-
22nd April 2012, 06:20 PM
#11
Moderator
Diamond Hubber
மணமேடையில் நடந்த கலாட்டா!
திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய தொடர், துளசி.
மிகப்பெரிய மண்டபத்தில் திரளான உறவினர் மத்தியில் துளசி - செல்வராஜ் திருமணம் வெகு விமரிசையாக நடந்து கொண்டிருந்தது. திருமணத்துக்கு செல்வராஜின் நண்பனாக வந்திருந்த முட்டுக்காடு காவல் அதிகாரி பிரபாகரன், `துளசி நல்லவள் இல்லை. பிரசன்னா என்பவருடன் ஓர் இரவு தங்கி இருந்தாள்' என்ற குழப்பத்தை செல்வராஜ் மனதில் விதைக்கிறான். இந்த நேரத்தில் பிரசன்னாவும் துளசி திருமணத்திற்கு வருகிறான்.
அவன் வருகையை தடுக்கும் விதமாக வாசலில் கட்டியிருந்த வாழை மரம் தானாக அறுந்து விழுகிறது. பிரச்சினைக்குரிய பிரசன்னாவே விழுந்த வாழை மரத்தை எடுத்து இறுக்கமாக கட்டுகிறான். கள்ளங் கபடம் இல்லாத துளசி, பிரசன்னாவை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறாள். இதை கண்கூடாக பார்த்த செல்வராஜின் மனதில் மெல்ல சந்தேகப் பேய் நுழைகிறது.
சீதை மேல் ராமன் சந்தேகம் கொண்டது போல் துளசி மேல் செல்வராஜ் சந்தேகம் கொள்கிறான். அந்த சந்தேகம் புற்றுநோயை போல் அவன் மனதில் நிமிடத்திற்கு நிமிடம் வேகமாக வளர்கிறது. மனமேடையிலோ சந்தேகப்பேய் சம்மணம் போட்டு அமர்கிறது.
இதற்குள் இந்த திருமணம் சிக்கல் இல்லாமல் நடக்க வேண்டுமே என்று துளசியின் தந்தை ரங்கசாமி பயத்தில் இருக்க, செல்வராஜ் யாரும் எதிர்பாராத வண்ணம் மாலையும் கழுத்துமாக மணமேடையில் இருந்து எழுந்து பிரசன்னாவை நெருங்குகிறான். அதேவேகத்தில் துளசிக்கும் அவனுக்குமான நெருக்கம் குறித்து கேட்டும் விடுகிறான்.
பிரசன்னா உண்மையை சொல்லி துளசி தூய்மையானவள் என்பதை நிரூபித்தானா? அல்லது தன் மேல் சந்தேகப்பட்டதுக்காக துளசி நடக்கவிருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினாளா?
பரபரப்பும் விறுவிறுப்புமாய் தொடர்கிறது, தொடர்.
-
22nd April 2012 06:20 PM
# ADS
Circuit advertisement
Bookmarks