நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
நிலைமை என்னவென்று தெரியுமா?
நிலைமை என்னவென்று தெரியுமா?
நினைவை புரிந்து கொள்ள முடியுமா?
என் நினைவை புரிந்து கொள்ள முடியுமா?

கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்
கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்
கவனம் என்னவென்று தெரியுமா?
கவனம் என்னவென்று தெரியுமா?
கருத்தை புரிந்து கொள்ள முடியுமா?
என் கருத்தை புரிந்து கொள்ள முடியுமா?

என்றும் பேசாத தென்றல்
இன்று மட்டும் காதில் வந்து
ஆ ஆ ஆ ஆஆஅ
என்றும் பேசாத தென்றல்
இன்று மட்டும் காதில் வந்து
இன்பம் இன்பம் என்று சொல்வதும் என்ன?

ஓர விழி பார்வையிலே
உள்ளதெலாம் சொல்லி விட்டு
ஆஅ ஹா ஹா...
ஓர விழி பார்வையிலே
உள்ளதெலாம் சொல்லி விட்டு
ஒன்றும் தெரியாதது போல்
கேட்பதும் ஏனோ ?

மலர்க்கொடி தலையாட்ட மரக்கிளையும் கை நீட்ட
மலர்க்கொடி தலையாட்ட மரக்கிளையும் கை நீட்ட
கிளையில் கொடி இணையும்படி ஆனதும் ஏனோ ?
கிளையில் கொடி இணையும்படி ஆனதும் ஏனோ ?

இயற்கையின் வளர்ச்சி முறை இளமை செய்யும் கிளர்ச்சி இவை
இயற்கையின் வளர்ச்சி முறை இளமை செய்யும் கிளர்ச்சி இவை
ஏனென்று நீ கேட்டால் யானறிவேனோ?
ஏனென்று நீ கேட்டால் யானறிவேனோ?

நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
நிலைமை என்னவென்று தெரியுமா?
நினைவை புரிந்து கொள்ள முடியுமா?
என் நினைவை புரிந்து கொள்ள முடியுமா?

கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்
கவனம் என்னவென்று தெரியுமா?
கருத்தை புரிந்து கொள்ள முடியுமா?
என் கருத்தை புரிந்து கொள்ள முடியுமா?

long long beforeஸ்ரீ.இளையராஜாவின் காதல் கசக்குதையா or lover boy 's
கண்ணுக்குள் நூறு நிலவா... or நாட்டியப் பேரொளியின் மறைந்து இருந்து பார்க்கும் .....
பட்டுக்கோட்டையாரின் காதல் வரிகள் in ராகா ஷண்முகப்ரியா ...லீலா & T .M .S ....இசை - வெங்கட்ராமன்.S (1960)

(paigham-C.Ramachandra in hindi)

கையிலே வாங்கினேன்......பட்டுக்கோட்டையாரின் தத்துவம் .
vinatha.