Page 184 of 401 FirstFirst ... 84134174182183184185186194234284 ... LastLast
Results 1,831 to 1,840 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #1831
    Junior Member Junior Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    6
    Post Thanks / Like

    Thumbs up Waste

    Nadigar thilagam sivaji ganesan acting is waste.not worth watching.all his digital re-releases are utter flop.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1832
    Senior Member Devoted Hubber abkhlabhi's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    Bangalore
    Posts
    400
    Post Thanks / Like
    Quote Originally Posted by shilpa View Post
    Nadigar thilagam sivaji ganesan acting is waste.not worth watching.all his digital re-releases are utter flop.

    வேஸ்ட் என்றால் , ஏன் பார்க்கவேண்டும் ? உங்களை யாரும் கையை காளை கட்டி போட்டு பார்க்க சொல்லவில்லையே ? பாராட்ட மனம் இல்லையென்றாலும் , இழிவாக எழுதவேண்டாமே. குட்டையை குழப்ப வேண்டாம்.

    இவர்களுக்கு எல்லாம் பதில் எழுதி நம்மை நாமே கேவலபடுத்தி கொள்ளவேண்டாம்
    Last edited by abkhlabhi; 21st February 2013 at 02:02 PM.

  4. #1833
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Quote Originally Posted by shilpa View Post
    Nadigar thilagam sivaji ganesan acting is waste.not worth watching.all his digital re-releases are utter flop.
    இதை அப்படியே தஞ்சாவூர் கல்வெட்டில் பொறித்து கூட இருந்து அழியாமல் பார்த்துக்கணும்.
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  5. #1834
    Senior Member Diamond Hubber groucho070's Avatar
    Join Date
    Jun 2006
    Location
    Malaysia
    Posts
    5,390
    Post Thanks / Like
    Joe you sarcastic brother you!!!!
    " நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.

  6. #1835
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அஞ்சல் பெட்டி 520





    ஸ்ஸ்....யப்பா... வெயில் ஆரம்பிச்சுடுச்சா... தாங்க முடியல்ல... கொஞ்சம் தண்ணி குடு....

    என்னடா ஒரே டயர்டா வர்ற?

    இல்லப்பா...ஆபீஸ்ல ஒரே வேலை. இந்த ஜெனரல் மானேஜேர் ரொம்பத்தான் வேலை வாங்குறாரு...

    பொழப்பாச்சேப்பா... பொறுத்துத்தான் ஆகணும்...

    அது சரி! உனக்கென்னப்பா ... ஜாலி கேஸ். சினிமா, டிராமான்னு உம்பொழுது ஓடுது... வாத்தியார் வேலை... ஸ்கூல் விட்டா உனக்கு வேற வேலைவெட்டி இல்ல... என்னை மாதிரியா? பிரமோஷனும் கெடைக்க மாட்டேங்குது....ம்...நானும் மாஞ்சி மாஞ்சிதான் வேலை செய்யுறேன்...எப்பதான் கெடைக்குமோ?...

    என்னடா!... அஞ்சல் பெட்டி 520 படத்தில சிவாஜி அலுத்துக்குற மாதிரி அலுத்துக்குற?

    அதானே பார்த்தேன்... என்னடா இன்னும் எலி எட்டு முழ வேட்டி கட்டலேயேன்னு? சிவாஜியைப் பத்தி பேசலைன்னா உனக்கு தூக்கம் வராதே!

    என்னடா பண்றது?...ரத்தத்தில ஊறிப் போச்சே! டெய்லி அவரு படம் பாக்கலேன்னா எனக்குத் தூக்கம் வராதே!

    சரி! சரி! என்னவோ அஞ்சல் பெட்டி 520... அது இதுன்னு சொன்னியே...சிவாஜி நடிச்ச படம்தானே அது? லேசா ஞாபகம் இருக்கு...

    ஆமாம்... ஆமாம்... நேத்து மறுபடியும் ஒருதடவ DVD யில போட்டுப் பார்த்தேன்...சிரிச்சு சிரிச்சு வயிறே புண்ணாப் போச்சு...

    அப்படியா... வழக்கமா சிவாஜியோட படம் சோகமாத்தானே இருக்கும்?... நீ என்னவோ புதுசா சொல்ற!...

    ரொம்பப் பேரு அப்படிதான் நெனச்சுகிட்டு இருக்கீங்க... அப்படியெல்லாம் இல்ல... நல்ல காமெடிப் படங்கள்லயும் அவர் நடிச்சிருக்கார்.

    எனக்குத் தெரிஞ்சு ஒன்னு ரெண்டு படம் அப்படி இருந்திருக்கு... ம்... கலாட்டா கல்யாணம் மட்டும் பார்த்திருக்கேன். செம காமெடி... வேற என்னென்ன சிவாஜி படம் காமெடியா இருக்கும்?

    மடையா... பலே பாண்டியாவை மறந்துட்டியே?

    அட... ஆமாமில்ல...சூப்பராசே அது...அப்புறம்?

    கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, ராஜா ராணி, கோட்டீஸ்வரன், சபாஷ் மீனா, மூன்று தெய்வங்கள், சுமதி என் சுந்தரி, அன்பே ஆருயிரே, எமனுக்கு எமன்...இப்படி நிறைய இருக்கு.... அதுல ஒண்ணுதான் அஞ்சல் பெட்டி 520..

    சரி! டிவிடி கொடு... நைட்டு வீட்டுல பார்த்துட்டு நாளைக்கு கொடுத்திடறேன்.

    ஃப்ரீயாக் கொடுத்தா ஃபெனாயிலக் கூட குடிச்சிடுவியே! ஓசி கிராக்கி...

    கிண்டலடிக்காதே! உங்க ஆளு படம்ப்பா...பார்த்தா உனக்குத்தானே பெருமை!

    இப்படியே பேசிக் கவுத்துடு... இப்படி ஓசியிலே வாங்கிப் பார்த்தா DVD எப்படி சேல்ஸ் ஆகும்?... இன்னைக்குத் தரேன்... இனிமேலாவது காசு கொடுத்து வாங்கிப் பாரு....

    (அடுத்த நாள் மாலை)

    வாடா... வாடா...என்ன ஆச்சர்யமா இருக்கு!...எப்பவும் மூஞ்ச தொங்கப் போட்டுகிட்டு வருவே! இன்னைக்கு வாயெல்லாம் பல்லா இருக்கு!...

    பின்ன என்னப்பா... நீ பாட்டுக்கு அஞ்சல் பெட்டி 520 DVD யைக் கொடுத்து பாக்கச் சொல்லிட்டே...

    (இடைமறித்து)

    எலேய்... நீ DVD ஐ வாங்கிட்டுப் போயிட்டு நான் கொடுத்தேன்னு சொல்லுற....

    சரி... சரி.. விடு... அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.. நைட்டு போட்டுப் பார்த்தேனா...வயிறு புண்ணாப் போச்சுப்பா...சிரிப்பை இன்னும் அடக்க முடியல்ல..
    ஆபீஸ்ல வேலை செய்யும் போது கூட உங்க ஆளு, நாகேஷ், தேங்காய் அடிக்கிற கூத்தை நெனச்சு நெனச்சு ...யப்பா... முடியல்ல...வயிறு நோகுது...

    இப்ப என்ன சொல்ற... எங்க ஆளு காமெடியைப் பத்தி?

    கேக்கணுமா! அவரு ஒரு மகா மெகா நடிகருப்பா... நீயெல்லாம் அவரு மேல ஏன் பைத்தியமா இருக்கேன்னு இப்பத்தான் புரியுது... மனுஷன் காமெடியில கலக்குறார்...

    என்னைக்குமே எங்க ஆளுக்கு எங்க அத்தனை பேரு காலரையும் தூக்கி விட்டுக் கொள்ளச் செய்துதான் பழக்கம்... சரி படத்து கதை பிடிச்சிருக்கா?....

    வித்தியாசமான கதைதாம்பா.. மேஜரோட கம்பெனியில பொறுப்பான பதவியிலே வேலை செய்யிறாரு உங்க ஆளு... போஸ்ட் ஆபீஸ்ல வேலை செய்யிற சரோஜாதேவியோட லவ் வேற...மேஜர் ஆபீசுல வேலை செய்யிற ஜெனெரல் மேனஜர் திடீர்னு இறந்து போயிட்றதுனாலே அந்த GM போஸ்ட்ட மேஜர் தனக்குத் தான் தருவாருன்னு அபார நம்பிக்கை வச்சிருக்கார் சிவாஜி... மேஜரும் அந்தப் பதவி சிவாஜிக்குன்னுதான் தீர்மானம் பண்ணி வைக்கிறாரு... ஹீரோயினோட அப்பா தங்கவேலு ஒரு பணப் பைத்தியம்... தன் மகள் சிவாஜியைக் காதலிப்பதை முதல்ல ஒத்துக்குற அவர் சிவாஜியை விட அதிக சம்பளம் வாங்குற தன்னுடைய மருமகனான வில்லன் நம்பியாருக்கு சரோஜாதேவியை கல்யாணம் பண்ணிக் கொடுக்க மனசு மாறிடறாரு .... ஏன்னா சிவாஜியை விட நம்பியார் அதிக சம்பளம் வாங்குறாருன்னு. சிவாஜிக்கோ பிரமோஷன் கெடைச்சா நம்பியாரை விட கூட சம்பளம் கெடைக்கும்.. சிவாஜி ஆவலா காத்திருக்க அவரு எதிர்பார்த்த GM பதவி திடீர்னு அவருக்கு கெடைக்காம போயிடுது... ஏன் கிடைக்கலேன்னு
    காரணமும் தெரியல்ல அவருக்கு...

    ஆனா நடந்த விஷயமே வேற... தனக்கு வர வேண்டிய ஒரு கடன் பாக்கிக்காக மேஜர் GM பதவியை தன் கம்பெனியில வேலை செய்யிற ராமாதாசுக்கு தர்றதா ஒரு பொய்யச் சொல்லி, நைஸா டிரிக் பண்ணி, ராமதாஸ் அப்பாவிடம் தனக்கு வர வேண்டிய கடனை வசூல் செஞ்சிக்கிட்டு அப்புறமா GM பதவி ராமதாசுக்கு இல்ல... சிவாஜிக்குதான்னு சொல்லி கையை விரிச்சுடராரு

    இது தெரியாத சிவாஜிக்கு மேஜர் மேல செம கோபம் வந்துடுது. மேஜர் இப்படி தன்னை பழிவாங்கிட்டாரேன்னு பயங்கரமா ஃபீல் பண்றாரு சிவாஜி... அவரு கோவத்துக்கு தூபம் போட்டு அவரை மேலும் உசுப்பேத்தி விட்டுடுறாங்க அவரு சிநேகிதங்க நாகேஷும், தேங்காய் சீனிவாசனும். திடுதிப்புன்னு கோபத்துல மேஜரை நல்லா கன்னா பின்னான்னு வசவு பாடி ஒரு லெட்டரை எழுதி அதை மேஜருக்கு போஸ்ட் வேறு பண்ணித் தொலைச்சிடறாங்க.... லெட்டரப் போஸ்ட் பண்ணிட்டு வீட்டுக்கு வந்து பார்த்தா மேஜர் சிவாஜியை GM போஸ்ட்டை ஏத்துக்கச் சொல்லி தந்தி அனுப்பிச்சிருக்காரு...

    எலேய்! என்கிட்டியே கதை உடுறியா?

    அட இருப்பா... இன்ட்ரெஸ்டா கதை சொல்லிக்கிட்டு இருக்கேன் குறுக்க நீ வேற?.... இம்...எங்க விட்டேன்?... சிவாஜியை GM போஸ்ட்டை ஏத்துக்கச் சொல்லி தந்தி அனுப்பிச்சிருக்காரு மேஜரு . எப்படி இருக்கும் சிவாஜிக்கு! சும்மா பேயறஞ்சா மாதிரி ஆயிடுறாரு.. அப்பத்தான் அந்த ஐடியாவை சிவாஜிக்கு கொடுக்கிறாரு நாகேஷ்.. எப்படியாவது அந்த லெட்டரை மேஜர் கையில் கிடைக்காம செஞ்சுட்டா!? ...

    அப்புறமென்ன... ஜிவ்வுன்னு சும்மா ராக்கெட் மாதிரி போகுது கதை... அந்த லெட்டரை எப்படியாவது கைப்பற்றனமுன்னு சிவாஜி குரூப் பல முயற்சிகள் செய்யுது.... ஆனா எல்லாத்துலேயும் தோல்விதான் கிடைக்குது... ஆனா நம்ம வயிற்றை புண்ணாக்குறதுல இந்த டீம் முழு வெற்றி அடையுது...

    கடைசியில லெட்டர் மேஜர் கையிலேயும் கிடச்சுடுது....என்ன ஆகப் போகுதோ என்று நெஞ்சு திகில் படம் பார்ப்பதைப் போல டக்கு டக்குன்னு அடிச்சிக்க...
    கடைசியில பார்த்தா.. அந்த லெட்டர்ல மேஜரை திட்டி எதுவுமே இல்ல... என்னடா இதுன்னு சிவாஜி முழிக்க லெட்டரை எழுதின தேங்காய் சிவாஜி, நாகேஷுக்குத் தெரியாமல் அந்த லெட்டரை மேஜரைத் திட்டாமல் நல்லவிதமாகவே மரியாதையுடன் எழுதி இருப்பது தெரிய வருகிறது. இறுதியில் எல்லாம் சுபமங்களமாக முடிய ஹீரோயினைக் கரம் பிடிக்கிறார் உங்க ஹீரோ...

    சரிடா!... சரிடா!... நீ படம் பார்த்துட்டேன்னு ஒத்துக்கிறேன். கதையில ஒரு சிலதை விட்டுட்டியே!

    ஒ.... வில்லன் நம்பியார் கதையை விட்டதை சொல்றியா... அது ஒண்ணும் அவ்வளவு பிரமாதம் இல்ல .. விறுவிறுப்பு மசாலாவுக்காக நம்பியார் போலி பால் பவுடர் டின் தயாரிக்கும் வில்லனா வந்து, காதலிலும், தொழிலிலும் சிவாஜிக்குப் போட்டியா வந்து, தொல்லைகள் கொடுத்து வில்லத்தனங்கள் செய்து இறுதியில் சிவாஜியிடம் "டிஷ்யூம்... டிஷ்யூம்" வாங்கி கைதாகிறார். அவ்வளவே.

    பரவாயில்லடா.. நீ கூட சுருக்கமா கதை சொல்லக் கத்துகிட்டியே!

    பின்னே... நீ கூட நெட்டுல உங்க ஹப்போ திரியோ என்னவோ காட்டுவியே... அதுல வாசுதேவன்னு ஒருத்தர் சிவாஜியைப் பத்தி எழுதுவாருன்னு சொல்லுவியே அவுரு மாதிரி விலாவாரியா சொல்ல எனக்குத் தெரியாதுப்பா... ஏதோ எனக்கு தெரிஞ்சதை சொன்னேன்...

    எலேய்! என்ன நக்கலா?... சரி எங்க ஆளு நடிப்பு எப்படி?

    பைத்தியம்... கரும்பு இனிக்குமான்னு கேக்குற....கிளப்புறாருய்யா காமெடியில உங்க ஆளு... சும்மா மன்மதன் கணக்கா அழகுன்னா அழகு... சொந்த ஹேர் ஸ்டைலா அது?

    ஆமாம்...எப்படி இருக்காரு பாத்தியா? நான் மட்டும் பொண்ணப் பொறந்திருந்தா அவரத்தான் கட்டி இருப்பேன். அழகன்டா...

    சும்மா காலேஜ் படிக்கிற பையனாட்டம் சிக்குன்னு இருக்கிறார் உங்க ஆளு.... சரோஜாதேவியை ஏமாற்ற பொய் மூக்கை போட்டுக் கொண்டு கலாய்க்குறதிலேயும் சரி...மேஜர் மேல வைத்திருக்கிற மரியாதையிலேயும் சரி... GM போஸ்ட் கிடைக்கிலேன்னு சட்டுன்னு சாதா சராசரி மனுஷாளைப் போல கோபப்படுறதிலேயும் சரி... போஸ்ட் பண்ண லெட்டரை எடுக்க முடியாமல் தோல்வியடையும் போதும் சரி... மேஜர் நல்லவர் என்று தெரிந்து தான் செய்த தவறை நினைத்து வருந்தும் போதும் சரி...வில்லன் வலையில் சிக்கி இறுதியில் கோர்ட்டில் கலக்கும் போதும் சரி...கோர்ட் சீனுன்னாலே உங்க ஆளுதாம்ப்பா...ரொம்ப இயல்பா நகைச்சுவையா செஞ்சிருக்கார். ஆனா எல்லாத்தையும் தூக்கிச் சாப்பிட்டு விடுகிறது அவரோட அழகும், இளமையும்...அது ஒன்னே போதும்...

    உனக்கு சரோஜாதேவின்னா ரொம்பப் பிடிக்குமே.... இதில எப்படி?

    நடிப்பு OK. ஆனா தோற்றத்தில கொஞ்சம் முற்றிப் போய் தெரியிறாங்க...உங்க ஆளுக்கு அக்கா மாதிரி இருக்காங்க... இருந்தாலும் பரவாயில்லை... சமாளிச்சுடறாங்க...

    மத்தவங்களைப் பத்தி சொல்லேன்..

    நாகேஷ், மனோரமா, தேங்காய், வி.கே.ஆர், வெண்ணிற ஆடை மூர்த்தி, சுருளி, தங்கவேலு என்று ஒரே நகைச்சுவைப் பட்டாளம்... வெடிச் சிரிப்புக்கு பஞ்சமே இல்லை... அதுவும் நாகேஷ் டிரெயினில் லெட்டர் பார்சலை எடுக்க முடியாமல் விட்டுவிட்டு நிற்கும் சைக்கிளில் தன்னை மறந்து நான் மதுரைக்குப் போறேன் என்று பெடல் பண்ணுவது பக்கா சிரிப்பு. நம்பியார் வழக்கம் போல முறுக்குகிறார். மேஜர் அருமை. உன்கிட்ட ஒண்ணு கேக்கணும்னு நெனச்சேன்... காலில்லாத போலீஸா ஒருத்தரு நம்ம ஊர்ல நைட்டுல சுத்துற கூர்க்கா கணக்கா வந்து துப்பறியிறாரே! அவரு யாருப்பா...

    அவரா... அவரு பேரு முத்தையா... இந்தப் படத்தில்தான் அறிமுகம். இந்தப் படத்துல நடிச்சி பாப்புலர் ஆனதாலே அவருக்கு 'அஞ்சல் பெட்டி' முத்தையான்னே பேரு நெலைச்சிடுச்சி...

    இதெல்லாம் விவரமா தெரிஞ்சி வச்சிருப்பியே! டைரக்டர் கூட புதுசோ?

    ஆமாம்... டி என்.பாலு அப்படின்னு ஒருத்தர். டி.ஆர். ராமண்ணா தெரியுமில்லே... அவருகிட்ட அசிஸ்டென்டா இருந்தவரு...

    உங்காளுக்கு ரொம்பத் துணிச்சல்தாம்பா... ஒரு புது இயக்குனர் படத்துல தைரியமா துணிஞ்சி நடிச்சிருக்காரே. அதுவும் காமெடி ரோல்ல..

    ஏன் சிவாஜியே சொல்லியிருக்காரே ஒரு புது இயக்குனர் இந்தப்படத்தின் மூலம் கிடைச்சாருன்னு... உனக்கு ஒன்னு தெரியுமா... எங்காளுக்கு காமெடி படங்களில் நடிக்கிறது ரொம்பப் பிடிக்குமாம். அதனால்தான் கலாட்டா கல்யாணம் சுமதி என் சுந்தரி படங்களையும் தன் மகன் ராம்குமார் பெயரிலே எடுத்திருக்கார். மியூசிக் நல்லாயிருக்கில்லே?

    யாரு நம்ம எம்.எஸ்.வி தானே?

    நாசமாப் போச்சு... பழைய சிவாஜி படம்னா கண்ண மூடிக்கிட்டு எம்.எஸ்.வி ன்னு உளற வேண்டியது....R. கோவர்த்தனன் அப்படின்னு ஒருத்தர்தான் இப்படத்துக்கு இசையமைப்பாளர். எனக்கு டி .எம்.எஸ், எல்.ஆர்.ஈஸ்வரி ரெண்டு பேரும் பாடிய 'பத்துப் பதினாறு முத்தம் முத்தம்' பாட்டு ரொம்பப் பிடிக்கும். உனக்கு...

    எனக்கு சுசீலா அழகாகப் பாடியிருக்கும் "திருமகள் என் வீட்டைத் தேடி வந்தாள்" பிடிச்சிருக்கு...அப்புறம் இன்னொரு மேட்டர்.

    தம்பி! நீ எங்க வரேன்னு புரியுது... நீ வழியறதைப் பார்த்தாலே புரியுதே...ஆதி மனிதன் பாட்டைப் பத்திதானே சொல்ல வர?

    ஹி.ஹி...ஆமாம்... இந்த விஜயலலிதா டான்ஸ் கொஞ்சம் ஓவர்தாம்பா. இருந்தாலும் ரெண்டு தடவை பார்த்துட்டேன்பா..சும்மா ஈஸ்வரி பாடிக் கலக்குது சாமியோவ்.

    நீ திருந்தவே மாட்டே! மேல போ...

    ஒளிப்பதிவு சில இடங்கள்லே பளிச். சில இடங்கள்லே சொதப்புது... சில இடங்கள்லே குரலும் காட்சியும் மேச் ஆகல்லே... நம்பியார் காட்சிகள் இழுவையாத் தெரியுது. எது எப்படியோ...உங்காளுக்கு இது வித்தியாசமான படமா எனக்குப் படுது.

    பணம், நான் சொல்லும் ரகசியம் படங்களில பேயாய் பணத்துக்கு தங்கவேலு அலைவாரே அதே ரோலை இதில் செஞ்சிருக்கார் பல வருஷங்களுக்கு அப்புறம்... முழுக்க முழுக்க காமெடி படம்கிறதனாலே சில தப்பையெல்லாம் மன்னிச்சுடலாம். மொத்தத்தில படம் எப்படின்னு சொல்லு...

    உன்கிட்ட படம் சுமார்னு சொல்லக் கூட பயமாய் இருக்கே! உங்காளு படம்கிறதனாலே எதனாச்சும் சொன்னா என் பட்டையை உரிச்சுடுவியே!

    என்ன செய்றது? சிவாஜின்னா உயிரு எனக்கு. அப்படியே பழகிப் போச்சு! சரி! சரியான விமர்சனத்தை சொல்லுடா....

    எனக்குப் பிடிச்சிருக்குப்பா... மனம் விட்டு சிரிக்கலாம்...ரசிக்கலாம். ஆஹாவுமில்லை...ஓஹோவுமில்லை..மோசமுமில்லை.. காமெடிதான் பிரதானம்... நாள் முச்சூடும் உழைக்கிற எனக்கு பார்க்க ஜாலியா இருக்குப்பா... வேற என்ன படம் வச்சிருக்க? ஹ...வர்ர்ட்டா..

    ம்...ஓசியில படம் பார்த்தா ஜாலியாத் தான் இருக்கும். DVD யைக் கொடு. நெட்டுல எங்க ஆளுங்க எல்லாரும் பார்க்கணும்...மொவனே போயிட்டு வா...அடுத்த படத்தையாவது காசு கொடுத்து வாங்கிப் பாரு.

    Last edited by vasudevan31355; 21st February 2013 at 09:50 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. #1836
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Mr. Vasudevan sir, Superb.

    'Anjal petti 520' paththi discuss pannalaamnu naan sonnathume, all of a sudden you have posted a wonderful writing about the movie.

    A entirely different type of analysis, with comedy punches. It reminds me the vikatan reviews of old movies in conversation method. But that would be very short. Yours is very detailed by touching all sides of the movie.

    Thanks a lot for the video, by which somany non viwers will enjoy the hillarious comedy of NT and others.

    what an excellent writing skill you have.

  8. #1837
    Senior Member Devoted Hubber abkhlabhi's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    Bangalore
    Posts
    400
    Post Thanks / Like
    Dear Mr.Vasu,

    Superb writing. I have not seen this movie till date though I heard and read often. I think this is 2nd half. (downloaded immediately in my mobile - GK, UVU, SES already stored in my mobile) Ist half missing. Can you try to upload ?

    thanks a lot.

  9. #1838
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார், சூப்பர்.
    முள்ளை முள்ளாலே எடுக்கணும்னு சொல்றதைப் போல, காமெடியை காமெடியை வெச்சே ரிவீட் அடிச்சிட்டீங்க.

    தூள் கிளப்புங்க சார்...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #1839
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    we, the NT fans neither get shaken nor get stirred by such filthy comments on NT'S ACTING. time and again NT has been proving what he is upto even after he has left us. Karnan is the solid example, Ms,Shilpa. Kindly change your perception. NT remains immortal with us with his films being immortal while all other actors proved to be mortal with their films too succumbing to mortality. Can any one of their films can match the history created by Karnan in its rerun? We NT fans respect all other actors and their fans and we do not make such comedy comments. Till the world stops its rotation, NT's fame is unbeatable and his movies are going to create records again and again while your icon's movies will just find a place in its 'dubba' forever and none is going to come out!

  11. #1840
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Vasu sir Anjal petti 520 analysis is 2 good just like watching a movie superb

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •