I happened to listen an alaap in Simhendramadhyamam ragam , followed by a short song on Lord Shiva from an old film , may be "ThiruviLaiyadal" by the great TRMahalingam yesterday. I really doubt if any of our current TFM crop singers can even rise up to 10% of his sterling voice quality and range. Wow!!! That alaap alone deserved a grammy. They don't make people with the kind of rare talent like MKT,TRM,PUC,SG,KJY,SPB,JC these days.
நல்ல பாட்டு, மகாலிங்கம் சுசீலா டுஒவின் குரல்களில். ஈ வி சரோஜா என்றுமே அழகாக தோன்றுவார். என்ன ஆச்சரியம் என்றால் இவர் மெயின் heroine ரோல்களில் அதிகம் வந்ததில்லை. ஏன் என்ற காரணம் எனக்கு புடி படவில்லை. தி ஆர் raamannavai திருமணம் செய்து கொண்டு சீக்கிரம் திரை உலகை விட்டு விட்டார் என்று எனக்கு தோன்றுகிறது.
இந்த படத்தில் மோர் famous பாட்டுக்கள் என்றால் "மழை கொட்டு கொட்டு கொட்டுது பார் அங்கே" அண்ட் "கோடி கோடி இன்பம் பெறவே தேடி வந்த செல்வம், கொஞ்சும் சலங்கை கலீர் கலீர் என ஆட வந்த தெய்வம்" ஆகியவை. நான் சிறு வயதில் பார்த்த படம் நினைவுகள் சிலவே உள்ளன.
இதே காலகட்டத்தில் மும்தாஜ் மகல்=ஷாஹ் ஜெஹனை வைத்து அதே கே வி மகாதேவன் சி எஸ் ஜெயராமனை-சுசீலாவை வைத்து படைத்த மிக பிரபலமான பாடல் "காவியமா நெஞ்சின் ஓவியமா" என்ற அருமையான ஒன்று. சிவாஜியும் எம் என் ராஜமும் இணைந்து தாஜ் மகாலில் தோன்றும் காட்சி "பாவை விளக்கு" படத்தில் வந்தது. அது மோர் famous என்று நினைக்கிறேன். அகிலன் novel ஐ வைத்து எடுக்க பட்ட படம். பலாப் ஆகி விட்டது. ஆனால் பாடல்கள் எல்லாமே அருமை.
அன்பு tfml அவர்களே,
நான் பல வருடங்களாக எல்லா வலைத்தளங்களிலும் தேடிக் கிடைக்காத ஒரு பாடல் சமீபத்தில் கிடைத்தது.
அது எந்தப் பாடல் என்று உங்களுக்கே தெரிந்திருக்கும்.
ஆம்!
ஷண்முக நதியோரம் சரவணப் பொய்கையிலே
உன்முகம் காணுதய்யா முருகய்யா
உலகமே மயங்குதய்யா ...என்ற பாடல்தான்.
இந்தப் பாடலை உங்களிடமும் நான் கேட்டிருந்தேன்.
இலங்கை வானொலியில், சிலநாட்களுக்கு முன்னர், காலை ஒலிபரப்பில், இந்தப் பாடல் வானில் கலந்து வந்த போது அதை எனது தம்பி பதிவு செய்து நமது பேராசிரியரிடம் கொடுத்தான்.அவர் அதை எனக்கு அனுப்பி வைத்தார்.
குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களை தன வீட்டிற்கு அழைத்து , அவரது இசையில் ஒரு பக்திப் பாடல் பாடவேண்டும் என்ற தன விருப்பத்தை தெரிவித்த போது,T ..R .மகாலிங்கம் அவர்களுக்காக எழுதி இசை அமைக்கப் பட்ட பாடல்.
இதோ அந்த என்விருப்பப் பாடல்;-
Bookmarks