-
22nd November 2020, 07:40 PM
#11
Senior Member
Devoted Hubber
அரசியல் காழ்ப்புணர்வின் காரணமாக சிவாஜியின் படங்களை ஓட விடாமல் தடுத்து யாருக்கோ "வசூல் சக்கரவர்த்தி" என்ற மகுடத்தைச் சூட்ட, சில நாலாந்திர மனிதர்கள் செய்த சதி வேளைகளின் வெளிப்பாடே இதெல்லாம்.
1970 ஜனவரி 14 ல் கற்பகம் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் மாட்டுக்கார வேலன், எங்க மாமா இரண்டையும் சென்னையில் வெளியிட்டு இருந்தனர்.
நன்றாக ஓடிக்கொண்டிருந்த எங்க மாமாவை வெலிங்டன் திரையரங்கில் 50 நாட்களை கடந்த நிலையில் யாருடைய தூண்டுதலினாலோ திடீர் என மாற்றி விட்டார்கள். ஏன் மாற்றினார்கள் என்பது இன்றளவும் மர்மமாகவே உள்ளது.
மதுரை தங்கத்தில் 7 நாட்களில் 57000 ரூபாயை வசூலித்த எங்க மாமா வசூலில் புதிய சாதனை படைத்தது. முதல் வாரத்தில் அதிக வசூல் தந்த திரைப்படம் என்ற பெயரைத் தட்டிச் சென்றது. அதற்கு முன் அன்னை இல்லம் திரைப்படம் 51000 ரூபாயை வசூலித்து இருந்தது.
சிவாஜி நடித்து 40 க்கும் மேற்பட்ட படங்கள் தொண்ணூறு நாட்களை தாண்டிய நிலையில் எக்காரணமும் இன்றி நல்ல வசூல் நிலையிலும் மாற்றப் பட்டது.
சிவாஜி வானிஸ்ரீ நடித்த " நிறை குடம்" வசூல் மழையோடு ஓடிக்கொண்டிருந்த போதும் யார் தூண்டலிலோ திரையரங்கிலிருந்து எடுக்கப்பட்டது.
நேரிடையாக போட்டியிட முடியாதவர்கள் சிவாஜியின் திறமையைத் தகர்க்க மறைமுகமாக முதுகில் குத்தியதின் வலிகள் எங்க மாமாவுக்கும் ஏற்ப்பட்டது.
* செல்லுலாய்ட் சோழன் தொடரில் இனிய எழுத்தாளர் நாஞ்சில் இன்பா அவர்கள் எழுதி வருவது ( தமிழக அரசியல் வாரமிருமுறை இதழ்)
(மீள் பதிவு)
Thanks Sekar .P
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
22nd November 2020 07:40 PM
# ADS
Circuit advertisement
Bookmarks