[tscii]
Quote Originally Posted by Murali Srinivas
If only you had mentioned that Jayamohan is the character name of Mams in Aksharangal [the teacher role - always felt Mam - IVSasi -MT combo was superb], less initiated would have understood it well.
He meant writer Jeyomahan, who wrote a series of posts about Lohitadas when he passed away. In those posts he contrasted the way MT Vasudevan Nair and Lohitadas portrayed their women.

Quote Originally Posted by [url=http://jeyamohan.in/?p=3310
ஜெயமோகன்[/url]]எம்.டி.வாசுதேவன் நாயரின் கதாநாயகிகளுக்கும் லோகியின் கதாநாயகிகளுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. எம்.டியின் பெண்கள் எல்லாரும் ரெண்டு வார்ப்பு. 1, திமிரான பெரிய இடத்துப்பெண்கள்.2. அடக்கமான அன்பான கிராமத்துப் பெண்கள் இன்னொரு வகை. இந்த இரண்டாம்வகைப்பெண்கள்தான் துக்கபுத்திரி என்று கேரள மனதிலே பதிந்திருக்கிறார்கள். அந்தமாதிரி கதாபாத்திரங்களைத்தான் பிறகும் நிறைய்பேர் உருவாக்கினார்கள் . ஆள்கூட்டத்தில் தனியே என்றபடத்திலே சீமா பண்ணிய கதாபாத்திரத்தை உதாரணமாகச் சொல்லலாம். அவள் பணம் இல்லாதவள். ஆகவே கைவிடப்படுகிறாள். ஆனால் அது அன்பையும் பாசத்தையும் காட்ட தடையாக இல்லை. ஏனென்றால் அது அவளுடைய இயல்பு. அதேமாதிரி கதாபாத்திரம் மீண்டும் மீண்டும் எம்டி கதைகளிலே வரும். சீமாவே நாலைந்து பண்ணியிருக்கிறார்.

ஆனால் லோகியின் பெண்கள் வேற் மாதிரி. அவர்களும் மிகவும் கஷ்டத்தில் இருப்பார்கள். ஆனால் அந்தக் கஷ்டத்தை துணிச்சலாக சமாளி¢ப்பார்கள். எதற்கும் பயப்பட மாட்டார்கள். ‘வீண்டும் சில வீட்டுகாரியங்கள்’ படத்தில் வரக்கூடிய சம்யுக்தாவர்மா கதாபாத்திரம் போல. துணிந்து நின்று உலகத்தை சமளிக்கிற அபலைகள் அவர்கள்.