-
7th August 2011, 05:59 PM
#11
Moderator
Diamond Hubber
நாகம்மா --சன் தொலைக்காட்சி - பாடல் உங்களுக்காக இங்கு வலை ஏற்றப்பட்டுள்ளது
ஒலி வடிவில்...
நாகம்மாவின் அபூர்வ சக்தி
தன் உடம்பு முழுக்க விஷத்தன்மையோடு நாகக்கன்னியாக இருக்கும் நந்தினி உடல் நலம் சரியில்லாதவனை தொட்டால் அவன் நோய் விலகுகிறது. உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவனை தொட்டதும் உயிர் திரும்புகிறது.
இதெல்லாம் எப்படி நடக்கிறது? தான் யார்? என்ற உண்மையை தெரிந்து கொள்ள விரும்பும் நாகம்மா, அதற்காக பஞ்சநாத சித்தரை சந்திக்கிறாள். சித்தர் தனது உதவியாளர் அனுமந்தையாவை நாடி எடுக்க அனுப்புகிறார். ஆனால் அனுமந்தையா நாடி கிடைக்காமல் திரும்பி வருகிறார். அவர் பஞ்சநாத சித்தரிடம், "மந்திரமூர்த்தி சாஸ்திரி வீட்டில் இருக்கும் ஆஸ்திகர் நாடியை சர்ப்பம் ஒன்று காவல் காத்திட்டிருக்கு. அது என்னை நாடியை தொட அனுமதிக்கவில்லை. அதனால் மந்திரமூர்த்தி சாஸ்திரி என்னிடம், `இதற்கு உரியவங்க வந்து இதை எடுக்கலாம். நீங்க நந்தினியை அழைச்சிட்டு வாங்க' என்று கூறியதாக சொல்கிறார்.
உடனே `நான் வருகிறேன்' என்று பஞ்சநாத சித்தரிடம் நந்தினி கூற, அவர் அவளை அனுமதிக்காமல், தானே காலமும் நேரமும் வரும் போது அழைத்து செல்வதாக கூறுகிறார்.
நாடியைப் பற்றிய தகவலை பாம்புகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் பேராசிரியர் நாதன் அறிகிறார். அவர் அந்த சர்ப்பத்தை பார்க்கிறேன். அந்த ஆஸ்திகர் நாடியை எடுக்கிறேன் என்று சபதம் விடுகிறார்... சித்தரோ, எதற்காக மரணத்தை நீயே தேடிப் போகிறாய்? என்று தடுக்கிறார்.
ஆஸ்திகர் நாடி நந்தினியின் கைக்கு கிடைத்ததா... அவளைப் பற்றி உண்மைகள் அவளுக்கு தெரிந்ததா.. பேராசிரியர் நாதன் என்ன ஆனார்? என்பதே நாகம்மாவின் மீதிக்கதை..
நந்தினியாக நாக கன்னியாக நடிகை சாயாசிங் நடிக்கிறார். பேராசிரியர் நாதனாக சேத்தன் வருகிறார். தொடரை இயக்குபவர் சி.ஜெரால்டு. கதை, திரைக்கதை: இந்திரா சவுந்தர்ராஜன், ஒளிப்பதிவு- விஸ்வநாதன்.
சனி மற்றும் ஞாயிறு இரவு 9.30 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் இது.
ஒரு முறை ஒளி வடிவில் பார்த்து மகிழ:
Last edited by aanaa; 26th December 2011 at 11:08 PM.
"அன்பே சிவம்.”
-
7th August 2011 05:59 PM
# ADS
Circuit advertisement
Bookmarks