-
15th November 2013, 09:07 PM
#3961
Junior Member
Newbie Hubber
மிக்க நன்றி ராகவேந்தர் சார். என்னால் தங்கள் மனம் புண் பட்டிருந்தால் மன்னிப்பை கோருகிறேன்.இனி இணைந்து தெய்வத்தின் புகழை பாடுவோம்.
-
15th November 2013 09:07 PM
# ADS
Circuit advertisement
-
15th November 2013, 09:10 PM
#3962
Junior Member
Newbie Hubber
kiruba,
annai illam is by kamala movies santhanam.he produced annai illam,paladai,anbalippu under this banner.annai illam is a hit movie ran for 100 days. extraordinary songs,good lead pair chemistry.
-
15th November 2013, 09:15 PM
#3963
Junior Member
Seasoned Hubber
Thanks Ravi Sir for pointing out the mistake
-
15th November 2013, 09:15 PM
#3964
Junior Member
Seasoned Hubber
பார்த்ததில் பிடித்தது
அத்தியாயம் -2
கவரிமான் என்ற சீரியஸ் பதிவை அடுத்து கொஞ்சம் பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த படத்தை பற்றி எழுதலாம் என்ற பொது நிறைய படங்கள் மனதில் வந்தது , அதில் ஒரு படம் தான் 1969 ல் வந்து உள்ளதை கொள்ளை கொண்ட தங்கசுரங்கம்
இந்த படத்தை பற்றி ஏற்கனவே எழுதி உள்ளேன் , அதில் இருந்து முற்றிலும் புதிய கோணத்தில் இந்த முறை எழுதி இருக்கிறேன்
-
15th November 2013, 09:16 PM
#3965
Senior Member
Seasoned Hubber
டியர் கோபால்
என் மனம் புண் பட்டது நிஜம். அது இப்போதைக்கு ஆறாது. நடிகர் திலகத்தின் சிறப்பைக் கூறும் பதிவினை எடுத்து விட்டு இங்கே முழு மனதோடு தொடர முடியாது. அதனால் ஒரு பார்வையாளனாக தங்கள் பதிவையெல்லாம் படித்து இன்புறுவதே போதும் என்கிற முடிவில் தான் நான் இருக்கிறேன்.
தாங்கள் மன்னிப்பெல்லாம் கோர வேண்டாம். அந்த அளவிற்கு நான் பெரியவனோ அருகதை உள்ளவனோ அல்ல.
என் பதிவின் தரம் உயர்ந்த பிறகு நான் இங்கு பதிவிடுவதைப் பற்றி யோசிக்கிறேன்.
தங்கள் அன்புள்ள
ராகவேந்திரன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
15th November 2013, 09:17 PM
#3966
Junior Member
Seasoned Hubber
தங்கசுரங்கம்
1969 இந்த படம் வந்த வருடம் , இந்த வருடத்தில் நடிகர் திலகத்தின் 9 படங்கள் வெளி வந்தன ,12 மாதத்தில் 9 படங்கள் , சராசரியாக 45 நாட்களுக்கு 1 படம் என்ற விதம் ரிலீஸ் செய்யப்பட்டது . பிற நடிகர்களின் நல்ல படங்கள் போக , நடிகர் திலகத்துக்கு , அவர் படங்களே போட்டி . (பல தடவை இப்படி தான் )
ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு genre , கிராமிய கதை , நகைச்சுவை , குடும்ப பின்னணியில் ஒரு படம் , ரீமேக் படம் , நடிப்புக்கு அதிக முக்கியத்துவம் உள்ள படம் என்று ரசிகர்களுக்கு விருந்து வைத்தார் நடிகர் திலகம் , 1972 வந்த படங்கள் உடன் இதை ஒப்பிட முடியாது என்றாலும் இந்த வருடமும் நடிகர்திலகத்துக்கு நல்ல படங்கள் வந்தன
James Bond என்ற சொல் ஹாலிவுட் யை கலக்கி கொண்டு இருந்தது , எங்கே பார்த்தாலும் Sean Corney , Roger Moore என்ற பெயர் தான் ,
இங்கே நம் தென்னிந்திய James Bond ஜெய்ஷங்கர் கலக்கி கொண்டு இருந்தார் , ஆந்திரா வில் கிருஷ்ணா James Bond பாத்திரத்தில் பிச்சு உதறினார் .
அதே போன்ற துப்பறியும் கதையில் இரு திலகங்களும் நடித்து கொண்டு இருந்தார்கள்
ஒரு ஒற்றுமை இரண்டுக்கும் ஒரே நபர் தான் கதை , வசனம் -
G . பாலசுப்ரமணியம் B .A .
இப்படி ஏக பட்ட எதிர்பார்ப்புகள் உடன் வந்த படம் தான் தங்கசுரங்கம்
படம் ஆரம்பித்த உடன்
பர்மா யுத்தத்தினால் மக்கள் நாட்டை விட்டு வெளி ஏறுகிறார்கள் , கப்பலில் இடம் இல்லாத காரணத்தினால், G . வரலக்ஷ்மி தன் குழந்தையை ஒரு கிறிஸ்துவ பாதிரியார்யிடம் கொடுத்து வளர்க சொல்லுகிறார் , அந்த குழந்தையின் பெயர் ராஜன் என்று சொல்லுகிறார் .
வருடங்கள் உருண்டு ஓடி காமாட்சி (G . வரலக்ஷ்மி) கிறிஸ்துவ பாதிரியார் யை ( சீதாராமன்) தற்சையலாக சந்திக்கிறார் , அவர் மூலம் தன் மகன் படித்து , போலீஸ் அதிகாரியாக இருப்பதை அறிகிறார்
ராஜன் (சிவாஜி) ஸ்காட்லாந்தில் பயிற்சி முடிந்து திரும்புகிறார் , அறிமுக காட்சியே அமர்க்களம் தான் விமானத்தில் இருந்து அழகாக (ப்ளூ& கிரே கலர் கலந்த கோட் , சூட் , ரெட் ஷர்ட் & tie )
இறங்குவார் , கை கொடுப்பதில் ஒரு மிடுக்கு இருக்கும் இரும்பு கரம் , சிபிஐ officer என்றல் சும்மாவா
அடுத்த காட்சி சிபிஐ அலுவலகம் , அங்கே அனைவரும் அவரை பார்த்து விஷ் செய்ய நம்மவர் ராஜகம்பீரமாக (வெள்ளை சட்டை & கருப்பு பண்ட ) நடந்து , சிபிஐ டைரக்டர் மேஜர் யை சந்திப்பார் ,மேஜர் ராஜனிடம் அடுத்த வழக்கை பற்றி விவரிக்க,பார்வையாளர்களுக்கு அது ஈர்க்கும் விதத்தில் இருக்கும் ஏனென்றால் அது நாம் அன்றாடம் அணியும் போலி தங்கத்தை பற்றி ஒரு வழக்கு
ஆம் நாட்டில் உள்ள போலி தங்கத்தின் மூலத்தை கண்டு பிடிக்கும் பொறுப்பு ராஜன்க்கு , சில ஆதாரங்கள் சேகரிக்க 10 நாட்கள் ஆகும் என்பதால் ராஜன் தன் கிராமத்துக்கு செல்கிறார்
அப்போ அவர் படும் பாடல்
அதில் அவர் உடை வெள்ளை pant , சந்தன கலர் t ஷர்ட் , வெள்ளை தொப்பி , வெள்ளை brief case , மற்றும் stick , வெள்ளை ஷு
ஒரு அதிகாரி எப்போதும் formals தான் உடுத்துவார் இது போன்ற holiday சமயத்தில் தான் இந்த மாதிரி casuals போடுவார் இந்த மாதிரி commercial படங்களில் கூட ஒரு ரியலிசம் கொண்டு வந்து விடுவார் நடிகர் திலகம் & ராமண்ணா கூட்டணி ,
அடுத்த காட்சியில் ராஜன் தன் தாயாரை காணும் காட்சி ,
தன்னை வளர்த்த பாதிரியார் இது தான் உன் தாய் என்று சொல்லும் பொது அவரின் கையை பிடித்து அதை உள்வாங்குவதும் கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்து ஒரு மகன் தன் தாயாய் காணும் பொது இப்படி ரியாக்ட் செய்வார் ஒரு அதிர்ச்சி கலந்த ஆனந்தத்தை வெளி படுதுவானோ அப்படி வெளி படுத்துவார் , அந்த கண்ணீர் விடுவதும் , பால் அருந்துவதும் (black சூட் & white ஷர்ட்) இரவில் தன் தாயிடம் பேசி கொண்டே உறங்க மறுப்பதும் இந்த காட்சி பாசத்துக்கு ஒரு எடுத்துகாட்டு
இந்த காட்சி இப்படி முடிந்தது என்றால் அடுத்த காட்சியில் வில்லனின் கூடாரத்தில் விரிகிறது
அங்கே விஞ்ஞானி சுப்பையாவை வில்லன் Pai போலி தங்கம் செய்ய வற்புறுத்துகிறார்(குரல் மட்டுமே கேட்கிறது ) விஞ்ஞானி தங்கம் செய்ய மறுக்கிறார் , வில்லனின் கையாள் வேலையுததம் (மனோகர் ) தங்கம் செய்யும் சூத்திரத்தை கேட்கிறார் , அதற்கும் மறுக்கிறார் விஞ்ஞானி
வில்லனின் கூடாரம் அரங்கம் டாப் கிளாஸ் அமைப்பு , வில்லனின் ஆட்களுக்கு சீருடை கூட நல்ல கலர் combination , மனோகர் உடை மட்டும் என்னவாம் , கிரீம் கலர் கோட் , பிரெஞ்சு தாடி , கருப்பு கண்ணாடி என்று ஜோராக இருக்கிறார்
அடுத்த காட்சியில் ராஜன் குளிக்க செல்லும் பொது அங்கே மல்லிகா (நிர்மலா) என்ற பெண்ணை சந்திக்கிறார்
நடிகர் திலகம் அந்த வெள்ளை பைஜாமா , குர்தாவில் மன்மதன் தான்
தன் மகன் கிடைத்த மகிழ்ச்சியான தருணத்தில் காமாட்சி தெய்வத்துக்கு பொங்கல் வைக்கிறார் , அந்த தருணத்தில் ராஜனை கொள்ள முயற்சி நடக்கிறது , மல்லிக அவர் உயிரை காப்பாற்ற காமட்சி தன் மகனுக்கு மல்லிகைவை பெண் கேட்கிறார் (நாகேஷிடம்)
-
15th November 2013, 09:17 PM
#3967
Junior Member
Seasoned Hubber
அடுத்த காட்சி சிபிஐ ஆபீசில்
போலி தங்கம் செய்யும் கூட்டத்தின் ஆட்கள் பற்றி ராஜனுக்கு தெரிவிக்கிறார் சிபிஐ டைரக்டர் மேஜர்
அவர்களில் அரசாங்க டாக்டரிடம் இருந்து முதலில் விசாரணையை தொடங்குகிறார் ராஜன்
டாக்டர் ஒத்துழைக்க மறுக்கிறார்
ராஜன் தன் பாணியில் எச்சரிக்கை செய்கிறார்
அந்த காட்சியில் அவர் அணிந்து உள்ள இறுக்கமான உடையும் (blue& blue ) அவர் ராஜன் சிபிஐ என்று சொல்லும் விதமும் , அவர் எச்சரிக்கை செய்யும் தோரணையும் ஸ்டைல் ,ஒரு பஞ்ச் டயலாக் இல்லை , கோபம் இல்லை ஆனாலும் message conveyed
விஞ்ஞானி சிகிச்சை எடுத்து கொள்ள மறுக்கவே , டாக்டர் மனம் திருந்தி ராஜனிடம் உண்மையை சொல்ல நினைக்கிறார்
உண்மையை சொல்ல முற்படும் பொது ராஜன் கண் முன்னே race course ல் இறந்து விடுகிறார் , சரியாக சொன்னால் கொலை செய்ய படுகிறார்
அங்கே வேலாயுதம் ஒரு பெண்ண உடன் பேசி கொண்டு இருப்பதை பார்க்கும் ராஜன் அந்த பெண்ணை பின் தொடர்கிறார்
ஹோட்டல் அறையில் அந்த பெண்ணை விசாரிக்கிறார் , அடடா அதில் தான் என்ன வார்த்தை ஜாலங்கள் ,அதில் பாரத்தின் உடை கொஞ்சம் glamour தான் இருந்தாலும் அதில் ஒரு decency , நம்மவர்க்கு , கொஞ்சம் காக்கி கலர் ஷர்ட் ,உள்ளே ரெட் கலர் ரவுண்டு நெக் த ஷர்ட் அதில் சலக் அவரின் வயதை நன்றாக குறைத்து காட்டுகிறது ,
விசாரணையில் போதிய ஒத்துழைப்பு கொடுக்க மறுக்கும் பொது ரொம்ப கூலாக பேசிக்கொண்டே gloves அணிந்து கொண்டு , பாரதியை manhandle (கையை முறிப்பர்) செய்வார். வேறு ஒரு நடிகராக இருந்தால் இதை செய்வாரா என்பது சந்தேகமே , நம்மவர்தான் இமேஜ் என்ற வட்டத்தில் சிக்காதவர் ஆயிற்றே .
பின் பாரதியுடன் பேசி கொண்டே பின் பக்கமாக நண்டந்து சண்டை போடுவார் பாருங்கள் , மின்னல் அடி தான்
இதோ வீடியோ இணைப்பு
(Video Courtesy : Vasudevan Sir)
முடிவில் தலைவர் ரஜினி ஸ்டைல் வேறு , பிச்சு உதறி இருப்பார்
Last edited by ragulram11; 15th November 2013 at 09:21 PM.
-
15th November 2013, 09:19 PM
#3968
Junior Member
Seasoned Hubber
அடுத்த காட்சியில் ராஜன் அமுதாவை (பாரதி) சிபிஐ அலுவகத்தில் ஒப்படைப்பார் , அங்கே அடுத்த கட்ட விசாரணைக்காக அமுதாவை பெங்களூர் அழைத்து செல்ல முடிவு எடுக்க படுகிறது .
ராஜன் மீது அமுதா கோபத்தை காடும் பொது , ராஜன் அமைதியாக கையை பின்னாடி கட்டி கொண்டு இருபது , அவர் சென்ற உடன் தன் உயரதிகாரியுடன் பேசுவதுக்கும் நல்ல வித்யாசம் தெரியும் .
பெங்களூர் செல்லும் வழியில் ஆபத்து வருகிறது , அதில் இருந்து தப்பிக்க ராஜன் கையாளும் தந்திரம் (மூச்சை பிடித்து கொள்வது , காரை வேகமாக ஓட்டும் லாவகம் என்று என்னை போன்ற action ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கிறார் ) அதில் அவர் அணியும் வெள்ளை T - ஷர்ட் இன்னும் என் கண் முன்னே இருக்கிறது
அன்று இரவை அமுத தப்பிக்க நினைத்து சேற்றில் விழிந்து விடுகிறார்
அவரை டீஸ் செய்யும் பாடல்
பெங்களூர் ஹோட்டலுக்கு போகும் வழியில் ராஜன் மல்லிகாவை சந்திக்கிறார் , அமுதாவும் மல்லிகாவும் ஹோட்டல் அறையில் சண்டை இடுகிறார்கள் , ராஜன் அமுதாவை மல்லிகாவின் பாதுகாப்பில் வைத்து விட்டு வெளியே சென்று விட்டு பார்க்கும் பொது , மல்லிகாவை கட்டிவைத்து விட்டு அமுதா தப்பித்து சென்ற விஷயம் தெரிந்து , அந்த கடிதத்தில் இருக்கும் விலாசத்துக்கு செல்லுகிறார்
ராஜன் இன்ப நிலையத்துக்கு negro வேடத்தில் செல்லுகிறார் , அங்கே அவர் Pai யை சந்திக்கிறார் (அந்த காட்சியில் நடிகர் திலகத்தின் உடை , ஒப்பனை , நல்ல பொருத்தம் ), அங்கே எல்லா நாட்டில் இருந்தும் வந்த smugglers யை சந்திக்கிறார் (அந்த காட்சியில் மனோகர் அவர்களை அறிமுகம் படுத்தும் விதம் , nadigar திலகம் 360 டிகிரியில் தலையை அசைப்பதும் டாப் )
ராஜன் அங்கே மணி (நாகேஷ் ) மற்றும் மல்லிகாவை காணுகிறார்
அங்கே தான் தெரியவருகிறது மல்லிகாவின் பெயர் லைலா என்று , மணி அவர் அண்ணன் இல்லை என்பதும் (முதல் ட்விஸ்ட் )
அதற்கு அப்புறம் வரும் musical பிட் நல்ல தரம் (TK ராமமூர்த்தி என்றால் சும்மாவா)
ராஜன் Pai யின் பேரத்துக்கு உடன் படாதால் Pai ராஜனின் கையை எலெக்ட்ரிக் shocker மூலம் பொசிகி விடுகிறார்
அங்கே ராஜன் அந்த விஞ்ஞானி மற்றும் அவர் மகள் அமுதாவை காணுகிறார் ,
மணியின் உதவியால் ராஜன் அந்த விஞ்ஞானி மற்றும் அவர் மகள் இருவரையும் மீட்டு விடுகிறார்
மீண்டும் ஒரு நல்ல சண்டை
-
15th November 2013, 09:20 PM
#3969
Junior Member
Seasoned Hubber
விஞ்ஞானி ஆஸ்பத்திரியில் சேர்க்க படுகிறார் , அமுதாவை வீட்டுக்கு அழைத்து வருகிறார் ராஜன் ,
ராஜன் தன் அம்மாவிடம் நடந்ததை விவரிக்கிறார் (நாகேஷிடம் அவர் விசாரிக்கும் காட்சி நல்ல சிரிப்பு , அதுவும் கட்டபொம்மன் பற்றி நாகேஷ் சொன்ன உடன் நடிகர் திலகத்தின் பதில் )
இந்த இடத்தில மீண்டும் ஒரு பாடல்
ஆஸ்பத்திரில் இருக்கும் விஞ்ஞானி Pai ஆட்களால் கடத்த படுகிறார்
ராஜனின் வீட்டுக்கு Pai வந்து ராஜனின் தாயாரை அதிர்ச்சி அடைய வைக்கிறார் , ஆம் ராஜனின் தந்தை தான் கனகசபை (எ) PAI (பொதுவாக ராமண்ணா வின் படங்களில் வில்லனின் பெயர்கள் வட இந்திய பெயராக தான் இருக்கும்)
விஞ்ஞானி ஒரு சீனா மருத்துவர் மூலம் ஒரு மூளையை மயக்கும் ஊசியை செலுத்தி , தங்கம் செய்ய வைக்கிறார் PAI
ராஜன் PAI யின் கூட்டத்தில் இருக்கும் ஒரு பெண்ணை ஏமாத்தி PAI வெளியே வரும் தேதி , இடம் , வாகனம் அனைத்தையும் தெரிந்துகொண்டு, அவரை பிடிக்க செல்லும் விஷியத்தை தன் தாயிடம் சொல்லிவிடுகிறார்
அவர் அதை தன் கணவரிடம் சொல்லி விடுகிறார்
ராஜன் PAI யை பிடிக்க சென்று ஏமாறுகிறார் (அந்த காட்சியில் அவர் உபயோக படுத்தும் துப்பாக்கி என்னை கவர்ந்தது , அவர் துப்பாக்கி உபயோகபடுத்தும் காட்சியை மட்டும் close up ல் காட்டி இருப்பார்கள் , அந்த காட்சி மட்டும் தனியாக தெரியும் , ரிமோட் control ஜீப் புது யுக்தி )
PAI யை பிடிக்கும் திட்டம் தோல்வி அடைந்ததால் மேஜர் , சிவாஜி இருவரும் யார் மூலம் இந்த விஷயம் தெரிந்து இருக்கும் என்பதை ஆராய்கிறார்கள் , ராஜன் தன் தாயை தான் அது என்று யூகித்து காட்டும் முகபாவனை , மெல்லவும் முடியாமல் , முழுங்கவும் முடியாமல் செல்லுவதும்
வீட்டுக்கு வந்த உடன் தன் தாய்யை முறைத்து பார்ப்பதும் , ராஜனின் தாய் அவர் பார்வையை பார்க்க முடியாமல் தவிப்பதும் , அவர் தன் உண்மையை சொன்னார் அன்று சொல்லி விடுகிறார்
(அந்த காட்சியில் இரண்டு stalwarts பிச்சு உதறிருப்பர்கள் )
மீண்டும் ஆபீஸ் செல்லும் ராஜன் தன் தாயாரை கைது செய்ய உத்தரவு கேட்கிறார் , அந்த காட்சியில் அவர் உடைந்து அழ வருவதும் , பின் தன்னை கம்போஸ் செய்து கொண்டு , பின் மீண்டும் ஆத்திர படும் பொது கை நடுங்கும் பாங்கு , PAI தன் அம்மாவின் கணவர் என்று சொல்லுவதும் கடமை மிக்க அதிகாரியாக காட்சியளிக்கிறார்
ராஜன் மீண்டும் மணியின் உதவி உடன் அந்த கூட்டத்தை பற்றி அறிந்து கொண்டு , ஒரு ஹோட்டலுக்கு செல்லுகிறார்கள் .
அங்கே அனைவரும் முகமூடி அணிந்து கொண்டு இருக்கிறார்கள் , அங்கே மீண்டும் ஒரு மியூசிக் பிட் அது முடிந்த உடன் சண்டை (நம்மவர் வெள்ளை சூட்டில்அதில் blue border உடன் கம்பீரமாக சண்டை போடுகிறார் )
அமுதாவுக்கும் மூளைசலவை ஊசியை செலுத்தி ராஜனை ஒரு இடத்துக்கு வர சொல்லுகிறார்கள்
அங்கே ஒரு பாடல்
ராஜன் இதை முறியடித்து , தந்திரமாக எதிரி இருக்கும் இடத்தை போலீஸ் control ரூமுக்கு தெரிவிக்கிறார்
PAI வெளிநாட்டுக்கு தப்பிக்க முயற்சி செய்கிறார் , ராஜன் , அமுதாவை கொலை செய்ய பாம் வைத்து விட்டு சென்று விடுகிறார்
ராஜன் அதில் இருந்து தப்பி , துறைமுகத்தில் கடத்தல் பொருட்களை மீட்டெடுக்க , PAI ,சர்ச்சில் பதுங்கிருபது அறிந்து ராஜன் நிரயுதபானியாக செல்லுகிறார்
PAI முதலில் ராஜனை சுடுகிறார் , பின் மனம் திருந்தி சரண் அடைகிறார்
(என்னை பொறுத்த வரை climax was a total let down )
முடிவில் ராஜன் அரசாங்கத்தினால் கௌரவிக்க படுகிறார் (அந்த நேரு டிரஸ் black & white ஒரு மிடுக்கு தான் நடிகர் திலகத்துக்கு )
இந்த படத்தில் நடிகர் திலகத்தின் உடை அலங்கார நிபுணரின் பெயர் ராமகிருஷ்ணன் .
மொத்தத்தில் இந்த தங்கசுரசுரனத்தை இன்றும் பார்க்கலாம்
-
15th November 2013, 09:37 PM
#3970
Junior Member
Seasoned Hubber
கோபால் சார் - இப்பொழுதுதான் உங்கள் 'தேவர் மகன்" பதிவை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது - எவ்வளவு அருமையாக அலசி உள்ளீர்கள் - எவ்வளவு உழைப்பு இந்த பதிவில் சென்றிருக்கும் என்று நினைக்கும் போது மலைப்பாக உள்ளது - உங்களை டாக்டர் என்று சொன்னால் அது மிகை ஆகாது . நீங்கள் மட்டும் உங்கள் கோபத்தை விட்டு விட்டால், சுடும் வார்த்தைகளை தவிர்த்து விட்டால் NT க்கு ஆஸ்கார் கிடைத்தால் எப்படி சந்தோஷ படுவோமோ அப்படி எல்லோரும் சந்தோஷ படுவோம் - அல்லாவின் பெயரை சொல்லி , நல்லோர்கள் வாழ்வை எண்ணி எல்லோரும் கொண்டாடுவோம்!
Ravi
Bookmarks