-
8th February 2024, 07:58 AM
#1
Senior Member
Devoted Hubber
Attachment 6039
ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டின்னு சொல்வார்கள். நடிகர்களில் பலர் அரசியல் சாக்கடையில் குதித்து இருக்கிறார்கள். அனைவருக்கும் ஒரு இலக்கு. தான் முதல்வராக வேண்டும். விதிவிலக்காக தனக்கென்று இல்லாமல் மக்கள் சேவை ஒன்றே இலக்காக எனக்கு தெரிந்து இறங்கியவர் சிவாஜி கணேசன் ஒருவரே. சிவாஜி கணேசனுக்கு இந்நிலை ஏற்பட்டதற்கு அவரை சுற்றி அன்றிருந்த ஒரு சிலரே காரணம். பணத்தாசை இல்லாமல் திரை உலகிலேயே பயணித்த ஒரே நடிகர் இவராகத்தான் இருக்க முடியும்.
அரசியல் மேடைகளில் சிவாஜி கணேசன் பேசியதை கொஞ்சம் நினைவு கூறுவோம்.
' என்னை எதிர்த்து போட்டியிடும் தம்பி துரை சந்திரசேகர் பண்புடையவர். என்னிடம் மரியாதையுடன்தான் பேசுகிறார். என்னை எதிர்த்து போட்டியிட வேண்டும் என்பது திமுக எடுத்த முடிவு. தம்பியை குறை கூறுவதில் நியாயமில்லை.'
' என்னை எனது ஆருயிர் அண்ணன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நான் அரசியலில் தாயை பிரிந்து நிற்க வேண்டியதாயிற்று. நானும் காங்கிரஸ் இயக்கமும் வேறு வேறாக இருக்க முடியுமா ? இன்றைய நிலை அதுதான். தேவையற்ற கூட்டுக்கு என்னையும் தூண்டியது, என்னுடைய தம்பிகளை கேவலப்படுத்துவதாக நான் எண்ணி இந்த கட்சியை துவங்கினேன். பாதை தெளிவாக தெரிகிறது. பயணம் துவங்கி இருக்கிறேன்.'
' ஜெயலலிதாவை நான் எதிர்ப்பதாக நினைக்காதீர்கள். அரசியலில் அவர் நிதானமிழந்து செயல்பட துவங்கி இருக்கிறார். இன்றுவரை அவர் நான் மதிப்பவர்தான். அரசியல் நிலைப்பாடு வேறு.'
' ஏன் கண்கள் கலங்கவேண்டும் எனக்கு. ? கண்ணியத்தை எனக்கு கற்றுக்கொடுத்த அந்த தெய்வம் இல்லையே. எனக்கு என்ன தெரியும் ? நிலைமை சரியில்லை என்பது மட்டும் புரிகிறது. நான் என்ன செய்ய வேண்டும் என்பதை கூற பெரும் தலைவர் இல்லையே.'
நேரடியாகவே கேட்கிறேன். பொது அரசியல் மேடையில் இத்தனை கண்ணியத்துடன் இயங்கிய ஒரு தலைவரை அடையாளம் காட்ட முடியுமா ? அந்த தோற்ற கட்சிக்குதான் என்றென்றும் நான் தலைவணங்குவேன். விரும்பியது சிவாஜியின் வெற்றியை அல்ல. அவருடைய அபிலாஷையை புரிந்துகொள்ளவேண்டியவர்கள் அன்று புரிந்து நடந்து கொண்டிருக்க வேண்டும் என்பது மட்டுமே. அவருக்கு அன்று முதல் துணைநின்ற அனைத்து உள்ளங்களுக்கும் நன்றியுடன் கூடிய வாழ்த்துக்கள்.
நன்றி.
Thanks Thilak Ganesan ( சிவாஜி சாம்ராஜ்ஜியம் Fb)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
8th February 2024 07:58 AM
# ADS
Circuit advertisement
Bookmarks