Page 358 of 401 FirstFirst ... 258308348356357358359360368 ... LastLast
Results 3,571 to 3,580 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #3571
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர் திலகம் தன்னுடைய தோள் பிடித்ததை நினைவுகூர்ந்து அவர் பெயரில்உள்ள இந்த விருதை பெறுவதற்கு பெருமைபடுகிறேன் என்று உரைத்த வடநாட்டு உச்ச நட்சத்திரம் திரு. ஷஹ்ரூக் கான் அவர்கள் !

    நடிகர் திலகத்தின் பெருமை நம் தமிழ்நாடு கலைஞர்களுக்கு தெரிகிறதோ இல்லையோ ஏனைய உலக கலைஞர்களுக்கு கௌரவத்தை கொடுகிறது , பெருமையையும் கொடுக்கிறது நம் நடிகர் திலகத்தின் பெயரில் அமைந்த விருது..!
    தமிழ்நாட்டை தவிர அனைவரும் நடிகர் திலகத்தை போற்றி பாராட்டி அவர் திறமையை மதித்து மரியாதை செய்து வருவது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது !


    capture.jpg

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3572
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    யப்பா... நான் வரல சாமி இந்த ஆட்டத்திற்கு.... நான் தூங்கி ரொம்ப நேரமாச்சு...
    Ha..Ha..Ha...Vasudevan Sir,

    Can you please upload that Kalaasara Scene for me ....Superb comedy sir !

  4. #3573
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழர்களுக்கு நடிகர் திலகத்தால் நினைவு படுத்தப்பட்ட பெரியவர்கள் என்ற தலைப்பில் இன்றுமுதல் தினம் ஒரு தகவலை இடுகை செய்து புதிய மற்றும் இளைய தலைமுறயினர்களுக்கு தமிழர்களுக்கு நடிகர் திலகம் ஆற்றிய தொண்டினை புரிந்துகொள்வதற்கு ஒரு அஸ்திவாரமாய் விளங்கும் என்று நினைகிறேன் :

    1952, திரை உலக சித்தர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழ் திரை உலகில் முதன்முதலில் காலடி எடுத்து வைக்கும்போதே தமிழை, தமிழ் வார்த்தைகளை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று தனது முதல் படத்திலயே அனைவருக்கும் அருமையானதொரு பாடம் நடத்திய ஆசான் !

    உரைநடை தமிழாகட்டும், இலக்கிய தமிழாகட்டும், சங்கத்தமிழாகட்டும், கொங்குதமிழாகட்டும் ...எந்த தமிழாக இருந்தாலும் அந்த தமிழை தமிழாக அழகாக உச்சரித்த ஓர் உன்னத கலைஞன் நம் நடிகர் திலகம் என்றால் அது மிகையாகாது....

    இந்த கால தலைமுறையினர் நடிகர் திலகம் வருவதற்கு முன் பழக்கத்தில் புழுகத்தில் இருந்த நடிப்பையும் தமிழை முதலில் அறிதல் வேண்டும் ..அப்போதுதான் தமிழை பிறர் பேசிய விதம் புரியும்....நடிப்பும் வசனமும் தாமரை இல்லை மேல் தண்ணீர் போல இருந்ததை உணரமுடியும்

    நடிகர் திலகம் தமிழ் திரை உலகிற்கு வருவதற்கு முன்பிருந்த தமிழ் சம்பாஷனைகள் சில துளிகள்







    Last edited by Sowrirajann Sri; 14th May 2013 at 10:50 PM.

  5. #3574
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தொடர்கிறது....

    ஒரு திரைபடத்தின் உயிர்நாடி என்றால் அது கதைக்களம்..
    உயிர்நாடி கதைக்களம் என்றால் உயிர்மூச்சு உரையாடல்கள் அதாவது வசனம் .
    மூச்சும் நாடியும் எதில் வேலை செய்யும் என்றால் உடலில் அந்த உடல் தான் நடிகன்
    ஆக, நடிகன் என்ற உடலில் உயிர்நாடியும் மூச்சும் ஒன்றோடொன்று சரிவர கலந்தால்தான் துடிப்பு என்ற நடிப்பு உருவாகும் !
    இதில் ஒன்று கூடி ஒன்று குறைந்தாலும் நடிப்பு என்ற கலை குறையுடன்தான் இருக்கும்..!

    தமிழ் மொழியின் வலிமை அதை உரைகின்ற விதத்தில் உரைத்தால் தான் உறைக்கும் !

    அதன் வலிமை, வல்லமை அப்படி...!

    உதாரணமாக : ஆஹா...என்ற இந்த ஒரு வார்த்தை சந்தோஷம், அதிர்ச்சி, வேதனை, கிண்டல், கோபம், தாபம் மற்றும் பல உணர்சிகளுக்கு பயன்படுத்தி நாம் பார்திரிகிறோம்..! ஒன்றிற்கு வேறொன்றை பேசினால் விஷயமே மாறிவிடும்...அதுதான் தமிழின் வலிமை...!

    1952 நடிகர் திலகத்தின் முதல் படம் பராசக்தி.

    அப்படி என்ன நடிகர் திலகம் பேசிவிட்டார் என்று பலர் நினைக்கலாம்...
    அப்படி நினைபவர்களுக்கு : முதல் திரைப்படம் ஒரு நடிகனின் வாழ்வில், தடங்கலுடன் தொடங்கிய படம் ...8 மாதம் படபிடிப்பு ரத்து செய்யப்பட்டு நடிகரை மாற்றவேண்டும் என்று ஜாம்பவான் ஏவிஎம் செட்டியார் அடம்பிடித்த நேரம். PA பெருமாள் என்ற பங்குதாரர் எழுத்து மூலம் கொடுத்த உத்தரவாதம் என்ன தெரியுமா..செட்டியாருக்கு ? இந்த படம் கணேசன் நடித்து வெளிவந்து நஷ்டம் ஏற்பட்டால் அதை முழுவதும் தான் ஏற்கிறேன் என்ற உத்தரவாதம் தான்.

    என்ன ஒரு நம்பிக்கை நடிகர் திலகத்தின் மேல் !

    இதில் தோல்வி அடைந்தால் ஏவிஎம் செட்டியார் அவர்கள் கூறியது சரிதான் என்ற ஏளன பேச்சு உறுதியாகிவிடும்...முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற பழமொழி உண்மையாகிவிடும். ஒரு நடிகனின் மனோபாவம் அந்த தருணத்தில் எப்படி இருக்கும் என்பதை நினைத்து சற்று பார்க்கவேண்டும்..! இந்த சூழலில் படம் முடிந்து தீபாவளி அன்று திரைக்கு வருகிறது...

    அந்த கணேசன் என்ற சிவாஜி கணேசன் தன திறமையால் தமிழ் தாயை தமிழாக ,அழகாக பேசி தமிழ் தாயின் ஆசியோடு தன் முதல் படத்திலேயே , ஒரே இரவில் உச்ச நட்சத்திர அந்தஸ்து பெற்று பல சாதனைகளை படைக்கும் கலை தாகத்தோடு செல்கிறார்.

    முதல் படத்தில் நவரச நடிப்பை இப்படி ஏதேனும் நடிகர் செய்திருப்பாரா என்று இதை பார்ப்பவர் சொல்லவேண்டும் !

    முதல் படத்தில் நடிகர் திலகத்தின் ஹாஸ்ய நடிப்பு






    கோபம் ரோஷம் ஆதங்கம் ஆக்ரோஷமாக மாறும் விந்தையுடன் கூடிய மிரட்டலான நடிப்பு




    தொடரும் ......

  6. #3575
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    தமிழர்களுக்கு நடிகர் திலகத்தால் நினைவு படுத்தப்பட்ட பெரியவர்கள்

    வரவேற்கப் படவேண்டிய விஷயம் சவுரி சார். நிச்சயம் இளையதலைமுறையினர் பயன்பெறும் வகையினில் விளங்கக் கூடிய விஷயமாய் இருக்கும். அதே போல ந.மு, ந.பி என்று பிரித்து தமிழ் சம்பாஷனைகள் வித்தியாசத்தை விஷூவல் காட்சிகளின் மூலம் விளக்கியதும் அருமை!

    தங்களைப் போல ஒவ்வொருவரும் வித்தியாசமாக இப்படி முயற்சி செய்யவேண்டும், நடிகர் திலகத்தின் புகழை மென்மேலும் உலகமறியச் செய்ய வேண்டும் என்பதே என் வேண்டுகோள். அவா.

    தங்கள் தொடருக்கு முதல் வாழ்த்து சொன்னவன் என்ற பெருமையில்

    உங்கள்
    வாசுதேவன்.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. #3576
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by Sowrirajann Sri View Post
    உதாரணமாக : ஆஹா...என்ற இந்த ஒரு வார்த்தை சந்தோஷம், அதிர்ச்சி, வேதனை, கிண்டல், கோபம், தாபம் மற்றும் பல உணர்சிகளுக்கு பயன்படுத்தி நாம் பார்திரிகிறோம்..! ஒன்றிற்கு வேறொன்றை பேசினால் விஷயமே மாறிவிடும்...அதுதான் தமிழின் வலிமை...!
    super.
    Last edited by vasudevan31355; 15th May 2013 at 05:08 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #3577
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஓவ்வொரு முறையும் முறுக்குக்கும், வடைக்கும் விற்பவன் காசு கேட்கும் போது சாப்பிடுவதை நிறுத்திவிட்டு வாய் திறக்காமல் சிரிக்கும் அந்த கேலியும் கிண்டலுமான நமட்டுச் சிரிப்பு....

    முதல் படத்திலேயே மூவாயிரம் படங்களில் நடித்த அனுபவத்தைக் காட்டியிருப்பார்.
    கோபால் உரைத்தது போல என்றும் நம்மை ஆச்சர்யப்பட வைக்கும் ஆண்டவனின் அதிசயப் படைப்பு.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #3578
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like

    NT song 1

    I am listening this song after long long time, I hope our friends like to listen this song again. This song takes me back to School days when watched this movie in Madurai Chinthamani with so much fun with fans.


  10. #3579
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like

    NT unique performance 1

    This video is for the people to talk about acting. So many actors performance done by an actor within 7 minutes. Genius NT.


  11. #3580
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Sowrirajann Sri View Post
    உயர்திரு கோபால் அவர்களுக்கு,

    என்ன உயர்திரு என்று பார்கிரீர்களா. நீங்கள் சார் போட்டதால் நான் உயர்திரு என்று எழுதினேன். உங்களுடைய மேற்கூறிய வரிகள். வம்புக்கிழுத்து தொடர் தாக்குதல் உரையாடல் - மற்றும் ஒரு வம்புக்கிழுத்து தொடர் தாக்குதல் ஆரம்பிப்பதற்கு அச்சாரமா? - I mean, on the lighter side Gopal sir..I mean...உயர்திரு கோபால் அவர்களே. !

    ஆரம்பத்தில் சிறிது உந்தப்பட்டலும் போக போக உண்மையறிந்து நானும் அதை ரசித்தேன் அதற்க்கு தக்கவாறு பதில் அளித்தேன். Nothing பர்சனல், obviously !

    உங்களுடைய மொத்த பதிப்பும் கிட்டத்தட்ட 94 பக்கங்கள் ... I have already taken the printout and stapled it to read during my train journey..! நல்ல ஒரு தொகுப்பினை எந்த தொந்தரவும் இல்லாமல் படிப்பதற்கு தக்க தருணம் Train Journey.

    சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் முத்துரதங்கள் ஊர்வலம் போகும்....ம்ம்ம்ம்ம்ம் ! தேரில் வந்த ராஜ ராஜன் என்பக்கம் பாடல் போல !
    அடப்பாவி,
    படிக்காமலேதான் Dysentery ,Diarrhea என்றெல்லாம் திட்டி கொண்டிருந்தாயா?Authenticity என்ற வார்த்தையை திரும்ப பெற்று கொள்கிறேன்.
    உன்னுடைய(நீதான் சார் வேண்டாமென்று சர் பட்டத்தை திருப்பி விட்டாயே?) பேச்சு வழக்கு அழகான ஆரம்பம் தொடரு. உன் style of nerration ரொம்ப unique . ரஹ்மான் இசையில் செய்ததை போல அழகாக meter break பண்ணுகிறாய்.
    Last edited by Gopal.s; 15th May 2013 at 07:12 AM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •