தேகமது சிலிர்க்காமல்
    …தேனுடன் சுவையாய் தித்திப்பாய்ப் பாடுகிறாள்
    கன்னமும் சிவக்க களிகொள்ளும் அவள்மனமும்
    …காதலன் நினைப்பினிலே கவிதையெனப் பாடுகிறாள்..

    இதயம் பேசினால்..

    இதயம் பேசினால் உன்னிடம் ஆயிரம் பேசுமோ..
    இதழ்கள் பேசுமோ மெளனமே போதுமோ..

    ஒரு நாள் வானிலே வெண்ணிலா வந்தது
    உன்னைத் தான் எண்ணினேன் என்னவோ பேசினேன்

    நாடக மேடையைப் போலே இந்தப் பெண்ணின் கனவுகள்
    நாளெலாம் யோசனை நாடினேன் தலைவனை

    ஆசைகளின் பின்னலிலே அழகின் சோதனை
    இரவில் வேதனை விடிந்ததும் சிந்தனை



    ந.தி, க.தி (கண்களின் திலகம்) மாதவி,



    அப்ப்புறம் க்விஸ் என்ன ஆச்சா.. வேறுகல்லூரி வின் பண்ணிச்சு..

    ..அப்புறம் வாரேன்..

    **
    Last edited by chinnakkannan; 22nd May 2015 at 09:44 AM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    **
    சென் ட்ரல் சினிமாவில் புதுப்படம் வந்தால் கொஞ்சம் கஷ்டம் தான்.. நேரில் க்யூவில் நின்று வாங்க நிறைய நேரம் நிற்க வேண்டும்.. ராகவேந்திரரோ வேறு யாரோ நினைவில்லை.. தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சொன்னார்கள்..முன்னாலெல்லாம் சைக்கிள் டிக்கட் என்று ஒன்று உண்டு சைக்கிள் கொண்டு போனால் அதற்கு டிக்கட் கிடைக்கும் என..

    அப்படி அப்பாவின் கொஞ்சம் கனமான உயரமான ராலே சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்று பார்த்த படம் இன்று போல் என்றும் வாழ்க..

    டிபிகல் ம.தி படம்.. எண்ட் டர் டெய்னர்.. ம.தி அரசியலில் குதித்துசூடுபிடிக்க இருந்த கால கட்டம் என நினைக்கிறேன்..

    வழக்கம் போல பாடல்கள் ஓஹோ தான்.. ஆனால் .. இந்தப் பாடல் நேற்று த் தேடியதில் அகப்பட்டு ரொம்ப நாளுக்கப்புறம் கேட்டுப் பார்த்ததில் நெஞ்சத்தில் கொஞ்சம் ச்சிலீர் செய்தது.. வாலி ஐயா வரிகள். கேள்விபதில் டைப்பாக இருந்து .வெகு கவித்துவம்.. ம.தி ராதா சலூஜா.. ரொமான்ஸ்..( இதயக்கனி மறக்க முடியுமா)

    காதலன் காதலி பாட்டில் வெகு யதார்த்தமான வரிகள்..

    மார்கழி பூம்பனி குளிர்கள் கொண்டு
    மாலை சூடியதேன்
    ஆண்டவன் நீயென வணங்கி நின்று
    அவள் ஆண்டாள் ஆனதனால்
    *
    காவிரி போல் ஒரு உணர்ச்சி வெள்ளம்
    உனை கண்டால் பாய்வதென்ன

    காலடி ஒசை பிறக்கும் இன்பம்
    கானம் பாடுவதால்
    *
    தாமரைக் கன்னி சூரியன் வந்தால்
    தமிழ் போல் ஏன் சிரித்தாள் ( ஹை ரவி விட்டுட்டாரே இந்தப் பாட்டை!)

    பூங்குல ராணி நீரினில் ஆட
    மஞ்சள் தூவியதால்

    *
    நீ தொடும் வேளையில் கொதிப்பும் என்ன
    எந்தன் நிழலும் சுடுவதென்ன

    பெண்மையின் தீபம் கண்களில் ஏந்தி
    திருநாள் தேடுவதால்
    *
    இதயத்திலிருந்து இதழ்கள் வரை அது
    ஏதோ ஒரு வகை புதிய கலை

    மனப் புயலுக்குப் பிறகு அமுத மழை
    அதில் மலர் போல் வளர்வது என்ன கதை...
    என்ன கதை...

    அது காதல் கதை.. ( நல்ல கதை தான் இல்லியோ)

    *


  4. Thanks Richardsof thanked for this post
    Likes gkrishna, kalnayak liked this post
  5. #3
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    ஒருவர் ந.தி திரியில் பாகப்பிரிவிணை பற்றி பேச இங்கே 4’ம் பாகம் பிரித்தே ஆகிவிட்டது. ஆம் 4’ம் பாகம் இனிதே ஆரம்பம்..திருவிளையாடல் ஆரம்பம்..
    ஆம் சி.கவின் குறும்பும் தொந்தி கணபதியின் ஆசீர்வாதமும் .. நல்ல இதயங்களின் வாழ்த்துக்களுடன் தொடங்கியாயிற்று.

    எல்லாவற்றையும் விட நிஜமாகவே திரி கொஞ்சம் சோர்வடைந்த நிலையில் நிலவின் ஒளி வீசி வலைக்கு வெளிச்சம் தந்தவர் கல் நாயக் .. நிச்சயம் பாராட்ட பட வேண்டியவர்.. அதை இங்கே அழகாக செய்த சி.கவிற்கு மனமார்ந்த நன்றி.

    வழக்கம் போல் வாசு ஜி, ராகவ் ஜி, ரவி, கலைவேந்தர் மற்றும் கோபால் இங்கே நிறைய வர வேண்டும் அருள் மழை பொழிய வேண்டும்
    செல்ல அங்கிளும்(ராஜ்ராஜ்) ஜுகல் பந்தி விருந்து அளிக்க வேண்டும்.
    இந்த திரியும் மள மளவென பக்கங்களில் மட்டுமல்லாமல் நட்பும் வளரவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

    வாழ்த்துக்கள் சி.க

  6. Thanks kalnayak thanked for this post
  7. #4
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

    துவக்கிய இனிய நண்பர் திரு சின்ன கண்ணனுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் .உங்கள் கவிதை நடையில் மேலும் மதுர கானம் சிறப்புற பயணம் செய்ய ஆவல் .

    இந்த இனிய நாளில் திரியின் தலைப்புக்கு ஏற்ற எண் 4உடன் பொருந்துகின்ற ஓர் இனிய பாடலை பதிவிடுகிறேன் . இளமை திலகம் மக்கள் திலகம் உலக பேரழகன் எம்ஜிஆர் அவர்களின் சூப்பர் நடனமும் பாடலும் நம்மை மயக்கும்.

  8. Likes gkrishna liked this post
  9. #5
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    கல் நாயக். மூன்றாம் பாகத்தில் மலையாளப்பாடல்களை கேட்டு மகிழ்ந்து பாராட்டியமைக்கு நன்றி.

  10. Thanks kalnayak thanked for this post
  11. #6
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    சின்ன கண்ணன் பெயருக்கேற்ற பாடல்
    உமக்குத்தானய்யா சின்ன கண்ணா ...

  12. #7
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    பிண்ணனி இசையில்லாத ஒரு பாடல். இசையரசி குரல் மட்டுமே


  13. Likes gkrishna liked this post
  14. #8
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ராஜேஷ் எஸ்வி.சார்.. மிக்க நன்றி.. வெரி ஃபாஸ்ட் ஃபீட் பேக்.. ( வயிறெல்லாம்கலங்கினது எனக்குத் தான் தெரியும்)

    *

    சின்னக் கண்ணனுக்குள்ளே வந்த செல்லக்கண்ணனே எந்தன் சின்னக்கண்ணனே..
    கண்ணா உந்தன் பேர் சொல்லியே குயில் ஒன்று கூவுது

    உந்தன் பெயர் சொன்ன பூமரம் பனிப்பூவைத் தூவுது..
    குழலோசை போலுந்தன் குரல் கேட்கும் போது

    உருகாத ஓர் நெஞ்சம் உலகெங்கும் ஏது..
    நல்ல பாட்டு ராஜேஷ் தாங்க்ஸ்..

    *
    எஸ்வி சார்..

    மறுபடியும் எஞ்சாய் பண்ணிக் கேட்டேன் பார்த்தேன்.. சரியான குறும்புப் பாட்டு..தில் குஷியாய்டுத்து.. நன்றி..
    *
    மாடியிலே காலெடுத்து மடியிலே விழுந்தேன்
    மாளிகைக்கு நன்றி சொல்வதா..
    இல்லை ஜாடியிலே தேனெடுத்துத் தந்தாளே
    அந்தத் தங்கத்துக்கு நன்/றி சொல்வதா
    *
    பருவம் பழகாதது பல நாள் தனியானது
    எல்லாம் புதிதானது..ஆஹா எதையும் அறியாதது..
    *
    அச்சமும் நாணமும் தடுக்கும்
    அதில் ஆசையும் தேவையும் இருக்கும்..
    *
    என்னா சீன்ஸ்..!
    *

    ராஜேஷ் மேற்சொன்னது எழுதி போஸ்ட் பண்ண வந்தால் பின்னணி இசையில்லாத பாட்டு.. வாவ் சுசீலாம்மா குரல்..
    நாமணக்கப் பாடியே நன்றாக நீந்துகின்ற
    தாமரைகள் மின்னும் தளம் ( குளம்)

    சரிங்க நான் குளிக்கலைன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்

  15. #9
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வாழ்க்கையில் இளமைப் பருவத்தில் மட்டும் எல்லாவிதமான கேள்விகளும் எழும்புகின்றன..(ஆரம்பிச்சுட்டான்யா ஆரம்பிச்சுட்டான்)

    அதுவும் இந்த கெமிஸ்ட்ரி வாலிபப்பருவத்தில் செய்யும் வேலை இருக்கிறதே நிறைய கேள்வி எழுப்பி விடைகாணத் தவிக்க வைக்கும்..

    தூங்காமல் ஏங்கிநிற்க தென்றலுமே தூண்டிவிட
    பூங்கொடியின் நெஞ்சத்துள் பூ!

    *
    இங்கே ஸ்ரீகாந்துக்கும் ஒரு கேள்வி..ராஜஸ்ரீயோ தில்லாப் பதில் சொல்கிறார்..


    பூங்கொடியே பூங்கொடியே பூவிருந்தால் தருவாயோ
    பொன்னைக் கொண்டு மாலை கட்டி மாலையிட வருவாயோ

    பூந்தோட்டம் நல்ல பூந்தோட்டம்
    ஒரு புடவையில் ஒளிந்தது மெதுவாக
    பார்க்கவோ பறிக்கவோ கேட்கவோ அணியவோ
    பெண்ணின் மனதிலும் எண்ணம் உள்ளது கண்ணன் சொன்னால்
    போதாதோ போதாதோ

    கண்களிலே நாணம் வரும்
    கைகளினால் மூடிவிட்டேன்

    கைகளினால் மூடிவிட்டால் காதலுமா ஓடிவிடும்
    கன்னங்களில் என்னென்னவோ மின்னல் விளையாடும்

    தாங்கவோ தழுவவோ
    உண்ணவோ உறங்கவோ

    வருஷம் மாசம் போகப் போக
    வளரும் ஆசை தீராது தீராது (பொய்!)

    பூமியிலே வானம் வந்து போதைகொண்டு
    சேர்ந்துவிடும்
    சேர்ந்தவுடன் மழைபொழியும்
    பூமிஎங்கும் வெள்ளம் வரும்

    வெள்ளத்தினால் பிள்ளைகள் போல் முல்லை விளையாடும்

    எடுக்கவோ
    தொடுக்கவோ
    கொடுக்கவோ
    முடிக்கவோ ஓஓ

    பெண்ணின் மனதிலும் எண்ணம் உள்ளது கண்ணன் சொன்னால்
    போதாதோ போதாதோ

    (அதான் சொல்லிட்டேன்லம்மா)

    **




    ஸ்ரீகாந்த் ராஜஸ்ரீ – ஸ்கூல் மாஸ்டர் (வாசுங்க்ணா..போட்டாச் இல்லையே!)

  16. Likes Russellmai, adiram liked this post
  17. #10
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    "இந்த திரியும் மள மளவென பக்கங்களில் மட்டுமல்லாமல் நட்பும் வளரவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்"

    உயர்ந்த கருத்துக்கள் ராஜேஷ் . உண்மையில் எல்லோருடைய வேண்டுதலும் இதுவாகத்தான் இருக்க முடியும் .

    Ck - இனிதான ஆரம்பம் -கணேசனை வேண்டிக்கொண்டு ஆரம்பித்துள்ளீர்கள் - எந்த விக்னங்களும் வரவே வராது . கவைப்படாமல் மேலேசெல்லுங்கள் - வாழ்த்துக்கள் .

    திரு கல்நாயக் - உங்களுக்கு நன்றி சொல்லாமல் இந்த திரியில் முதலடி எடுத்து வைப்பது சரிப்பட்டு வராது - 3ஆம் பாகத்தை ஒருவருடன் இருவராக தாங்கிப்பிடித்துக்கொண்டு நிலவின் குளிமையை எங்களுக்கு தந்து உள்ளீர்கள் - 1000 கரங்கள் கூப்பி உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் .

    ராஜேஷ் : நீங்கள் கை ராசிக்காரர் - நெய்வேலியில் ஒளிந்து இருந்த நெய் மனத்தை மீண்டும் இந்த திரியில் வரவழைத்து விட்டீர்கள் - இதற்கே ஒரு பெரிய சபாஷ் உங்களுக்கு போட வேண்டும் .

  18. Thanks kalnayak, chinnakkannan thanked for this post
    Likes gkrishna, kalnayak liked this post
Page 1 of 400 1231151101 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •