-
15th May 2008, 11:49 AM
#281
Senior Member
Platinum Hubber
-
15th May 2008 11:49 AM
# ADS
Circuit advertisement
-
15th May 2008, 02:02 PM
#282
Senior Member
Diamond Hubber
wow power !
அலைகடல் கொந்தளிக்கையிலே அகக்கடல்தான் களிப்பதுமேன்?
நிலமகளும் துடிக்கையிலே நெஞ்சகந்தான் துள்ளுவதேன்?
இடி இடித்து எண்திசையும் வெடிபடும் அவ்வேளையிலே
நடனக் கலைவல்லவர்போல் நாட்டியந்தான் ஆடுவதேன் ?
இது எப்படி இருக்கு ?
-
15th May 2008, 02:16 PM
#283
Senior Member
Diamond Hubber
power..
ungalukkaga idho nandhini..
( vinatha aduthadhu manimekalai pOduvaanga :P )
-
15th May 2008, 03:31 PM
#284
Senior Member
Platinum Hubber
Originally Posted by
madhu
power..
ungalukkaga idho nandhini..
( vinatha aduthadhu manimekalai pOduvaanga :P )
-
15th May 2008, 03:32 PM
#285
Senior Member
Platinum Hubber
Originally Posted by
madhu
wow power !
அலைகடல் கொந்தளிக்கையிலே அகக்கடல்தான் களிப்பதுமேன்?
நிலமகளும் துடிக்கையிலே நெஞ்சகந்தான் துள்ளுவதேன்?
இடி இடித்து எண்திசையும் வெடிபடும் அவ்வேளையிலே
நடனக் கலைவல்லவர்போல் நாட்டியந்தான் ஆடுவதேன் ?
இது எப்படி இருக்கு ?
kavitthaiyil kavithuvam niRainthu kaanapadugirathu
anaal ippadiyum koodava manithargaL irupaargaL endru ninaithaal
but ithai mazhaik kaala kavithai endru ninaithaal nandraaga irukkirathu
-
15th May 2008, 05:33 PM
#286
Senior Member
Diamond Hubber
Originally Posted by
Shakthiprabha
Originally Posted by
madhu
wow power !
அலைகடல் கொந்தளிக்கையிலே அகக்கடல்தான் களிப்பதுமேன்?
நிலமகளும் துடிக்கையிலே நெஞ்சகந்தான் துள்ளுவதேன்?
இடி இடித்து எண்திசையும் வெடிபடும் அவ்வேளையிலே
நடனக் கலைவல்லவர்போல் நாட்டியந்தான் ஆடுவதேன் ?
இது எப்படி இருக்கு ?
kavitthaiyil kavithuvam niRainthu kaanapadugirathu
anaal ippadiyum koodava manithargaL irupaargaL endru ninaithaal
but ithai mazhaik kaala kavithai endru ninaithaal nandraaga irukkirathu
இது வந்தியத்தேவனும், அருள்மொழி வர்மனும் புயலில் சிக்கிக் கொள்ளும் சமயத்தில்.. போதத்தீவில் தங்கி இருக்கும் பூங்குழலி அவர்களைக் காப்பாற்றும் முன் பாடும் பாடல்..
-
15th May 2008, 06:06 PM
#287
Senior Member
Platinum Hubber
Whats the exact context (indirect meaning) for this song
I mean it sounds weird
-
15th May 2008, 06:56 PM
#288
Senior Member
Diamond Hubber
power :
the famous "alaikadalum" song EdhO illAdha onRai ninaithu Engum mansil irundhu pAduvadhu..
indha song...
poonkuzhaliyai poRutha varai she was so happy..
arunmozhi varmarai pArthu pEsiyAchu.. avarai jAkkiraidhiyA kappalil EtRi anuppiyAchu..thankku kodutha vElaiyai mudichAchu..
adhanAl santoshamA manasu irukkumbOdhu..
veLi ulagathil puyalum sooRaavaLiyum adithAlum
avaL manasu santOshamA irukkAm..
adhAn ippadi oru pAttu..
-
15th May 2008, 07:00 PM
#289
-
15th May 2008, 07:09 PM
#290
Senior Member
Diamond Hubber
"பூங்குழலி படகில் ஏறிக்கொண்டாள். கடலை நோக்கிப் படகைச் செலுத்தினாள். நதியின் ஓட்டத்தோடு சென்றபடியால் சீக்கிரத்திலேயே தொண்டைமானாற்றின் முகத்துவராத்தை அடைந்துவிட்டாள். பின்னர் கடலில் படகைச் செலுத்தினாள். சிறிது நேரத்துக்கெல்லாம் சுழிக்காற்று அடிக்கப் போகிறது என்று அவளுக்குத் தெரிந்து போயிற்று.சுழிக்காற்றின் முன் அறிகுறிகளை அவள் நன்கு அறிந்திருந்தாள். முதல்நாள் இரவு சந்திரனைச் சுற்றிச் சாம்பல் நிற வட்டம் காணப்பட்டது. இன்றைக்குப் பகலெல்லாம் ஒரே புழுக்கமாயிருந்தது. மரங்களில் இலை அசையவில்லை. அதோ தென்மேற்கு மூலையில் கரிய மேகத்திட்டுக்கள் கிளம்பிவிட்டன. சீக்கிரத்தில் சுழிக்காற்று அடிக்கப்போவது நிச்சயம். கடலின் கொந்தளிப்பு அற்புதக் காட்சியிருக்கும். ஆனால் சுழிக்காற்று அடிக்கப் போவது நிச்சயம். கடலின் கொந்தளிப்பு அற்புதக் கடலில் அகப்பட்டுக் கொள்ளக் கூடாது. பூதத் தீவுக்குப் போய்த் தங்கியிருப்பது நல்லது. அங்கே தங்கியிருந்தால் சுழிக்காற்றினால் கடலிலே உண்டாகும் அல்லோல கல்லோலத்தை நன்றாகப் பார்த்துக் களிக்கலாம். காற்று அடித்துவிட்டுப் போன பிறகு, கடலிலும் கொந்தளிப்புச் சிறிது அடங்கிய பிறகு, படகைக் கடலில் செலுத்திக்கொண்டு கோடிக்கரைக்குப் போகலாம். இப்போது என்ன அவசரம்? கோடிக்கரைக்கு இப்போது அந்த மரக்கலம் அநேகமாகப் போயிருக்கும். நல்லவேளை சுழிக்காற்றில் அது அகப்பட்டுக் கொண்டிராது. இளவரசர் இத்தனை நேரம் பத்திரமாகப் போய் அங்கே இறங்கியிருப்பார்.அல்லது ஒருவேளை மாமல்லபுரத்துக்கே போயிருந்தாலும் போயிருப்பார். எங்கே போயிருந்தால் நமக்கு என்ன? சுழிக்காற்றில் அகப்பட்டுக் கொண்டிருக்கமாட்டார்; அந்த வரைக்கும் திருப்தி அடையலாம்.
..............
இவ்வளவு அல்லோலகல்லோலங்களையும் பார்த்துக் கொண்டு பூங்குழலி வெகுநேரம் நின்றாள். அவள் உடம்பு காற்றில் ஆடிய மரங்களைப் போல் ஆடியது. அவள் கூந்தல் அவிழ்ந்து காற்றில் பறந்தது. மழை அவள் உடலை நனைத்தது. இடிமுழக்கம் அவள் செவிகளைப் பிளந்தது. மின்வெட்டு அவள் கண்களைப் பறித்தது. இதையெல்லாம் அவள் பொருட்படுத்தவேயில்லை. வெகு நேரம் அக்காற்றிலும் மழையிலும் அவள் நின்றாள். அவள் உள்ளம் வெறி கொண்டு கொந்தளித்தது. தன்னைச் சுற்றிலும் நடைபெறும் அற்புத கோலாகலமெல்லாம் தான் பார்த்துக் களிப்பதற்காகவே நடப்பதாக எண்ணிப் பெருமிதத்துடன் அநுபவித்துக் கொண்டிருந்தாள்.
இடையிடையே அவளுக்கு இளவரசர் அருள்மொழிவர்மரின் நினைவு வந்துகொண்டிருந்தது. அச்சமயம் அவர் கோடிக்கரை சேர்ந்து பத்திரமான இடத்தில் தங்கியிருப்பார் என்று எண்ணினாள். ஒரு வேளை தன் பெற்றோர் வீட்டிலே கூடத் தங்கியிருக்கலாம்; அல்லது நாகப்பட்டினம் சென்று அங்கே இராஜ மாளிகையில் தங்கியிருக்கலாம். ஒரு வேளை கடலில் கப்பலிலேயே இருந்திருப்பாரோ? இருந்தால் என்ன? அவர் ஏறிச் சென்ற பெரிய மரக்கலத்தை எந்தச் சுழிக்காற்றுதான் என்ன செய்துவிடும்?
................
பூங்குழலி படகைக் கட்டவிழ்த்து நிமிர்த்திக் கடலில் தள்ளி விட்டாள். தானும் ஏறிக் கொண்டாள். அவளுடைய இரும்புக் கரங்களின் பலம் முழுவதையும் உபயோகித்துத் துடுப்பை வலித்தாள். கரையில் வந்து மோதிய அலைகளைத் தாண்டி அப்பால் போகும் வரையில் மிகக் கடினமான வேலையாயிருந்தது. அப்புறம் அவ்வளவு கஷ்டமாக இல்லை வழக்கம்போல் சர்வசாதாரணமாக அவளுடைய கரங்கள் துடுப்பை வலித்தன. படகு உல்லாஸமாக ஆடிக் கொண்டு மெள்ள மெள்ள நகர்ந்து சென்றது.
பூங்குழலியின் உள்ளத்தில் குதூகலமும் பொங்கியது. அவள் படகிலே வழக்கமாகப் பாடும் பழைய கீதம் தானாகவே புதிய உருவம் கொண்டது. அலைகளின் இரைச்சலை அடக்கிக் கொண்டு அந்தக் கீதம் அவளுடைய கம்பீரமான இனிய குரல் வழியாக வௌிவந்து நாற்றிசையும் பரவியது:-
"அலைகடல் கொந்தளிக்கையிலே அகக்கடல்தான் களிப்பதுமேன்?
நிலமகளும் துடிக்கையிலே நெஞ்சகந்தான் துள்ளுவதேன்?
இடி இடித்து எண்திசையும் வெடிபடும் அவ்வேளையிலே
நடனக் கலைவல்லவர்போல் நாட்டியந்தான் ஆடுவதேன்?"
இதுதான் அந்த சிச்சுவேஷன் !!
Bookmarks