Page 356 of 401 FirstFirst ... 256306346354355356357358366 ... LastLast
Results 3,551 to 3,560 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #3551
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like
    [QUOTE=goldstar;1042834]Thank you Gopal sir. Your each and every word of NT is marvelous and wonderful and worth reading for generations to come.

    வ.உ .சி. யை நமக்கு அடியாளம் காட்டி தேச தலைவர்கள் போல் வாழ்த்து, பிறரை போல் போலி விளம்பரம் செய்யாமல் வாழ்த்து காட்டிய நடிகர் திலகமே உன்னை வணக்குகிறோம்

    திரு.கோல்ட் ஸ்டார்

    போலி விளம்பரம் என்ற வார்த்தையை படித்தவுடன் பலர் நீங்கள் மறைமுகமாக சிலரையோ / பலரையோ குறிப்பிடுவதாக நினைத்துக்கொள்ள சாத்யதை உண்டு. மற்றும் அவர்கள் மனது வருத்தப்படலாம் ! ஆகையால் அந்த Phrase நிச்சயம் தேவையா? தவிர்த்தல் நலம் என்பது என் கருத்து !

    There is no hidden agenda here ! Hope you will consider my opinion ! Anyways, it is your writeup So, decision is obviously yours !

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3552
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like

    Most beautiful and humble face in Cinema world



    காண, கேட்க, பார்க்க சலிக்காத, செயற்கையட்ட உன்னதமான பேச்சு, நடை, பார்வை, சலிப்பு, கோபம், புன்னகை, இன்னும் விட்டு போன எல்லாவத்தையும் சில நிமிடத்தில் காட்டும் வல்லமை படைத்த திலகமே, உன்னை வணக்குகிறோம்.

  4. #3553
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கோபால் சார் வருத்தத்திலும் நியாயம் இருக்கிறது. அவருடைய இந்த சீரிய, அரிய முயற்சிக்கு உறுதுணையாக ராகவேந்திரன் சார் அவர்களைத் தவிர வேறு யாரும் (நான் உட்படத்தான்) அவ்வளவு ஈடுபாட்டுடன் feed back தருகிறோமா என்றால் இல்லை என்ற பதில்தான் மிஞ்சுகிறது. கோபால் சாருடன் மணிக்கணக்கில் நான் போனில் உரையாடும்போது இதைப்பற்றி அலசுவோம். நிறைகுறைகளை அலசுவோம். அப்போது கூட அவர் பாராட்டுக்களுக்காக ஏங்கியதில்லை. தன்னுடைய கட்டுரைகளுக்கான சரியான, அதோடு தொடர்புடைய, அல்லது நேர்,எதிர்மறை விமர்சனங்களைத்தான் அவர் எதிர்பார்க்கிறார். அதை பெரும்பாலும் நாம் அளிப்பதில்லை. நாம் எல்லோருமே அவர் அலசி ஆராயும் தலைவர் படங்களை பலமுறை பார்த்திருக்கிறோம். அந்த சொந்தக் கருத்துக்களை அவருடைய கட்டுரைகளுக்கு இடையே நாம் பதிந்தால் அந்தக் கட்டுரைகளின் சுவாரஸ்யம் இன்னும் அதிகரிக்கும். அவருடைய இந்த புதிய பாணி வடிவமைப்பில் நாம் நிறையத் தெரிந்து கொண்டுள்ளோம். அதே போல் நமக்குத் தெரிந்ததை அவர் எடுத்துக் காட்டாமல் இருந்திருக்கலாம். நாம் அதை சுட்டிக் காட்டலாம். (விக்கிரமனின் குரல் ஜாலங்களை நண்பர் பார்த்தசாரதி அவர்கள் கோபால் அவர்களுக்கு எடுத்துச் சொன்னதைப் போல) அதைத்தான் கோபாலும் எதிர்பார்க்கிறார். பதில் கருத்துக்கள் சரிவர வெளிவராத பட்சத்தில் வடிவமைப்பவருக்கு சோர்வும் எரிச்சலும் சலிப்பும் வர வாய்ப்புள்ளது. அருமையாக எழுதும் நபர் சலிப்படைந்தால் நமக்குத்தானே நஷ்டம்?

    அருமை நண்பர் கண்பத் அவர்கள் சொன்னது போல விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிற்கே உறுப்பினர்கள் பதிவிடுகிறோம். எம்ஜியார் அவர்கள் திரியில் புதிதாய் வரும் அங்கத்தினர்கள் அனைவரும் அவர்களால் முடிந்த பதிவுகளை ஒருவர் கூட விடாமல் அங்கு பதிவிடுகிறார்கள். அது நிச்சயம் பாராட்டப் படவேண்டிய விஷயம்.

    இங்கு உறுப்பினர்கள் அதிகம் இருந்தும் பலர் பதிவிடுவதே இல்லை என்பது நிஜமாகவே வருத்தப்படவேண்டிய விஷயம். எல்லோருக்கும் காலம் பொன் போன்றதுதான். எல்லோருக்கும் வேலைப்பளு என்பது நிஜம். அந்த வேலைப்பளு கோபாலுக்கும் உண்டு....ராகவேந்திரன் சாருக்கும் உண்டு... கண்பத் சாருக்கும் உண்டு... கோல்ட் ஸ்டாருக்கும் உண்டு... ராகுல்ராமுக்கும் உண்டு...சவுரி சாருக்கும் உண்டு... எனக்கும் உண்டு...

    இங்கு பதிவிடுபவர்களும் மற்றவர்களைப் போல நேரமின்மை என்ற காரணத்தை எடுத்துக் கொண்டால் நமது திரியின் நிலைமையை சற்று நினைத்துப் பாருகள்.

    காலை தூங்கி எழுந்தது முதல் நடுநிசிவரை சிலர் திரிக்காக நேரத்தை செலவிடுகிறோம். எல்லோராலும் அப்படி இருக்க முடியாது என்பது தெரியாததல்ல. தினம் ஒருமணிநேரம் செலவிட்டு திரியில் பதிவுகள் இடலாமே.! இதை நானும் ராகவேந்திரன் சாரும் பலமுறை சொல்லியாகி விட்டது. தலைவரின் நடிப்பைப் பற்றி.... அவர் படங்களில் தங்களுக்குப் பிடித்த காட்சிகளைப் பற்றி... பாடல்களைப் பற்றி எழுதலாமே.... தங்களிடம் கைவசம் உள்ள ஆவணங்களைப் பதியலாமே....

    சில உறுப்பினர்கள் மூன்று நான்கு மாதங்களுக்கு ஒருமுறை எட்டிப் பார்த்துவிட்டு செல்கிறார்கள். முரளி சார், கார்த்திக் சார், சாரதா மேடம் போன்ற சீனியர்கள் திரியில் வரலாறுகள் படைத்து நமக்கு முன்னோடியாகத் திகழ்ந்து இருக்கிறார்கள். அவர்கள் செய்துவிட்டுப் போன, செய்து கொண்டிருக்கிற சாதனைகள் என்றென்றும் நிலைத்திருக்கும். அவர்கள் இனி வந்து தினம் பதிவுகள் இட எதிர்பார்ப்பதை விட நாம் அவர்கள் வழியைப் பின்பற்றி நம்மால் முடிந்த பதிவுகளை இட்டு அவர்களை சந்தோஷப் படுத்தலாமே!

    ஒருமணிநேரம் தினம் நம் தலைவருக்காக நாம் ஒதுக்கக் கூடாதா?... சற்று சிந்தித்துப் பாருங்கள்... தினம் பதிவு செய்பவர்களுக்கும் எவ்வளவு வேலைகள் இருக்கும் என்று?
    சந்திரசேகரன் சார் என்னதான் வெளியில் பலர் நமது திரியை வாசிக்கிறார்கள் என்று சொன்னாலும் பதிவு செய்யும் இந்த இடத்தில் அந்த பதிவுகளுக்கான feed back வருவதையே பதிவாளர் விரும்புவார். அதுதான் அவரை உற்சாகப்படுத்தும். அதை பாராட்ட வேண்டும் என்று எவரும் எடுத்துக் கொள்ள வேண்டாம். நான் சொல்வது பதிவின் நிறைகுறைகளை. நிறை என்றால் அதனுடன் சேர்ந்த கருத்துக்களை பதியலாம். குறை என்றால் தாராளமாக சுட்டிக் காட்டலாம். அதை பதிவாளர்கள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்வார்.

    நாம் மனதார இங்கு சிலருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொன்னாலும் அதைக் கூட சிலர் ஏற்றுக் கொள்ள மறுப்பது, அல்லது ஏற்றுக் கொள்ளாதது போலக் காட்டிக் கொள்வது (ஒருவேளை தன்னடக்கமோ!) எந்த நாட்டில் கற்றுக் கொண்ட நாகரீகமோ தெரியவில்லை.

    நிச்சயமாக நமது திரியில் பதிவாளர்களின் வருகை மிகக் குறைவே! பதிவுகளும் குறைவே!

    இந்நிலை மாற வேண்டும். ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த பதிவுகளை இட வேண்டும். இல்லையென்றால் கோபால் போல சலிப்படைந்து வேறு blog-களுக்கு செல்லவேண்டிய நிர்ப்பந்தம் தான் இங்குள்ள பதிவாளர்களுக்கு ஏற்படும்.

    ராதாகிருஷ்ணன் சார்!

    உங்களை அடிக்கடி ஆன்லைனில் பார்க்க முடிகிறது...(ஆனால் திரிக்கு வருவேனா என்கிறீர்கள். திரியைப் 'படித்தால் மட்டும் போதுமா'?)

    ஆனந்த் சார்,

    வந்த புதிதில் தங்கள் சொந்த வடிவமைப்பில் அருமையான தலைவரின் ஸ்டில்களை கலைநயத்தோடு பதிவிட்டீர்கள். இப்போது என்ன ஆச்சு?

    பார்த்தசாரதி சார்,

    நீங்கள் வேலை அதிகம் என்று கூறவே கூடாது.... தங்கள் பாடல் ஆய்வுக்காக ஏங்கி ஏங்கி கண்கள் பூத்துப் போச்சு.

    தம்பி செந்தில்,

    உன் கதை என்ன? என்ன இந்தப் பக்கமே ஆளைக் காணோம்?

    சிவாஜி செந்தில் சார்,

    மாதம் இரண்டு முறை வருகிறீகள். தங்களிடம் நிறைய விஷயம் உள்ளது... இனி தினமும் பங்கு பெற வேண்டும்.

    சுப்பிரமணியம் ராமஜெயம் சார்,

    மிக சீனியர் நீங்கள். தங்கள் ஆசீவாதங்கள் எங்களுக்கு முக்கியம். அது போல தங்கள் அனுபவங்களும் எங்களுக்கு முக்கியம். உடல்நலனுக்குத் தகுந்தவாறு பதிவுகளை அளிக்க முயற்சி செய்யுங்கள்

    அன்பு பம்மலார் சார்,

    தங்களுக்காக அனைவரும் வெயிட்டிங். திரிக்கு வந்து புத்துணர்ச்சி கொடுங்கள்.

    அன்பு முரளி சார்!

    எங்கள் வழிகாட்டி நீங்கள். தங்கள் கைவண்ணத்தில் 'ஞானஒளி' யைக் காண ஆசை. ப்ளீஸ்! எனக்காக.

    கார்த்திக் சார்!

    கோடைகால மழையாய் குளிர்விக்க வந்து திடுமெனக் காணாமல் போய் விட்டீர்கள். மீண்டு(ம்) வந்து 'கார்' மழை கார்த்திக்காய் 'திக்' விஜயம் செய்யுங்கள்.

    கோபால்,

    நீ என்று உரிமையோடு உன்னை விளிக்க வைத்த சகலகலா நிபுணனே!
    மனம் தளராதே! உன் பாதையில் பீடுநடை போட்டுக் கொண்டிருக்கிறாய். வழியில் உள்ள சிறு முட்களும், கற்களும் உன்னை என்ன செய்து விட முடியும்? உன்னால் ஒரு சரித்திரம் உருவாகி 'அவன் ஒரு சரித்திரம்' என்று வாழ்ந்த நம் தெய்வத்தைப் போல இந்தியாவின் ஒரே உலக அதிசயத்தைப் படைத்த சரித்திர நாயகனாய் நீ மகுடம் தரிக்கும் நாள் அதோ தெரிகிறது.

    இன்னும் விட்டுப் போன அன்பர்கள் அனைவரும் நமது திரியில் பதிவுகள் இட்டு தலைவர் புகழை ஈரேழு லோகமும் அறியச் செய்வோம்.

    என்னுடைய இந்தக் கருத்துக்கள் யாரையாவது வருத்தப்படச் செய்திருந்தால் அதற்காக முன்கூட்டிய என் மன்னிப்பை இப்போதே தெரிவித்துக் கொள்கிறேன்
    Last edited by vasudevan31355; 14th May 2013 at 08:00 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #3554
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    அன்புள்ள திரு. கோபால் அவர்களே,

    தங்களது கப்பலோட்டிய தமிழன் ஆய்வு அற்புதமாக அமைந்துள்ளது.

    முக்கியமாக, அவரது வட்டார வழக்கை எடுக்காமல் பேசிய விதம் மற்றும் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஒரு வித நடை, உடை, பாவனை முதலியவைகளை நடிகர் திலகம் எடுத்துக் கொண்டதை அழகாக எழுதியுள்ளீர்கள்.

    வட்டார வழக்கு

    வட்டார வழக்கு என்று வரும் போது, நடிகர் திலகத்தை மிஞ்ச ஒருவர் இல்லை என்பது "மக்களைப் பெற்ற மகராசி", "முதல் மரியாதை" மற்றும் "தேவர் மகன்" படங்களைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம். இருப்பினும், அவர் கூடுமானவரை முழுவதும் வட்டார வழக்கைத் தவிர்த்தே வந்திருப்பார் - consciously! காரணம் ஒரு கலைஞன் தான் சொல்ல வந்ததை அனைவரையும் சென்றடைய பொதுவான மொழி அவசியம் என்பதை முதல் படத்திலிருந்தே உணர்ந்து, காட்டி, அதன் மூலம் முதல் படத்திலிருந்தே, நாட்டின் அனைத்து வட்டார மக்களையும் சென்று சேர்ந்தவர் அல்லவா! பாகப்பிரிவினை, பட்டிக்காடா பட்டணமா, சவாலே சமாளி போன்று எண்ணற்ற சந்தர்ப்பங்கள் அவருக்குக் கிடைத்திருந்தாலும் - அந்தப் படங்களிலும் தேவைப்படுகிற இடங்களில் அசலான வட்டார வழக்கை உபயோகப்படுத்தியிருப்பார் தேவை அறிந்து! இல்லை என்றால் அவருடைய பல படங்களில் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது அந்தந்த வட்டாரங்களுக்கு மட்டுமே பெரிதாய் சென்று சேர்ந்திருக்கும்; அவருடைய நடிப்பு ஒன்றை மட்டுமே வைத்து, எல்லோரையும் அவரால் சேர முடியும் என்றாலும். மொழி கலைஞனுக்கு ஒரு முக்கிய காரணி என்பதால் அவர் இந்த விஷயத்தில் துவக்கத்திலிருந்தே கவனமாக இருந்து வந்திருக்கிறார்.

    பிராம்மணத் தமிழைப் பேசியிருந்தாலும், வியட்நாம் வீடு மற்றும் கெளரவம் இரண்டு படங்களும் எல்லோரையும் சென்று சேர்ந்தது அவருக்கிருந்த கவனம், தெளிவு இவைகளால் தானே! மற்ற எந்த நடிகரும் / கலைஞரும் இந்த சமூகத் தமிழ்ப் படங்களில் இவர் அளவிற்கு வெற்றி பெற முடியாமல் போனது விந்தை அல்லவே!

    படங்களில் வரும் மற்ற பாத்திரங்களை அணுகும் / அவர்களுடன் பழகும் / பேசும் முறை:-

    இதையும் அவர் முதல் படத்திலிருந்தே செய்து விட்டார். இதில் எனக்கு மிகவும் பிடித்தது இரண்டு - ஒன்று "வியட்நாம் வீடு" - வீட்டில் மனைவியிடம், மகனிடம் வேலைக்காரன் முருகனிடம் ஒரு வகை - அலுவலகத்தில் பணியாளிடம் ஒரு வகை; தனக்கு அடுத்த அதிகாரியிடம் ஒரு வகை. - இரண்டு "ராமன் எத்தனை ராமனடி" - படத்தின் கடைசி இருபது நிமிடங்கள் - நான் இந்தத்திரியில் முதலில் நுழைந்த புதிதில் எழுதியது. கடைசியில், கைதாகி, வீட்டில் உள்ள ஒவ்வொருவரிடமும் விடை பெறும் போது - தனக்கு அப்போது தான் அறிமுகமான மாஜிக் காதலியின் கணவரிடம் ஒரு வகை, மாஜிக் காதலியிடம் ஒரு வகை, தான் வளர்த்த பையனிடம் ஒரு வகை, தன்னை வளர்த்த ஆயாவிடம் ஒரு வகை - கடைசியில், தான் வளர்த்த மகளிடம் வரும் போது இரண்டு கைகளையும் தூக்கி ஒரு புருவத்தை மட்டும் தூக்கி 'என்ன புறப்படட்டுமா?' என்று உடல் மொழியிலேயே காட்சியை உணர்த்தி! (மற்ற எல்லோரையும் விட அந்த மகள் மேல் தான் அவருக்கு உயிர் - அதனால் தானே கைதாகிறார்!). இதை எழுதும் போதே சப்த நாடியும் சிலிர்க்கிறது!!

    நிறைய வண்டி வண்டியாக உள்ளது - நீங்கள் குறிப்பிட்டபடி, புதிது புதிதாக வந்து கொண்டே தான் இருக்கும்.

    ஒரு அற்புதமான படத்திற்கு/நடிப்பிற்கு/பங்களிப்பிற்கு, அற்புதமாக ஆய்வு செய்தது மிகுந்த மன நிறைவைத் தருகிறது. அதிலும், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படங்களை மட்டுமே ஓட வைக்கும், பேசிக் கொண்டிருக்கும் நாட்டில், இது போன்ற குறிஞ்சிப்பூ படங்களை நினைத்துப் பார்க்க வைத்தது மேலும் மகிழ்ச்சியைத் தருகிறது.

    அன்புடன்,

    இரா. பார்த்தசாரதி
    Last edited by parthasarathy; 14th May 2013 at 05:57 PM.

  6. #3555
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    கோபால் சார் வருத்தத்திலும் நியாயம் இருக்கிறது. அவருடைய இந்த சீரிய, அரிய முயற்சிக்கு உறுதுணையாக ராகவேந்திரன் சார் அவர்களைத் தவிர வேறு யாரும் (நான் உட்படத்தான்) அவ்வளவு ஈடுபாட்டுடன் feed back தருகிறோமா என்றால் இல்லை என்ற பதில்தான் மிஞ்சுகிறது. .............

    இன்னும் விட்டுப் போன அன்பர்கள் அனைவரும் நமது திரியில் பதிவுகள் இட்டு தலைவர் புகழை ஈரேழு லோகமும் அறியச் செய்வோம்.

    என்னுடைய இந்தக் கருத்துக்கள் யாரையாவது வருத்தப்படச் செய்திருந்தால் அதற்காக முன்கூட்டிய என் மன்னிப்பை இப்போதே தெரிவித்துக் கொள்கிறேன்
    வாசு சார்,

    இதை விட ஒருவரால் தன மனதில் இருப்பதை கொட்ட முடியாது.அவ்வளவு தெளிவாக எழுதியுள்ளீர்கள்.இது உங்கள் கருத்து மட்டுமல்ல ..நம் அனைவரின் கருத்து கூட.விரைவில் ஒரு நல்ல திருப்பத்தை எதிர் நோக்குகிறேன்.

    நன்றி.வணக்கம்.

  7. #3556
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அருமை பார்த்தசாரதி சார்! நீங்கள் குறிப்பிட்ட 'ராமன் எத்தனை ராமனடி' காட்சி... குறிப்பாக இறுதியில் மகளிடம் விடை பெறும் போது இரண்டு கைகளையும் சற்றே உயர்த்தித் தூக்கியவாறே மகளின் அருகே வரும் அந்த வார்த்தைகளில் வர்ணிக்க இயலா ஜாலத்தை எண்ணி எண்ணி வியந்திருக்கிறேன். தாங்களும் என்னைப் போலவே அப்படியே ஆழமாக ரசித்துள்ளீர்கள். அடடா! என்ன ஒரு அசாத்திய ஒற்றுமை! நிஜமாகவே மெய் சிலிர்க்கிறது. அடுத்தமுறை நாம் நேரில் சந்திக்கும் போது இதைப் பற்றி விரிவாக பேசுவோம்.

    மகளைப் பார்த்து போவதைப் பாருங்கள்!



    இன்னொன்று "ஞானஒளி"

    கோடீஸ்வர அருண் பேத்தியின் கல்யாணத்தை தடபுடலாக நடத்த ஆசைபட்டு மகள் மேரியிடம் அதை வெளிப்படுத்தும் காட்சி. மகள்தான் சீரழந்து விட்டாள். அவளுக்கு ஒரு கல்யாணம் காட்சி நடத்தி வைத்து கண்குளிரப் பார்க்க முடியவில்லை. (ஆண்டனியாக இருக்கையில்). ஆனால் இன்று கோட்டீஸ்வரன் அருண். மகளிடமே தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் பரிதாபம். லாரன்ஸிடம் மாட்டிக் கொள்ளக் கூடாது. மகளிடம் பாசத்தை மறைக்கவும் முடியாது. மகள் தன் மகளுக்கு திருமணம் என்று வந்து நிற்கிறாள். பேத்திக்கு கல்யாணம் என்ற சந்தோஷம். தானே தடபுடலாக நடத்தி வைக்க மனது கிடந்து தவிக்கிறது. ஆனால் மகளோ முட்டுக் கட்டை போடுகிறாள் தந்தை காவல்காரனிடம் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று. இதுதான் சிச்சுவேஷன். பேத்தி கல்யாணம் என்றவுடன் அதை எவ்வளவு சிறப்பாக நடத்த வேண்டும் என்று பட்டியலிட்டு விட்டு மகளிடம் சொல்வார்.

    "மகளுக்கு செஞ்சு பார்க்க முடியாத கல்யாணத்த பேத்திக்காவது செஞ்சு பார்க்கிறேன்"



    இதில் என்ன விசேஷம்? அங்குதான் நிற்கிறார் 'நான் வணங்கும் தெய்வம்'. வேறு யாராய் இருந்தாலும் ஒன்று அந்த டயலாகை அழுது கொண்டே சொல்லியிருப்பார்கள் அல்லது வருத்தமாய் சொல்லியிருப்பார்கள். அது பத்தோடு பதினொன்றாய் சாதரணமாய்ப் போய் இருக்கும். ஆனால் இந்த எமன் சொல்லும் போது...

    "மகளுக்கு செஞ்சு பார்க்க முடியாத கல்யாணத்த" என்ற வ(ரி)ரையில் வார்த்தைகளின் உச்சரிப்பு சற்று வேகமாக வெளிப்படும். அதுவரையில் அழுகை வெளிப்படாது. எல்லா உணர்ச்சிகளும் வெடித்து வெளியே கிளம்பத் தயாராய் இருக்கும். ஆனால் நமக்குத் தெரியாது. எதிர்பார்க்கவும் மாட்டோம். அடுத்த வரியான

    "பேத்திக்காவது செஞ்சு பார்க்கிறேன்"

    எனும்போது ஒரு செகண்டின் பலபாகங்களின் ஒருபாக நேரத்தில் வெடித்து கதறுவார் பாருங்கள்! அவ்வளவு வேகமாக. ஒரு வரி வசனத்தின் பாதியை அமைதியாகக் கையாண்டு மீதியை ஆத்திரம், துக்கம் தொண்டையை அடக்க அழுதபடியே வெளிப்படுத்தி பார்ப்பவர் நெஞ்சங்களைக் கலங்கடிப்பார். என்ன திறமைடா சாமி! அந்த வசன வரியில் எட்டே எட்டு வார்த்தைகள்தான். அதுவும் சிறு சிறு வார்த்தைகள்தான். அதில் நான்கு வார்த்தைகளுக்கு ஒருவிதமான உச்சரிப்பு.... அடுத்த நான்கு வார்த்தைகளுக்கு வேறுவிதமான உச்சரிப்புடன் கூடிய எதிர்பாராத உணர்வுகளை காட்டும் உன்னத திறன். மகளுக்குத் திருமணம் செய்து பார்க்க முடியாமல் போன அங்கலாய்ப்பு... அவளால் பட்ட அவமானம்...அதை நேர் செய்வது போல இப்போது பேத்தியின் கல்யாணம்... அன்று அடைய முடியாத ஆனந்தத்தை இன்றாவது பேத்தியின் திருமணம் மூலம் அடைய வழி கிடைத்து விட்டதே என்ற சிறு திருப்தி... இன்னும் எத்தனை எத்தனை அர்த்தங்கள் அந்த ஒரு வரியில் உணர்த்தப்படும்!

    நீ மனிதனே அல்ல...தெய்வம்... எங்கள் குல தெய்வம்... எங்கள் கௌரவம் காக்கும் தெய்வம்...எங்களைக் காக்கும் காவல் தெய்வம்.

    அதனால் தான் 'ஞான ஒளி'

    என்றுமே

    எனக்கு நெம்பர் 1

    இது ஒரு சிறு துளிதான். ஈரேழு ஜென்மத்திற்கும் சொல்லி சொல்லி ஆச்சர்யப்பட அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன இந்தக் காவியத்தில்.

    நன்றி!
    Last edited by vasudevan31355; 14th May 2013 at 07:57 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #3557
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வினோத் சார்,
    தாங்கள் குறிப்பிட்ட பட்டங்கள் சரி. வருடங்கள் தவறு. அனைத்துமே 1957 க்கு பிறகே வழங்க பட்டன. தயவு செய்து சரி பார்த்து கொள்ளவும்.

  9. #3558
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் திரு கோபால் சார்


    நீங்கள் குறிப்பிட்ட அந்த பதிவை நான் போடவில்லை .

    நண்பர் திரு மாசானம் அவர்களின் பதிவு . சரி பார்க்கிறேன்

    .

  10. #3559
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    அருமை பார்த்தசாரதி சார்! நீங்கள் குறிப்பிட்ட 'ராமன் எத்தனை ராமனடி' காட்சி... குறிப்பாக இறுதியில் மகளிடம் விடை பெறும் போது இரண்டு கைகளையும் சற்றே உயர்த்தித் தூக்கியவாறே மகளின் அருகே வரும் அந்த வார்த்தைகளில் வர்ணிக்க இயலா ஜாலத்தை எண்ணி எண்ணி வியந்திருக்கிறேன். .....
    இன்னொன்று "ஞானஒளி"

    இது ஒரு சிறு துளிதான். ஈரேழு ஜென்மத்திற்கும் சொல்லி சொல்லி ஆச்சர்யப்பட அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன இந்தக் காவியத்தில்.

    நன்றி!
    பிரமீளா தன மாமனார் சவுத்திரியிடம் கேட்கிறார்:
    அப்பா! ராகவேந்தரோ, கோபாலோ ஒரு உணர்ச்சிகரமான காட்சிப்பதிவு இட்டால்,நாம் வாசுவிடம் சென்று காணொளி கேட்கலாம்,,ஆனால் வாசுவே காணொளி இல்லாமல் பதிவிட்டால்???

    அருமையான பதிவிற்கு மிக்க நன்றி வாசு அவர்களே!
    ஞான ஒளியில் தலைவரின் கைகளின் நடிப்பு அபாரம்.மாயா ஜாலம் நிகழ்த்தியிருப்பார்.

  11. #3560
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    புரிதலுக்கு மிக மிக நன்றி.

    Joe சார் ,நிச்சயமாக தங்களை தொந்தரவு செய்யத்தான் போகிறேன். மிக்க நன்றி.

    வாசு- உன்னுடைய வேண்டுகோள் நியாயமானதே.எல்லோரும் வருவார்கள். ரசிகன்டா நீ. நீ ஞான ஒளியில் எழுதிய காட்சி பதிவு நீ ஒவ்வொரு அசைவையும் நுணுக்கமாய் ரசித்து புரிந்து கொண்டதை அடடா.... நடிகர்திலகத்தின் சிறப்பே அதுதான். முன்முடிவு இல்லாமல் நடிப்பார். ஒவ்வொரு வசனத்திலும் பல பாவங்கள். unpredictable execution .இன்னும் கூட பார்க்கும் தோறும் என்னை ஆச்சர்ய படுத்தும் உலக மேதை. இதே காட்சியில் வேண்டாம்மா எனக்கு வயசாயிடிச்சு ... சொல்லும் விதம். உன்னுடைய No 1 பற்றி நீ எழுதாமல் யார் எழுத முடியும். எழுது. ரசிக்க சுவைக்க நாங்கள் என்றுமே....

    ராகவேந்தர் சார்- உங்களுடைய allround பங்களிப்பு எங்களுக்கெல்லாம் யானை பலம். மிக்க நன்றி வரிக்கு வரி படித்து உடன்வினை கொடுப்பதற்கு.

    கண்பட் சார்- உங்களுடன் பேசி பழகிய அற்புதமான அனுபவங்களே எழுத்தாக வந்து கொண்டுள்ளது. அப்பாடா ...எவ்வளவு பேசியிருப்போம் 1977 முதலாக நேற்று வரை....

    பார்த்தசாரதி சார், உங்கள் பாடல் பதிவுகளே critical dissection என்ற அணுகுமுறையை புகுத்தியது.மேலும் நிறைய பதிவுக்கு பேராசையோடு காத்திருக்கிறோம்.

    முரளி- நீதான் எனக்கு inspiration இந்த திரிக்கு வர.(மற்றும் கார்த்திக்,பம்மலார் )சத்ரியன் விஜயகாந்த் போல உன்னை வம்புக்கிழுத்து உன்னை பதிவிப்பது என க்கு ஆனந்தமே.

    சௌரி சார்- உங்கள் பதிவுகளின் aggressive mischievous authenticity என்னை கவர்ந்த ஒன்று. உங்களுடன் வம்புக்கிழுத்து தொடர் தாக்குதல் உரையாடல் நான் ரசித்த ஒன்று.

    சந்திரா- உன்னுடைய பணிகளுக்கு மிக நன்றி. பயணத்தை தொடரு.

    சதீஷ்- வழக்கம் போல உற்சாகமான பங்களிப்பு மற்றும் ரசித்ததற்கு நன்றி.

    P_ R - உன்னுடைய யோசனையே இத்தொடர்.(நான் ஒத்து வருமா என்று தடுமாறிய போது)
    உன்னுடைய feedback நான் மிக எதிர்பார்க்கும் ஒன்று.(எல்லோருமே).உன்னுடைய தேவர் மகன் பதிவு போல ஒன்றை என் வாழ்நாளில் கண்டதில்லை. பலருக்கு அனுப்பி மகிழ்ந்ததோடு, படம் பார்த்த அளவு படித்துமிருக்கிறேன்.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •