Quote Originally Posted by P_R
Quote Originally Posted by venkkiram
Quote Originally Posted by P_R
Hmm..I read it in the morning. It seems to have been taken down subsequently hmmm
உங்களுக்கு பிடிச்சதா?
பிடிச்சிது..வழக்கம்போல

அகத்தியர் அணி
அவர் உள்ளுருப்புகளுக்கு சென்றடைய கொஞ்ச நேரமாகும்

அவரோட நகைச்சுவை கட்டுரைகள் இன்னும் கொஞ்சம் கச்சிதமா எழுத வாய்ப்பு இருக்குன்னு தோணுது. உதாரணம் தமிழியர்கள் பற்றின இடுகை.

அவரோட சில சிறுகதைகள், குறுநாவல்கள் தான் படிச்சிருக்கேன். நாவல் பளு தூக்கணும் one of these days
நானும் இந்த வரிகளை ரொம்ப ரசித்து சிரித்தேன்.

-----------
அன்னிக்கு அவனுக அடிச்ச மூத்திரம் காய மூணுநாளாச்சுன்னு நூஸ் வந்திருக்கு சார்…

இப்பல்லாம் ஜனங்க வீடுகளுக்கே போறதில்லீங்க…போக விடுறதில்லைன்னு வச்சுக்கிடுங்க… அப்டியே கூட்டத்திலே இருந்து கூட்டத்துக்கு போறதுதான்… நாங்க அந்தக்கூட்டத்த அப்டியே பத்திக்கிட்டு ஈரோட்டுக்கு கொண்டு போனோம். அவங்க அப்டியே தர்மபுரிக்கு கொண்டு போனாங்க…கடேசியிலே போனவாரம் நாகர்கோயிலில் கூட்டம்… அதான் அதோட பீக்கு…

சார்…தமிழ்நாடே தெக்குபக்கமா கொஞ்சம் சரிஞ்சிருக்கு சார், எடை தாங்காம’

நான் சிறுநீர் அழுத்தத்துக்கு ஆளானேன்.
-------------------

Quote Originally Posted by P_R
உதாரணம் தமிழியர்கள் பற்றின இடுகை.
எந்த இடுகைன்னு மறந்துப் போச்சி! link கொடுங்க.

எனக்கு ஜெயமோகன் பரிச்சயமானது விகடனில் தொடராக அவர் எழுதிய சங்கச் சித்திரங்கள் தொடர் மூலம் தான். ஒவ்வொரு வாரமும் அசத்தலா இருந்தது. நேரம் கிடைக்கும் போது அதை இன்னொரு முறை வாசிக்க விருப்பம் இருக்கிறது.