-
9th April 2012, 04:34 PM
#11
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
bis_mala
.............
உங்களுக்கு முத்தொள்ளாயிரத்திலிருந்து இன்னொரு இனிய பாடல், இதோ:
மருப்பு ஊசியாக மறங்கனல்வேல் மன்னர்
உருத்தகு மார்பு ஓலையாக --- திருத்தக்க
வையகம் எல்லாம் எமது என்று எழுதுமே
மொய்யிலைவேல் மாறன் களிறு.
மருப்பு = யானைத்தந்தம். மறம்= வீரம்.
கனல் = ( தீபோலக்) கனல் (வீசும்.)
வேல்மன்னர் - வேலெடுத்துப் போரில் ஈடுபட்ட மன்னர்.
உருத்தகு மார்பு =உருவத்திற்குத் தகுந்த மார்பு, என்றால் விரிந்த மார்பு.
ஓலையாக - எழுத்தைப் பதிவு செய்யும் பொருளாக,
திருத்தக்க -உயர்வு தங்கிய. வையகம் = உலகு.
எல்லாம் எமது = யாவும் எம்முடையது.
மொய்யிலைவேல் =இலை மொய்வேல்: இலைபோன்ற வேலின் குத்தும்பகுதி. கூரிய வேலை யுடைய என்பது.
மாறன் = பாண்டியன். களிறு = யானை.
Will discuss after you have digested the stanza.
Last edited by bis_mala; 9th April 2012 at 04:37 PM.
B.I. Sivamaalaa (Ms)
-
9th April 2012 04:34 PM
# ADS
Circuit advertisement
Bookmarks