-
16th January 2012, 09:56 PM
#1
Senior Member
Seasoned Hubber
owdatham
அவித்தும், அட்டும், அது செய்யப்படுமானால், அது அவுடதம் (அவிடதம்) ஆகும்.
மூலிகைகளை நீரிலிட்டு அவித்தல், அல்லது ஆவியினால் வேகுவித்தலையே "அவி" என்ற சொல்
தெரிவிக்கிறது.
அடுதல் என்பது சட்டியிலிட்டு அவித்தல் மட்டுமின்றி, வறுத்தல், புரட்டுதல் எனப் பலவகையாக வேகவைத்தல்.
அவி+ அடு+அது +அம்.= அவிடதம் -ஔடதம்.
அவி + (அ)டு என்பதில் (அ) கெட்டது. (மறைந்தது).
அது + அம் = அ(த்)(உ) +அம் , இதில் உகரம் கெட்டது.
இதில் நிலைமொழி, வருமொழி இல்லை. இவை சொல்லாக்கத்தில் ஏற்பட்ட திரிபுகள்.
ஔடதம் தமிழ்ச்சொல் என்று கொள்வது கருத்தன்று.
Last edited by bis_mala; 3rd February 2012 at 06:12 PM.
Reason: typo
B.I. Sivamaalaa (Ms)
-
16th January 2012 09:56 PM
# ADS
Circuit advertisement
-
2nd February 2012, 09:37 PM
#2
Senior Member
Seasoned Hubber
இரு முழுச்சொற்கள் சேர்வதுபற்றிய இலக்கணமே
புணர்ச்சி என்ப்படுகிறது.இது சந்தி என்றும் கூறப்படும். அதாவது, புணர்ச்சி இலக்கணம் சொல்லாக்கம் பற்றியதன்று.
அங்கு, இங்கு, எங்கு என்னும் சுட்டுச் சொற்களை வல்லெழுத்தில் தொடங்கும் சொல் எதிர்கொண்டால் அப்போது அவ்வல்லெழுத்தே மிகும்.
எடுத்துக்காட்டு:
அங்கு + கண்டேன் = அங்குக் கண்டேன்.
இங்கு +சமம் = இங்குச் சமம்.
எங்கு + கிடைக்கும் = எங்குக் கிடைக்கும்.
இக்காலத்தில் எழுத்தாளர்கள் பெரும்பாலும் இவ்விதியைப் பின்பற்றுவதில்லை என்று தெரிகிறது.
அங்கு கண்டேன் என்றே எழுதுவர்.
-
3rd March 2012, 03:05 PM
#3
Senior Member
Seasoned Hubber
pathu > pathi
பது என்பது ஓர் அடிச்சொல்.
பது > பதுங்கு.
ஒரு குடைவு உள்ள இடத்தில் உள் சென்று அடங்குதலையே தொடக்கத்தில் "பதுங்கு" என்பது குறித்திருக்கவேண்டும். இப்போது அது பல பொருட்சாயல்களைத் தழுவி நிற்பது தெரிகிறது.
பது பின் பதி என்று திரிந்தது.
பது > பதி - பதிதல்.
-
12th March 2012, 04:35 PM
#4
Senior Member
Seasoned Hubber
பதிவிருத்தல்.
இனிப் "பதிவிருத்தல்" என்ற சொல்லைப் பார்ப்போம்.
இது ஒளிந்துகொண்டிருத்தலைக் குறிக்கிறது.
ஆகவே, பதுங்குதற் கருத்து இதில் தொடர்ந்துவந்திருப்பதை அறியலாம்.
முன் இடுகையிற் கூறப்பட்டதை ஒப்பு நோக்குக.
-
12th March 2012, 06:14 PM
#5
Senior Member
Seasoned Hubber
pathu > pathi
Originally Posted by
bis_mala
முன் இடுகையிற் கூறப்பட்டதை ஒப்பு நோக்குக.
பது என்ற அடிச்சொல்லுடன் தொடர்புடைய சொற்கள் சிலவற்றைக் காண்போம்.
பது -பதுமை. ஓர் உருவம் பதிவாகியிருக்கும் களிமண் பிடி அல்லது வேறு பொருள்.
பது > பதுமினி.அதாவது, வீட்டுக்குள் பதிவாய் இருப்பவள். படிதாண்டாதவள். வீட்டின் எல்லையினின்று நீங்காதவள்." கிழித்த கோடு தாண்டாதவள்" என்பதும் காண்க.
பதுமினி > பத்மினி.
பத்மினி தமிழென்பது எம் கருத்தன்று. பதுமினி = தாமரை என்றும் கூறுவர்.
Bookmarks