தமிழில் நிகண்டுகள் பல, திவாகரம், பிங்கலம், சூடாமணி, உரிச்சொல்,கயாதரம், பாரதி தீபம், ஆசிரியம், அகராதி, கைலாசம் பொதிகை என்பன
நிகண்டுகளின் பெயர்கள்.
இவற்றுள் ஒன்றிலிருந்து ஒரு பாடலைச் சுவைப்போம்.
பகவனே ஈசன் மாயோன் பங்கயன் சினனே புத்தன்
பகலே நாள் ஒரு முகூர்த்தம் பகலவன் நடுவே தேக
மகரமே சுறா பூந் தாதாம் வசி கூர்மை வசியம் வானே
அகம் மணம் மனையே பாவம் அகலிடம் உள்ளும் ஆமே.
இது சூடாமணி நிகண்டுப் பாடல்.
பழங்காலத்தில் அகரவரிசைகள் இல்லை. இதுபோன்ற பாடலைக்கொண்டே பொருள் அறியவேண்டும்.
Bookmarks