-
17th August 2011, 12:22 PM
#1
Senior Member
Seasoned Hubber
சொற்பம்
விரல் விட்டு எண்ணக்கூடிய அளவினவானால், அவற்றைச் "சில" என்று குறிக்கிறோம்.
வாயால் எளிதில் சொல்லிவிடக்கூடிய எண்ணிக்கை உடையனவானால், சொற்பம் என்கின்றோம்.
சொல் - (சொல்லக்கூடிய எண்ணிக்கை, அல்லது சொல்வது).
சொல் > சொற்பு > சொற்பம்.
பு, பு+அம், என்பன விகுதிகள்.
ஒன்று என்பதறிந்த முந்தியல் மாந்தனுக்கு, இரண்டு பெரியதாம். இரண்டறிந்தபோது,மூன்று பெரிதாம். நான்கு அறிந்தகாலை, இரண்டு சொற்பமாகும்.
இப்போது கோடிக்கணக்கில் எண்ணுகிறார்கள்.
சொற்பம் = சொல்லத்தக்க சிற்றளவு, சிறு எண்ணிக்கை.
-
17th August 2011 12:22 PM
# ADS
Circuit advertisement
-
2nd September 2011, 06:54 PM
#2
Senior Member
Seasoned Hubber
தான் தாம்
அவர்தானே என் தெய்வம்.
இது இக்காலத்தில் சரியென்று எண்ணப்படுகிறது. ஆனால் பழந்தமிழ் இலக்கணப்படி,
அவர்தாமே என் தெய்வம்
என்றிருக்கவேண்டும்.
அவர் - உயர்வுப் பன்மை அல்லது மரியாதைப் பன்மை.
எதுவானாலும் பன்மை பன்மைதானே.
தான் (ஒருமை) : தாம் (பன்மை).
அவன் தானே என் தெய்வம்.
இதில் பணிவு இல்லை ஆனால் இலக்கணம் உண்டு.
அவர் என்பது பன்மை வடிவில் இருந்தாலும் அதனால் சுட்டப்படும் பொருள் ஒருமைப் பொருளே என்பர் சிலர். ஆகையால், அவர்தானே என் தெய்வம் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதே என்று சிலர் வாதாடுவர்.
இவ்விலக்கண விதி சொல்வடிவு நோக்கியது. சொற்பொருள் பற்றியதன்று.
Last edited by bis_mala; 2nd September 2011 at 09:02 PM.
Reason: add note
B.I. Sivamaalaa (Ms)
Bookmarks