Results 1 to 10 of 503

Thread: KAVICH CHAARAL [ SIVAMAALAA]

Hybrid View

  1. #1
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நேற்று மாலை, பார்த்தீர்களென்றால், என் அ.மாடிக் குடியிருப்பில் எனது மூன்றாவது மாடிப் பலகணியில் அந்தக்கால கறுப்பு வெள்ளை நிறத்தில்
    ஒரு புறா வந்துவிட்டது..

    கைப்பிடிச் சுவர் பெரிதோ அல்லது உடல் நிலை சரியில்லையோ தெரியவில்லை... அதனால் மறுபடி பறக்க இயலவில்லை.என் மனைவிதான் முதலில் பார்த்தது..( நான் அலுவலகம் முடித்து இரவு ஏழு மணிக்குத் தான் வருவேன்)

    கொஞ்சம் பொரி வைத்தாள்..ம்ஹீம் சாப்பிடவில்லை.. சோர்வாய் மூலையில் சென்று உறங்கிவிட்டதாம்.. நேற்று கொஞ்சம் குளிர்காற்று நிறைய..எனில் குளிரில் நடுங்கியபடி.. நான் வந்தபின்பும் பார்த்தால் தலையை உள்செலுத்தி நல்ல தூக்கம்..

    இன்று காலையில் அலுவல் கிளம்பும் போதும் பார்த்தால் உறக்கம் தான்..
    நான் சென்றபிறகு சமர்த்தாய்க் கண் விழித்து வீட்டுக்காரி போட்ட கோதுமை தானியங்களைக் கொத்தி கிண்ணத்தில் வைத்த காலைக்காப்பிபோன்ற தண்ணீரை அருந்திவிட்டு அன்ன நடை போட்டுக் கொண்டிருந்ததாம்

    சொல்ல மறந்துவிட்டேனே..இன்று என் தந்தையாரின் நினைவு நாள்.பலவருடங்களுக்கு முன் இந்நாளில் தான் என் தகப்பனார் வானுலகம் சென்றிருந்தார்.

    எனில் அலுவலகம் சென்றபோது தொலைபேசி.. அப்பாவுக்கு என்ன ஸ்வீட் ப்ண்ணி படைக்கிறது...சரி கேசரி செய்யேன்..

    செய்து படைத்தபோது பால்கனி வழியாக அந்தப் புறா கண்ணாடிக் கதவைக் கொத்திக் கொண்டிருந்ததாம்.. பின் தீபாராதனைகாட்டும் போதும் கொஞ்சம் தன்னைத் தானே சுற்றியதாம்.. கண்ணில் ஒற்றிவிட்டு பால்கனியில் கண்ணை ஓட்டினால்.. அது இல்லை..காணோம்..எப்படிப் பறந்ததென்றும் தெரியவில்லை..

    மாலை வந்து கொஞ்சம் விளையாடலாம் என எண்ணியிருந்த எனக்கு சற்றே ஏமாற்ற்ம் தான்..

    அதைக் கொஞ்சம் எழுதிப்பார்த்தேன்..

    புறவே புறவே அழகுறும் அலகுடன்
    உறவு கொளவே ஓடிவந் தனையோ
    துறவைத் திடுமென துணிந்தே எடுத்தே
    விரைந்த துமேனோ விளக்குவாய் நீயே

    வானில் பறந்தே வகையாய் மகிழ்வைப்
    பேணிய படியே இருந்திருக் கலாமே
    நேற்று வந்தாய் நெஞ்சு நிறைத்தாய்
    ஊற்றாய் உளத்தில் சோகம் பொங்குதே..

    இட்ந்தான் மாறி இங்குவந் தாய்நீ
    இனிதா கவேதான் இருந்திருக் கலாமே
    திடமா யொருமுடி வெடுத்தே சென்றாய்
    தவிக்கும் மனதுன் அழகின் நினைவிலே

    எங்கோ பறந்தாய் மகிழ்வாய் இருந்தாய்
    இங்கே இருந்த இடமும் வெற்றாய்
    வெறுமையாய்ப் பாலையாய்த் தெரிந்தே
    புறவே உந்தன் நினைவைச் சொலுமே..

    **
    Last edited by chinnakkannan; 17th January 2012 at 11:20 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    எலி சென்று மறைந்ததுவோர் ஏமாற்றமே
    வலி நெஞ்சில் கரைந்திடவே வருமாற்றமே
    என்றிருந்த நண்பருக்குப் புறவேற்றமே
    சென்றமன மகிழ்வினையே மீளேற்றுமே,
    இப்படியான் எதிர்பார்த்து நின்றபோதில்
    இப்புறவும் பறந்ததுவோ இன்றுகாதில்
    செப்பரிய துன்பியல்சேர் செய்திமாதே!
    ஒப்பிடவே ஏமாற்றம் இனியொன்றேதே!
    எனவாங்கு,
    யானுமென் கவலை ஈண்டு பதிவேன்,
    ஊணும் உறக்கமும் மீண்டு
    காணும் நன்மை அனைத்தும் மீளவே.
    B.I. Sivamaalaa (Ms)

  4. #3
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Oct 2005
    Location
    My
    Posts
    1,485
    Post Thanks / Like
    ரசிகத் தன்மையில்
    கைதேர்ந்தவள் வஞ்சி,
    ராகத்தில் சிறந்தது
    நாட்டைக் குறிஞ்சி

    என்றொரு பாடலில் இசைப்பா அரசர் பாபநாசம் சிவன் அவர்கள் பாடியுள்ளார்.

    நாட்டைக் குறிஞ்சிக்கு ஒத்துவரும்படி வஞ்சி யாப்பில் அல்லது அதன் சாயலில் ஏதேனும் தரமுடியுமா?

    அன்புடன்
    B.I. Sivamaalaa (Ms)

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •