-
29th August 2011, 07:25 PM
#1
Senior Member
Seasoned Hubber
பொருந்தாது....
என்னும் குறளில் அரசன் ெங்கோல் முறையினால் உயிர்களைக் காவானாகில் கேடுகளாக அறனில்லாத அந்நாட்டுப் பசுக்களும் பால் குன்றும்; அறுதொழிலோராகிய அந்தணரும் தம்முடைய வேதக் கல்வியை மறந்து விடுவர் என்று கூறுகின்றார்.
அரசாட்சி செவ்வையாய் நடைபெறாதவிடத்து, பசுக்கள் ஏன் பால் குன்றும் என்பது வியப்பாக உள்ளது...இவ்விரண்டிற்கும் ொடர்பொன்றுமில்லை.எவன் எப்படி யாண்டாலும் பசுக்களும் ஏனை விலங்குகளும் தம் குட்டிகளுக்குப் பால் தந்துகொண்டுதான் இருக்கும்.
மேலும், மக்கள் நலம் கருதியே வேதங்கள் ஓதப்படுவன. காவலன் காவல் சீரழிவுற்றபோது, அஃது மீண்டும் சீர்படுதலை வேண்டி, வேத மந்திரங்கள் நன்றாக ஓதப்பட்டு, பூசைகள், அருச்சனைகள், வேள்விகள் முதலிய கூடுதலாக நடைபெறுதலே வேண்டற்பாலது என்பதை வேதங்களே காட்டுகின்றன.வெற்றியையும் வேறு நலங்களையும் (அவை குறைந்த காரணத்தால்) அவற்றை வேண்டிப் பாடப்பட்ட வேதப்பாடல்களை நன்கு கவனிக்கவும்.எனவே, வேதங்களை வேதியர் கைவிடுவர் என்ற உரை பொருந்தாது.
-
29th August 2011 07:25 PM
# ADS
Circuit advertisement
-
29th August 2011, 10:46 PM
#2
Senior Member
Seasoned Hubber
References should be made to earlier posts in this thread on the same topic. For a view somewhat divergent to yours, you may refer to: http://www.mayyam.com/talk/showthrea...l=1#post162301.
-
31st August 2011, 03:55 AM
#3
Senior Member
Seasoned Hubber
"ஆதி"யாகிய பகவன் ..."முதற்றே" : redundancy......
ஆதி என்ற தமிழ்ச் சொல்லும் பகவன் என்னும் வடசொல்லும் சேர்ந்த தொகைச் சொல் ஆதிபகவன் என்பது. பகவன் தமிழ்ச் சொல்லாயின் ஆதிப்பகவன் என ஒற்று மிகவேண்டும் ஒற்று மிகாமல் ஆதியாகிய பகவன் என்னும் பொருளைத் தருதலால் இச்சொல் இருபெயரொட்டுப் பண்புத்தொகை யென்றும் இது வடநூன்முடிபு என்றும் பரிமேலழகர் கூறினார்.
பகவன் என்பது ‘பகவான்’ என்னும் வடசொல் என்றும், பகவான் என்பது சிவனுக்குப் பெயர் என்றும், அதர்வசிகோபநிஷத், “யோவை ருத்ர: ஸ பகவான்” என முப்பது முறை கூறுகின்றது. சங்கார காரணனாகிய சிவனே உலகத்துக்கு ஆதி என்பது இதனால் உணர்த்தப்பட்ட பொருளாம்.
“சங்கரோ பகவான் ஆத்யோ ரரட்ச ஸகலா: ப்ரஜா:
மஹேசோ பகவான் ஆதி தேவ:”
எனச் சரபோபநிஷதம் கூறுகின்றது. அதாவது சங்கரனுக்குத் தவிர ஏனையோருக்கு இறைமைக் குணங்கள் இல்லை. அவனே பகவான். எனவே ‘மஹேசனே பகவான்,
சிவனே உலகத்துக்கு ஆதி என்பது இதனால் உணர்த்தப்பட்ட பொருளாம்
இங்ஙனம் பரிமேலழகியார் கூறியுள்ளாரேனும், "ஆதி" என்பதும் "முதற்றே" என்பதும் ஒரே பொருளுடைய சொற்கள் என்பது இலக்கணம் படிக்காதவரும் அறிந்த ஒன்றாகும். எனவே, கூறியது கூறலெனும் குற்றமாகின்றது. இப்படிப்பொருள் கூறிக் குறளுக்கு இழுக்கு ஏற்படுத்தல் ஆகாது என்பதால், இவ்வுரை ஏற்புடைத்தாகாது. பிற தேவர்களை விலக்கி மொழிதற்பொருட்டு அடையாக இவ் ஆதிச்சொல் வந்ததென்பதும் சரியன்று. பகவன் என்பது ஒருமையில் இருப்பதால்,
இறைவன் ஒருவனே என்று பொருள்பட்டு, பிற தேவர்களை இயல்பாகவே விலக்கிவிடும். அடைச்சொல் ஏதும் தேவை இலது.
இக்காரணங்களால், இக்குறளுக்குப் பரிமேலழகர் தந்த விளக்கம் (the interpretation on particular words and not his view that Sivan is an absolute entity) தள்ளுபடிக்குரியது.
Last edited by bis_mala; 31st August 2011 at 07:18 PM.
B.I. Sivamaalaa (Ms)
-
31st August 2011, 05:46 PM
#4
Senior Member
Seasoned Hubber
missing finite verb
பகவன் என்பது ‘பகவான்’ என்னும் வடசொல் என்றும், பகவான் என்பது சிவனுக்குப் பெயர் என்றும் (,........................................) அதர்வசிகோபநிஷத், “யோவை ருத்ர: ஸ பகவான்” என முப்பது முறை கூறுகின்றது.
The Upanishad does not say which word is "vadasol" and which is not.
There are some words missing in your quotation (the location indicated by dotted line within brackets.).
Prepared to check it up?
Bookmarks