-
17th March 2012, 10:21 PM
#11
Moderator
Diamond Hubber
நேற்று கோலங்கள்... இன்று பொக்கிஷம்...
கோலங்கள் வெற்றித்தொடரின் மூலம் பிரபலமான இயக்குனர் திருச்செல்வம் எழுதி இயக்கும் புதிய தொடர், `பொக்கிஷம்.' இந்த தொடரின் மூலம் தயாரிப்பாளராகவும் ஆகி இருக்கிறார், திருச்செல்வம்.
`திருச்செல்வம் தியேட்டர்ஸ்' என்ற பேனரில் அவர் தயாரிக்கும் இந்த தொடர், வரும் திங்கள் முதல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
தொடரின் கதைச்சுருக்கம் வருமாறு:
உறவுகளே வாழ்க்கை என வாழுகிறான், வசந்தன். உறவுகளால் ஏமாற்றப்பட்டு தனித்து வாழ பழகிக் கொண்டவள் கண்மணி. எதிரெதிர் புள்ளிகளில் இருக்கும் இவர்கள், விதி வசத்தால் வாழ்க்கையில் இணைகிறார்கள்.
எல்லா விஷயங்களிலும் ஒருமித்த கருத்துடன் இருக்கும் இவர்களுக்கு உறவுக்காரர்கள் தான் பிரச்சினையாகிறார்கள். அம்மா, இரண்டு அக்காக்கள், அவர்களது கணவர்கள், குழந்தைகள், ஒரு தங்கை என, தான் நேசிக்கும் தன் கூட்டுக்குடும்பத்தை மனைவியும் நேசிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறான் வசந்தன். அவர்களோடு ஒட்டவே முடியாமல் தவிக்கிறாள், கண்மணி.
கண்மணியின் தோழி யமுனா. கணவனைப் பிரிந்து தனது டீன்ஏஜ் மகனோடு வாழும் யமுனா, இந்த சமூகத்தில் சந்திக்கும் பிரச்சினைகள் கதையின் இன்னொரு பக்கம். இவர்கள் தவிர, வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ளும் அர்ஜுன்-மாயா, பத்திரிகை உலகில் சாதிக்கத் துடிக்கும் கண்மணியின் தங்கை நந்தினி, திருமணம் செய்து கொள்ளாமல் கடற்கரையில் ஒரு குடிசையில் வாழும் வசந்தனின் சித்தப்பா... இப்படி பல சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள் இந்த தொடரில் வரவிருக்கிறார்கள்.
"வழக்கமான சீரியல் பாணியில் இருந்து விடுபட்டு இன்றைய பெண்கள் சந்திக்கும் யதார்த்தமான பிரச்சினைகளை இந்த தொடர்அணுகப்போகிறது. அன்பு, கோபம், சோகத்திற்கு இணையாக நகைச்சுவையும் இந்த பொக்கிஷத்தில் உண்டு'' என்கிறார், இயக்குனர் திருச்செல்வம்.
வசந்தனாக திருச்செல்வமும், கண்மணியாக மலையாளப்படங்களில் முன்னணி நாயகியான மீராவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் நளினி, `தோழர்'ஆதவன், பவ்யகலா, கற்பகம், பவானி, பாரதிகண்ணன், ரமேஷ், நந்தினி, வித்யா ஆகியோரும் தொடரின் கலைப்பொக்கிஷங்கள்.
நன்றி: தினதந்தி
-
17th March 2012 10:21 PM
# ADS
Circuit advertisement
Bookmarks