-
15th August 2014, 04:29 PM
#151
Junior Member
Platinum Hubber
Originally Posted by
gkrishna
தப்ப நினைக்க வில்லை என்றால் தொட்டு கொள்ள ஊறுகாய் எதாவது உண்டா ?
-
15th August 2014 04:29 PM
# ADS
Circuit advertisement
-
15th August 2014, 04:50 PM
#152
Senior Member
Veteran Hubber
Originally Posted by
gkrishna
'தொழிலுக்கு துரோகம் செய்ததில்லை'- பாரதிராஜாவை கதறவைத்த 'முதல் மரியாதை' அனுபவத்தைப் பகிர்ந்த இளையராஜா
"நீங்கள் ஒரு தடவை பார்த்து 'த்தூ' என்று துப்பிய படத்தை எல்லாம் நான் 4 தடவை பார்த்து பின்னணி இசை பண்ணியிருக்கேன். ஏன்னா, ஒரு நாள் பின்னணி இசை இல்லாமல், ரீ-ரிக்காடிங் பண்ணும் போது இப்படி 4 தடவை பார்ப்பேன். அப்படி என்றால் என்னைப் போல பொறுமைசாலி இந்த உலகத்தில் எவனாவது இருக்கானா.
அதுதானே உன் வேலை?. அதுக்குத்தானே கோடிக்கணக்கில் பணம்?. என்னமோ இனாமா வேலை செய்யுற மாதிரி சலிச்சுக்குறே.
உன்னைத்தவிர மற்ற இசையமைப்பாளர்கள் எல்லாம் எத்தனையோ குப்பை படங்களுக்கு நல்ல இசையத் தரவில்லையா?. அவர்களுக்கெல்லாம் பொறுமை இல்லையா?.
உன் மைனஸ் பாயிண்ட்டே உலகத்துலேயே நீதான் பெரிய கொம்பன்னு நினைச்சுக்கிறதுதான்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
15th August 2014, 05:03 PM
#153
Senior Member
Seasoned Hubber
பொங்கும் பூம்புனல் - ஜெயச்சந்திரன் வாணி ஜெயராம் ஸ்பெஷல்
ஊஞ்சலாடும் உறவுகள் ...உல்லாச நினைவுகள் ... ஸ்விங் ஸ்விங் ஸ்விங் உனது ஊஞ்சல் நான் ...
உறவுகள் சுமைகளாகுமா .. அவ்வாறென்றால் எத்தனை வகை ... சுமைகளை சுமப்பதும் இன்பமா..
இது எல்லாமே சாத்தியமே ... நீங்கள் காதலர்களாயிருந்தால்..
சொல்கிறார்கள் கேளுங்கள்...
வணக்கத்துக்குரிய காதலியே திரைப்படத்திலிருந்து..
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
15th August 2014, 05:03 PM
#154
Senior Member
Veteran Hubber
Originally Posted by
vasudevan31355
கோபால் சார், வினோத் சார்
ப்ளீஸ். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம். இங்கு வேண்டாம்.
ஐயோ வாசு சார், இப்போதுதான் நினைத்தேன். "அங்கே" நுழைய ஹைதராபாத் கேட் தடையிருப்பதால், இங்கு நமது திரியில், முரளி சாருக்கு சப்போர்ட்டாக 'போலி ஆவணம்' பற்றிய பதிவொன்றை இங்கே இடலாம் என்று நினைத்தேன். என் கைகளைக் கட்டிவிட்டீர்களே.
பரவாயில்லை.., தங்களுக்கும் தர்மசங்கடத்தை உண்டாக்க விரும்பவில்லை.
-
15th August 2014, 05:08 PM
#155
Senior Member
Seasoned Hubber
பொங்கும் பூம்புனல் - ஜெயச்சந்திரன் வாணி ஜெயராம் ஸ்பெஷல்
அங்கே ஊஞ்சல் கட்டி அழைக்கிறார்.. இங்கோ ஊஞ்சல் கட்டினால் தான் வருவேன் என்கிறார்...
அதென்ன காதலுக்கும் ஊஞ்சலுக்கும் சம்பந்தம் உள்ளதா என்ன... யாராவது சொல்லுங்களேன்..
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
15th August 2014, 05:20 PM
#156
Senior Member
Seasoned Hubber
பொங்கும் பூம்புனல்
மலர்கள் நனைகின்றன... வானின் மழையால்...
அந்த உற்சாகத்தில் பாடுகின்றன..
வசந்த காலம் மலர்கிறது...
பாடல் பிறக்கிறது..
வசந்த கால மலர்கள் காதல் ராகம் பாடுகிறது..
மாலை நேரத் தென்றலை மனம் நாடுகிறது..
காலாகாலமாய் நிலைத்து நிற்கும் படைப்பினை தரும் மனிதனுக்கு அதைப் பேணுவதற்கான குணங்களை மட்டும் இறைவன் ஏன் தரவில்லை ... இந்தக் கேள்விக்கு விடையை அந்தப் படைப்பாளியே தான் தேட வேண்டும்..
இசை என்பது தெய்வீகமானது. இறைவனுடன் நேரடி தொடர்பில் வைத்திருப்பது.. இடைவெளியில்லாமல் இருக்கும் நெருக்கம் ஆணவம் என்கிற சூறாவளி நுழையும் போது இறைவனிடமிருந்து மனிதனை மெல்ல மெல்ல விலக்குகிறது..
அப்போது அந்த இடைவெளியால் வருந்துவது அந்த படைப்பாளியா..
இல்லை இலலை..
அவனுடைய ஆன்மா.. அவனை நேசிக்கும் நெஞ்சங்கள்...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
15th August 2014, 08:32 PM
#157
Junior Member
Newbie Hubber
Originally Posted by
gkrishna
திரு கோபால் அவர்களுக்கு
இளையராஜாவின் பதிவு படித்த ஒரு தகவல்
நமது முதல் மரியாதை படம் நல்ல படம் அல்ல என்ற இளையராஜாவின் கூற்றில் எனக்கும் உடன்பாடு இல்லை
இந்த பாரதி ராஜா வைரமுத்து இளையராஜா கூட்டணி பிரிவதற்கு இது கூட காரணமாக இருந்து இருக்கலாம்
தெரியவில்லை
கிருஷ்ணாஜி,
பதிவுகளை இங்கு போடும் முன்பு ,அது இங்கு போட படும் தகுதி உள்ளதா என்று படித்து பார்த்து போடுங்கள். எல்லோருக்கும் p m அனுப்பி புண் படுத்தி விட்டேனா என்று கேட்குமுன், உங்கள் சொந்த பதிவுகளை போடுங்கள்.அல்லது ,படித்து விட்டு பிடித்தால் போடுங்கள். நானும்தான் இவற்றையெல்லாம் மற்ற சைட்டில் பார்க்கிறேன். அதே மாதிரி கம்பர் ஜெயராமன் பதிவு. சிலவற்றை நீக்கி விட்டாவது போடலாமே?
நண்பர்களின் ,உங்கள் மீதான மதிப்பு.அபாரமானது. அது குறைய நீங்களே வழி வகுத்து கொள்ளாதீர்கள்.
-
15th August 2014, 08:38 PM
#158
Senior Member
Senior Hubber
க்ருஷ்ணா ஜி.. தேன்மழை ப் பாடல்க்ள் லிங்க்கிற்கு நன்றி..அதோ அந்தபறவை போல வாழ வேண்டும் பாடல் பற்றிய ரைட் அப்பிற்கும் தான்
ராகவேந்தர் சார்.. ஸ்விங் ஸ்விங்க் உனது ஊஞ்சல் நான் பிடிக்கும்..இளமை+அழகு ஸ்ரீ தேவி..அழகாய் ராஜேந்திர குமார் மாலை மதியில்எழுதிய கதையை விஷீவலுக்காக மாற்றுகிறேன் என்று சொதப்பி இருப்பார்கள்.. எல்லா பாத்திரங்களும் கரெக்டாகவே தேர்வு செய்தவர்கள் ஏன் கதையை மாற்றிச் சொதப்பவேண்டும் என்று இன்றும் எனக்குப்புரியவில்லை..இறுதியில் ரஜினி இன்னொரு ஸ்ரீதேவி காரக்டர் – நாவலில் தனியாக இருப்பது போலக் காட்டியிருப்பார்கள்.. படத்தில் ரஜினி ஸ்ரீ விஜயகுமாரைச் சேர்த்து வைப்பது போல் மாற்றிக் கெடுத்திருப்பார்கள்..ம்ம்
அடியேனைப் பாரம்மா பிடிவாதம் ஏனம்மாவும் பிடித்த பாடல்..கேட்க மட்டும்..
-
15th August 2014, 08:50 PM
#159
Junior Member
Newbie Hubber
வசையில் முக்கிய பதிவை விட்டு விட்டீர்களே venkkiram ? 3 தான் போட்டீர்கள். மொத்தம் 4.
மற்றவர்கள் விமரிசனம் பொத்தாம் பொதுவானது. ஆனால் ,உங்களின் இளையராஜாவையும்,மற்ற இசையமைப்பாளர்களையும் ஒன்றாக வைப்பவர்களின் ரசனை கேள்விக்குரியது என்ற mud -slinging அறிவு பூர்வமானதோ?
இளைய ராஜாவை நீங்கள் வைத்திருக்கும் அதே இடத்தில் வைத்து,எல்லா உளறலையும் சகிக்க வேண்டுமா?நாங்கள் போப் ,சங்கராச்சாரி,சாய்பாபா,மற்றும் எந்த புனித பிம்பத்தையும் விடுவதில்லை. கடவுளை ஒழித்து விட்டு மனித சிலைகள் ஏன்?
உங்களை விட நான் கொடுக்கும் உயரம் அதிகம் இளையராஜாவிற்கு. ஆனால் என்னை முழுக்க எழுத விடுவார்களா பக்த கோடிகள் ?
Last edited by Gopal.s; 16th August 2014 at 07:01 AM.
-
15th August 2014, 09:04 PM
#160
Senior Member
Senior Hubber
அன்பு நண்பர்களான கோபால் ஜி, எஸ்.வி ஜி, கிருஷ்ணா ஜி மற்றும் அனைவருக்கும்... திரி ஆரம்பித்து கொஞ்ச நாட்களிலேயே திருஷ்டி வேண்டுமா ...
மனதை மயக்கும் மதுர கானங்கள் தானே .. எந்த கானம் மனதை மயக்கியதோ அதை பதிவிடலாம் தானே ..
அன்பு நடமாடும் கலைக்கூடமே ஆசை மழை மேகமே
பல விஷயங்கள் பரிமாறும் கலைக்கூடமாகவும் , எதையும் எதிரிப்பார்க்காமல் தரும் மழை மேகமாகவும் இந்த திரி இருக்க வேண்டும் என்று இந்த சிறியேனின் வேண்டுகோள்
கோபால் ஜி .. உங்களது பங்களிப்பு இத்திரிக்கு அவசியம் .. அதே போல் எஸ்.வி கொடுக்கும் படங்கள், கட்டிங் என அதுவும் அருமை .. இருவருமே அவரவர் செய்யும் விஷயங்களில் வல்லவர்களே ..
இருவருமே இத்திரிக்கு வேண்டும் .. இணைந்து இத்திரியின் வெற்றிக்கு உதவ வேண்டுகிறேன்..
நீ என்னடா சொல்வது என்று நினைக்கவேண்டாம்.. இது அடியேனின் வேண்டுகோள்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks