Results 1 to 10 of 287

Thread: pala suvaik kavithaikaL.

Hybrid View

  1. #1
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    சங்கப் புலவர் கொல்லன் அழிசியார்

    சங்கப் புலவர் கொல்லன் அழிசியார் " பனிப்புதல்"

    பனிப்புதல் இவர்ந்த பைங்கொடி அவரைத்
    கிளிவா யொப்பின் ஒளிவிடு பன்மலர்
    வெருக்குப்பல் உருவின் முல்லையொடு கஞல,
    வாடை வந்ததன் தலையும் நோய் பொரக்
    கண்டிசின் வாழி தோழி தெண்டிரைக்
    கடலாழ் கலத்திற் றோன்றி
    மாலை மறையுமவர் மணிநெடுங் குன்றே.

    கொல்லன் அழிசியார், குறுந்தொகை 240.

    இவ்வழகிய பாடற்பொருளை இனி நோக்குவோம்.



    அருஞ்சொற்பொருள்

    புதல் - புதர். பனிப்புதல்: பனிப்பொழிவின் காரணமாக மிகக் குளிர்ந்துவிட்ட புதர் இவர்ந்த = பற்றி ஏறிய. பைங்கொடி அவரை = பசுமையான அவரைக் கொடி. கிளிவாய் ஒப்பின் = கிளியின் அலகினை ஒத்த.
    ஒளிவிடு பன்மலர் = ஒளிவிடுகின்ற பல மலர்கள்.
    வெருக்குப்பல் = காட்டுப் பூனையின் பல். உருவின் = உருவத்தை ஒத்த. முல்லை - முல்லைமலர். கஞல = செறிய. வாடை = வடக்குத் திசையினின்றும் வீசும் குளிர்காற்று. பொர = வருத்த. தெண்டிரை = தெண் - திரை, தெளிந்த அலைகள்,
    கடல் ஆழ் - கடலில் மூழ்கும்.

    தெள் - தெளி - தெளிவு.

    தெள் - தெள்ளு, தெள்ளுதமிழ்.
    தெள் - தெள்ளத் தெளிந்த (மரபுத் தொடர்.)


    தெள்+மை = தெண்மை.= தெளிவு.
    தெண்மை+ திரை= தெண் திரை = தெண்டிரை.

    தொடரும்
    Last edited by bis_mala; 22nd July 2012 at 10:12 PM.
    B.I. Sivamaalaa (Ms)

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    Quote Originally Posted by bis_mala View Post
    சங்கப் புலவர் கொல்லன் அழிசியார் " பனிப்புதல்"

    .................................................. ................
    இவ்வழகிய பாடற்பொருளை இனி நோக்குவோம்.

    [B]
    இனிப் பாடலின் முழுப்பொருளையும் காண்போம்.


    குளிர்ந்த புதரில் பற்றி ஏறியுயர்ந்த அவரைப் பசுங்கொடி கிளியலகினை ஒத்த ஒளிவீசுகின்ற பல மலர்களைத் தாங்கி நிற்கிறது. வடக்கிலிருந்து வாடைக் காற்று (குளிர்காற்று) வீச, காட்டுப் பூனையின் பல்போன்ற முல்லை மலர்கள் அவரைப் பூக்களுடன் சென்று செறிகின்றன. இயற்கையில் இவை இங்ஙனம் கலந்துறவாடவே, எதிர் தோன்றும் மலையில் வாழும் காதலன் அருகில் இல்லாமையால், தலைவியைப் பிரிவுத்துயர் வருத்துகிறது. போகட்டும், அவருடைய அழகிய ஒளிசெய்யும் சிறு மலையையாவது பார்த்துக்கொண்டே துயரை ஆற்றிக்கொண்டு இருந்துவிடலாம் என்றால் மாலை வந்துவிட்டது. கடலில் கலம் மூழ்கும்போது கொஞ்சம் கொஞ்சமாக ஆடி ஆடி உள்ளிறங்கி மூழ்குதல் போல, மலையும் இருள் கூடக்கூட மறைந்துவிடும்.

    தோழி, அவர் வாழ்க,நீயும் யாவரும் வாழ்க! இனி நான் எதைப் பார்த்து ஆற்றுவேன்? காதலெனும் நோயுடன் அன்றோ நான் போராடிக்கொண்டிருக்கிறேன்.....


    more detailed expln at http://sivamaalaa.blogspot.com/
    Last edited by bis_mala; 22nd July 2012 at 10:23 PM.
    B.I. Sivamaalaa (Ms)

  4. #3
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like

    கலைவாணர் விளக்க வரிகள்

    பாரதியாரின் கவிதை பற்றி எடுத்தியம்ப தனித் திரிகள் இங்கு உண்டு. ஆனாலும் பலசுவைக் கவிதைகளையும் நாம் நுகர்ந்து வருவதனால், அவருடைய கவிதை ஒன்றிரண்டை அவ்வப்போது தொட்டிணைத்துக்கொள்வதில் தவறொன்றும் இல்லையென்றே கருதுகின்றேன்.

    நாம் இன்று படித்தின்புறும் அவர் வரிகள் இவை:

    நீலத் திரைக்கடல் ஓரத்திலே -- நின்று
    நித்தம் தவம்செய்த குமரிஎல்லை -- வட
    மாலவன் குன்றம் இவற்றிடையே -- புகழ்
    மண்டிக் கிடக்கும் தமிழ் நாடு.


    இந்த வரிகளுக்கு நகைச்சுவை அரசு என்று பெரும்புகழ் வாய்ந்த கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் வரைந்திருந்த சில விளக்க வரிகள்,இலக்கிய நோட்டம் என்னும் தகுதிக்கு நன்கு ஏற்புடையன என்னலாம்.

    அவ்வரிகள் இவை:

    தொடரும்.
    Last edited by bis_mala; 30th August 2012 at 09:02 PM. Reason: line space unable
    B.I. Sivamaalaa (Ms)

Similar Threads

  1. Replies: 72
    Last Post: 13th April 2009, 11:00 AM
  2. en kavithaikal
    By senthilnathan_r in forum Poems / kavidhaigaL
    Replies: 13
    Last Post: 3rd December 2006, 05:12 PM
  3. Seithikal Pala Kodi - Athellaam unmai alla
    By RR in forum Current Topics
    Replies: 26
    Last Post: 28th August 2005, 05:49 PM
  4. maRRa kavithaikaL
    By Oldposts in forum Poems / kavidhaigaL
    Replies: 161
    Last Post: 18th August 2005, 09:36 PM
  5. akil kavithaikaL
    By Oldposts in forum Poems / kavidhaigaL
    Replies: 54
    Last Post: 12th November 2004, 01:49 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •