-
5th June 2011, 06:55 PM
#261
Senior Member
Seasoned Hubber
"உடைஇலை"
"உடைஇலை நடுவணது இடைபிறர்க்கு இன்றித்,
தாமே ஆண்ட ஏமம் காவலர்"
For the full stanza, please refer to:
Post 225, 31st May 2011 10:20 PM
http://www.mayyam.com/talk/showthrea...827#post692827
உடையிலை என்ற கூட்டுச்சொல்லைப் பார்ப்போம்.
பழங்காலத்தில், மனிதன் ஆடை நெய்ய அறியுமுன், இலைகளை உடையாக அணிந்திருந்தான்.
மேற்குறித்த புற நானூற்றுப் பாட்டு, உடையாக இடுப்பில் அணியப்படும் இலையின் அளவேனும் பிறருக்கு விட்டுக்கொடுக்காமல் தாமே ஆண்ட காவலால் சிறந்த
மன்னர் என்று பொருள் படுகிறது.
சீரை என்ற சொல் மரப்பட்டையைக் குறிக்கிறது. இதுவும் எடுத்துச்
ெசெதுக்கப்பட்டு இடுப்பில் அணியப்பட்டது.
சீரை - சீலை - சேலை
சீரை - சாரி தமிழ்ச்சொல் பாகத மொழிகள் வழிப் பரவியது.
தமிழின் பழமைக்கு இவைபோன்ற சொற்களும் சான்று
பகர்கின்றன
Last edited by bis_mala; 22nd June 2011 at 09:04 PM.
Reason: typo
B.I. Sivamaalaa (Ms)
-
5th June 2011 06:55 PM
# ADS
Circuit advertisement
-
22nd June 2011, 09:05 PM
#262
Senior Member
Seasoned Hubber
காகிதம்
மரத்தின் உள்ளீடு குழம்பாக்கப்பட்டு, ஒரு வடிகட்டுத் தட்டில்
பரப்பி ஊற்றி, நீரை அகற்றிவிட்டுக் காயவைத்துக் காகிதம்
செய்யப்படுகிறது.
காயவைத்தலே இதில் இறுதி நடவடிக்கை ஆதலின், "காய்தல்"
என்ற கருத்திலிருந்து:
காய் - காயிதம் - காகிதம் என்று சொல்லமைந்தது.
பேச்சுவழக்கில் "காயிதம்" என்றே சொல்லப்படும்.
இதம் என்ற ஈறு, இது+ அம் என்ற சொற்களின் கூட்டு.
-
23rd June 2011, 09:15 PM
#263
Senior Member
Seasoned Hubber
ya > ka affinity.
காயிதம் என்ற மக்கள்வழக்குச் சொல், காகிதம் என்று திரிந்தது, அல்லது திருத்தம் பெற்றது.
"அவரெழுதிய காயிதம் வந்து கிடைத்தது" என்று சொல்வர். இப்போது பெரும்பாலும் லெட்டர் என்ற ஆங்கிலச் சொல்லையே பயன்படுத்துகிறார்கள்.
யகரத்திற்கும் ககரத்திற்குமுள்ள அணுக்கத்தொடர்பினை இப்போது சிறிது காண்போம்.
நேயம் > (ஸ்நேயம்) > ஸ்நேகம். (ய> க)
நெய்தல் என்ற சொல்லில் தோன்றியதே நேயம் என்ற சொல். நெயவில் (நெசவில்) இழைகள் நெருங்கிப் பிணைகின்றன. அதுபோன்ற ஒரு நெருக்கமே நேயமாயிற்று.
நெய்(தல்) > நெய +அம் > நேயம்.
இதை முதனிலை நீண்டு விகுதிபெற்ற பெயர்ச்சொல் எனலாம்.
சூடம் என்பது முதனிலை நீண்டு விகுதிபெற்றதுபோல. சுடு+அம் =
சூடு+ அம் = சூடம்.
நேயம் என்பது நேசம் > நேஸ என்று திரியும்.
-
25th June 2011, 03:29 AM
#264
Senior Member
Seasoned Hubber
Another example
மேலும் ஓர் எடுத்துக்காட்டினைப் பார்க்கலாம்:
ஆயிற்று > ஆகிற்று.
{ஆதல் = ஆகுதல்.}
குறிப்பு:
நாயர் என்ற சொல் (சாதி அல்லது பட்டப்பெயர்) நாகர்
என்பதன் திரிபு என்று கூறும் ஆய்வாளரும் உண்டு. இதில்
நாம் கவனிக்கவேண்டியது: ய<>க எழுத்து அல்லது ஒலிகளின்
அடைவு ஆகும். அதாவது க என்பது ய -வாகத் திரியுமென்கி-
றார்கள்.
Last edited by bis_mala; 25th June 2011 at 04:14 AM.
Reason: note add
B.I. Sivamaalaa (Ms)
-
25th June 2011, 09:27 PM
#265
Senior Member
Seasoned Hubber
ya > ka continued
இதுகாறும் ய>க திரிபுச் சொற்களில் நாம் கண்டவை யாவும்
நெடிலில் தொடங்கின.
இனி, உய்த்தல் என்ற சொல்லைக் காண்போம்.
இது பேச்சுமொழியில் வழங்குவதாகத் தெரியவில்லை. நல்லா-
சிரியன்மார்தம் எழுத்துக்களில் இச்சொல்லைப் பயன்படுத்தக்-
காணலாம்.
இதில் வரும் யகர ஒற்று, கிகரமாகத் திரியும்.
உய்த்தல் > ( ஊயித்தல்)> ஊகித்தல்
உகரக் குறிலும் நெடிலாகியே, சொல் திரிகிறது.
மற்ற சொல்வடிவ மாற்றங்களின் போக்கைப் பின்பற்றியே
"ஊயித்தல்" என்பது வருவித்துரைக்கப்பட்டது..
Last edited by bis_mala; 26th June 2011 at 01:28 PM.
B.I. Sivamaalaa (Ms)
-
26th June 2011, 06:35 AM
#266
Senior Member
Seasoned Hubber
ya-ka continued
அகலியை - அகலிகை
இதில் வரும் "யை - கை" மாற்றத்தையும் கவனிக்கவேண்டும்.
Note:
மாமன் ஒரு நாள் மல்லிகைப் பூ கொடுத்தான் என்பதை "...........மல்லியப்பூ............" என்று ..............உச்சரிக்கிறார்கள்? .......... என்றுவினா எழுப்பிக் கொண்டு விடை கூறுங்கள்.
Last edited by bis_mala; 26th June 2011 at 06:56 AM.
Reason: a postscrpt note for you
B.I. Sivamaalaa (Ms)
-
29th June 2011, 10:44 AM
#267
Senior Member
Seasoned Hubber
ya > ka affinity continued
முன் இடுகையின் தொடர்ச்சி.
இன்னோர் எடுத்துக்காட்டு:-
வையை - வைகை.
ஆற்றின் பெயர்.
Note:
"The key to understanding how languages evolved may lie in their
structure, not their vocabularies, a new report suggests. Findings
published in the journal Science indicate that a linguistic technique
that borrows some features from evolutionary biology tools can unlock
secrets of languages more than 10,000 years old."
Scientific American (23 September 2005)
-
9th July 2011, 11:35 AM
#268
Senior Member
Seasoned Hubber
The word "jati"
பெற்றம் எருமை புலி மரை புல்வாய்
மற்று இவை எல்லாம் போத்து எனப்படுமே. (தொல்.சொல் 43)
நீர் வாழ் சாதியும் அது பெறற்கு உரிய
(தொல்.சொல். 44)
தொல்காப்பியத்தில் "சாதி" என்ற சொல் உள்ளது. ஆனால் வேதங்களில் இல்லை என்பர். அங்கு "வர்ண" என்ற சொல்லே உள்ளது.
ஆனால் தொல்காப்பியர் காலத்தில், நீர்வாழ் இனங்களைக் குறிக்கவே அது வழங்கப்பட்டது. "சாதி" என்பதை மனிதனுக்கு வழங்கியது ஒரு மாற்றமே ஆகும்.
-
10th July 2011, 07:10 PM
#269
Senior Member
Seasoned Hubber
A quick summary of some words for you....
அமரர், - (மரித்தல் ) அ+மரி+அர்
அமிழ்து, அம்= சோறு. அம்+து, அம்+இழ்+து.
அவி - அவித்தல், இங்கு நெய்யில் இட்டு அவித்தல்.
ஆசாரம் - ஆ = ஆகுதல்; சார் (தல்_); சார் >சாரம். ஆவன மேற்கொண்டு சார்ந்து தொடர்ந்து ஒழுகுதல்;
ஆசை - மனமொன்றன்பால் அசைந்து செல்லுதல் (முதனிலை திரிந்த தொழிற்பெயர் _
ஆதி - ஆக்க காலம். ஆதல் - ஆதி
இந்திரன் - Pl refer to FSG's discussion before. Elaborately explained.
( Pl see notes below ** )
இலக்கம்- இலக்கித்தல். வரையப்பட்ட குறி.,
கணம் - கண் = இடம்; கண்+அம் > கணம்.
கருமம், கருத்தல் = செய்தல் என்பது மறைந்த தமிழ்ச் சொல். கரு > கருவி.
கரு+அணம் = காரணம். ஏன் செய்யப்பட்டதென்பது.
கரு ,பழைய மறைந்த வினைச்சொல்
காமம், காமன், - கா, காம், காமுறு, காமம். காமன் என்பவை இந்தோ ஐரொப்பிய மொழிகளில் இல்லை.
காலம், = கால் +அம்; நீண்டு செல்வது. Refer to S K Chatterji: not found in Avestan. (Dravidian Tamil word.)
சலம்,= " சல சல" ஒலியடிப்படைச் சொல்.
சூது; சூழ்தல் என்ற வினையடிப் பிறந்த சொல்.
சூழ் > சூ > சூது.
சூதர்,
தண்டம்- தண்டப்படுவது; குற்றத்திற்காகப் பறிக்கப்படும் தொகை.
தவம் : தபு> தபு+அம் > தபம் > தவம்; தபுதல் - கெடுதல்; பற்று அழித்தல்.
தானம்> தா+(அ)ன்+அம், பிறருக்குத் தரப்படுவது;
தொடரும்.
Notes:
http://www.mayyam.com/talk/showthrea...ll=1#post49490
Originally Posted by
"FSG" 49490
Excerpts from FSG:
Inthran is eulogized in vedhas.
Inthran/varunan= inththu=im+th+u- Im and U are suttu words specified the water/cold water of river. varunan=vari(alai) again a name for water flowing/sea.
The same inththran was god of masses when tamils turned agriculturists. The same inththran was turned sivan later.
The god of water based/agriculturists was inththran. That is why
some of the castes of tamilnadu called themselves inthrakula katthiriyar(Shatriyar) and inththrakula vellalar.
Last edited by bis_mala; 20th July 2011 at 09:19 PM.
Reason: add ref & notes
B.I. Sivamaalaa (Ms)
-
10th July 2011, 08:59 PM
#270
Senior Member
Seasoned Hubber
தூது
தூது :
தூது செல்பவன் தூயவனாய், தன்னை அனுப்பியவனுக்கு உண்மையுள்ளவனாய், மறைக்கவேண்டியவற்றை மறைத்து வெளியிடவேண்டியனவற்றை வெளியிட்டு, பயன் ஈட்டி வருபவனாய் இருக்கவேண்டும். இன்னும் பிற நற்குணங்களை திருக்குறள் முதலிய நூல்களில் காண்க.
தூ = தூய்மை.
தூது = தூதுவனாய்ச் சென்று செய்யும் வேலைகள்
தூதன் = தூது+அன்.
தூதுவன் = தூது+வ்+அன்.
Last edited by bis_mala; 11th July 2011 at 05:57 AM.
Reason: amend
B.I. Sivamaalaa (Ms)
Bookmarks