-
20th June 2009, 06:22 PM
#11
Moderator
Diamond Hubber
புத்தகம்படி பரிசைப்பிடி
புத்தகம் வாசிக்கிற பழக்கத்தை எல்லோரிடமும் ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு தமிழரின் இல்லங்களிலும் நூல்நிலையம் அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் மக்கள் தொலைக்காட்சியில் தொடங்கப்பட்டது ``புத்தகம்படி, பரிசைப்பிடி'' நிகழ்ச்சி.
இதில் பொது அறிவு கேள்வி கேட்கப்படும். அதற்கு நான்கு பதில்கள் தரப்படும். அதில் உரிய பதிலை தேர்ந்தெடுத்துச் சொன்னால் புத்தகம் பரிசு. ஒருவர் எத்தனை புத்தகங்களை வேண்டுமானாலும் பரிசாகப் பெறலாம். தவறாக பதில் சொன்னால் இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும். அந்த வாய்ப்பையும் தவறவிட்டால் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற வேண்டும்.
ஞாயிறு தோறும் மாலை 6.03 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி இது. தொகுத்து வழங்குபவர் மாலா.
நன்றி: தினதந்தி
-
20th June 2009 06:22 PM
# ADS
Circuit advertisement
Bookmarks