-
12th March 2020, 11:43 PM
#2771
Junior Member
Diamond Hubber
தென்னக*ஜேம்ஸ்*பாண்டாக*மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த*"ரகசிய*போலீஸ் 115" டிஜிட்டல் வடிவில்*, முற்றிலும் புதிய தொழில்நுட்ப்பத்தில்* நாளை முதல்*(13/03/2020) சென்னை*பெருநகரில்* கீழ்கண்ட அரங்குகளில் வெள்ளி*த்திரைகளுக்கு வெற்றி விஜயம் .
பேபி* ஆல்பட்* - தினசரி* மாலை மற்றும் இரவு காட்சிகள் .
அகஸ்தியா* - தினசரி* நண்பகல் / மேட்னி*/ மாலை காட்சிகள்*
எம்.எம். தியேட்டர்* -* தினசரி**இரவு காட்சி*மட்டும்*
கோபிகிருஷ்ணா காம்ப்ளக்ஸ் - தினசரி 4 காட்சிகள்*
காசி*,கே.கே. நகர் - தினசரி* மேட்னி*/ இரவு காட்சிகள்*
பலாஸோ*, வடபழனி*- தினசரி பிற்பகல் 1.15 மணி* காட்சி*.
லக்ஸ்*, வேளச்சேரி* *- தினசரி இரவு 7.30 மணி காட்சி*
பி.வி.ஆர். , ஈ .சி.ஆர்., சோழிங்கநல்லூர் - தினசரி பிற்பகல் 12.50 மணி*
கோயம்பேடு ரோகினி* - தினசரி இரவு காட்சி*மட்டும் .
எனக்கு*விவரங்கள்* இணையதளத்தில்**கிடைத்த*வகையில்*பதிவிட்டுள்ளேன் . நாளிதழில் வெளியாகும்*அரங்குகள் விபரங்களை நம்பி நண்பர்கள் ஏமாற*வேண்டாம்* என்பது வேண்டுகோள். ஒரு வேளை நாளை ஏதாவது கூடுதல்* அரங்குகளில் வெளியான*விவரம் அறிந்தால்*பிறகு பதிவிடுகிறேன் .......... Thanks mr.Loganathan Sir...
-
12th March 2020 11:43 PM
# ADS
Circuit advertisement
-
12th March 2020, 11:50 PM
#2772
Junior Member
Diamond Hubber
கொத்தவால்சாவடி -
பாட்சா A/C DTS., தியேட்டர்
தினசரி 4காட்சிகள் ,திரையுலக வசூல் சக்கரவர்த்தி
புரட்சி தலைவர் எம் .ஜி .ஆர்., அவர்கள்,புரட்சி தலைவி
அம்மா இருவரும்இணைந்துநடித்த
"ரகசியபோலிஸ்115" S.M Batsha 9965646505......... Thanks.........
-
13th March 2020, 10:49 AM
#2773
Junior Member
Diamond Hubber
: நேற்று12-03-2020அன்று திரு ரஜினி அவர்கள் அரசியல் பற்றி கொடுத்த பேட்டியில்,சொல்லியது அனைத்தும் புதிதல்ல,புரட்சித்தலைவரை மனதில் கொண்டுதான் சொல்லியுள்ளார்.
தலைவர் கட்சியின் தலைமைப் பதவியான பொதுச்செயலாளர் பதவியை அடுத்தவரிடம் ஒப்படைத்தார்,ஆட்சித்தலைமை வேறு கட்சித்தலைமை வேறு என்று நடைமுறைப் படுத்தினார்,அதுமட்டுமல்ல ரஜினி சொல்லுவது போல 1972அக்டோபரில் மாபெரும் மக்கள் புரட்சி வெடித்து புரட்சித்தலைவரை கட்சி ஆரம்பிக்ச் செய்தனர்,அனைத்துக்கும் முன்னோடி நம் தலைவர்தான் என்பதில் பெருமிதம் கொள்வோம்.........
ஓய்வு பெற்ற நீதிபதி நாராயணசாமி முதலியாரை கட்சிக்கு சம்பந்தமில்லாவிட்டாலும்,சட்ட அமைச்சராக்கினார் புரட்சித்தலைவர்......... Thanks
-
13th March 2020, 10:51 AM
#2774
Junior Member
Diamond Hubber
திரு.ப.உ.சண்முகம் திரு.ராகவானந்தம் திரு நாவலர் நெடுஞ்செழியன் ஆ*கியோரைபுரட்சி தலைவர் முதல்வரானபோது கட்சியின் முக்கியபதவியான பொதுச்செயலாளராக செயல்படவைத்தார் நன்றி திரு ஈரோடு ராஜா அவர்கள் மதுரை எஸ் குமார் எம்ஜிஆர் மன்றம்... Thanks.........
-
13th March 2020, 11:28 AM
#2775
Junior Member
Platinum Hubber
.தென்னக*ஜேம்ஸ்*பாண்டாக*மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த*"ரகசிய*போலீஸ் 115" டிஜிட்டல் வடிவில்*, முற்றிலும் புதிய தொழில்நுட்ப்பத்தில் இன்று** முதல்*(13/03/2020) சென்னை*பெருநகரில்* கீழ்கண்ட அரங்குகளில் வெள்ளி*த்திரைகளுக்கு வெற்றி விஜயம் . மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ,நிர்மலா*, நம்பியார்*(இரட்டை வேடம் ) , அசோகன், நாகேஷ்*,மாதவி*,ஜஸ்டின்*,திருப்பதிசாமி மற்றும் பலர் நடித்தது .இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன், இயக்கம் : பி.ஆர். பந்துலு*11/01/1968ல் வெளியான*படம் டிஜிட்டல் வடிவில்*, முற்றிலும் புதிய தொழில்நுடபத்தில் வெளியாகிறது .* புரட்சி நடிகர்*எம்.ஜி.ஆர். ஜேம்ஸ்*பாண்ட்*பாணியில்*நடித்து தென்னகத்தில்*வெளியாகி 100 நாட்கள் ஓடிய*வெற்றிப்படம்* இந்த படம் அவரது*ரசிகர்களிடையே தனியிடம்*பிடித்தது*என்பது குறிப்பிடத்தக்கது _ தினமலர் செய்தி .-13/03/20
பேபி* ஆல்பட்* - தினசரி* மாலை மற்றும் இரவு காட்சிகள் .
அகஸ்தியா* - தினசரி* நண்பகல் / மேட்னி*/ மாலை காட்சிகள்*
எம்.எம். தியேட்டர்* -* தினசரி**இரவு காட்சி*மட்டும்*
பாட்சா*(மினர்வா*) தினசரி* 4* காட்சிகள்*
கோபிகிருஷ்ணா காம்ப்ளக்ஸ் -ராதா - தினசரி 4 காட்சிகள்*
காசி*,கே.கே. நகர் - தினசரி* மேட்னி*/ இரவு காட்சிகள்*
பலாஸோ*, வடபழனி*- தினசரி பிற்பகல் 1.15 மணி* காட்சி*.
லக்ஸ்*, வேளச்சேரி* *- தினசரி இரவு 7.30 மணி காட்சி*
பி.வி.ஆர். , ஈ .சி.ஆர்., சோழிங்கநல்லூர் - தினசரி பிற்பகல் 12.50 மணி*
கோயம்பேடு ரோகினி* - தினசரி இரவு காட்சி*மட்டும் .
திருவள்ளூர் - மீரா* - தினசரி 3 காட்சிகள்*
திருக்கழுக்குன்றம் - புவனேஸ்வரி - தினசரி 4 காட்சிகள்*
வேலூர்*- சிலம்பு*- தினசரி 4 காட்சிகள்*
எனக்கு*விவரங்கள்* இணையதளத்தில்**கிடைத்த*வகையில்*பதிவிட்டுள்ளேன் . நாளிதழில் வெளியாகும்*அரங்குகள் (அதிகம் ) விபரங்களை நம்பி நண்பர்கள் ஏமாற*வேண்டாம்* என்பது*எனது* வேண்டுகோள். நன்றி.
Last edited by puratchi nadigar mgr; 13th March 2020 at 11:08 PM.
-
13th March 2020, 11:33 AM
#2776
Junior Member
Platinum Hubber
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள் இந்த வாரம் (13/03/20)தமிழகத்தில் வெளியான*(இதர படங்கள்*- ரகசிய*போலீஸ் 115 தவிர )பட்டியல் விவரம் .
--------------------------------------------------------------------------------------------------------------------
சென்னை - மூலக்கடை ஐயப்பா - விக்கிரமாதித்தன் -தினசரி 3 காட்சிகள்*
கோவை* - சண்முகா - பெரிய இடத்து பெண் - தினசரி* 4 காட்சிகள்*
திருப்பூர் -அனுப்பர்பாளையம் -கணேஷ் - தாய்க்கு*தலை மகன்--*தினசரி இரவு காட்சி*மட்டும் -சனி/ஞாயிறு /திங்கள் -14-15-16/3 /20
Last edited by puratchi nadigar mgr; 13th March 2020 at 11:11 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
13th March 2020, 11:40 AM
#2777
Junior Member
Diamond Hubber
எம்.ஜி.ஆர். 48 ஆண்டுகளுக்கு முன்பே முன்னோடியாக செயல் படுத்திய அரசியல், ஆட்சி பண்பு !
நேற்று (12-3-2020) திரு ரஜினிகாந்த் அரசியல் பற்றி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில்,சொல்லியது அனைத்தும் புதிதல்ல. இதற்கெல்லாம் முன்னோடி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.
அவர் கட்சியின் தலைமைப் பதவியான பொதுச்செயலாளர் பொறுப்பை அடுத்தவரிடம் ஒப்படைத்தார். ஆட்சித்தலைமை வேறு கட்சித்தலைமை வேறு என்று நடைமுறைப் படுத்தினார். அதுமட்டுமல்ல ரஜினி சொல்வது போல 1972 அக்டோபரில் மாபெரும் மக்கள் புரட்சி வெடித்து புரட்சித்தலைவரை கட்சி ஆரம்பிக்கச் செய்தனர். இன்று அதற்கான சூழல் இருக்கிறதா என்ன ?
என்றாலும் சினிமா, அரசியல் அனைத்திற்கும் முன்னோடி புரட்சிதலைவர் தான் என்பதில் பெருமிதம் கொள்ளலாம்.
எம்.ஜி.ஆர். முதல் முறை 1977 ல் ஆட்சி பொறுப்பேற்றபோது ஓய்வு பெற்ற நீதிபதி நாராயணசாமி முதலியாரை, அவர் கட்சிக்கு சம்பந்தமில்லாவிட்டாலும், சட்ட அமைச்சராக்கினார்.
கருத்து உதவி : எம்.கே. ராஜா, ஈரோடு.......... Thanks.........
-
13th March 2020, 11:20 PM
#2778
Junior Member
Platinum Hubber
அறிவிப்பு*
------------------
ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பு மற்றும் ஆதரவின்*காரணமாக*சென்னை*பேபி*ஆல்பட்*அரங்கில்* தினசரி 2 காட்சிகள் (மாலை /இரவு ) நடைபெற்று வரும் வசூல் சக்கரவர்த்தி , எம்.ஜி.ஆர்**தென்னக*ஜேம்ஸ்*பாண்டாக*நடித்த*டிஜி ட்டல் "ரகசிய*போலீஸ் 115"வரும் ஞாயிறு (15/03/20) மாலை 6.30 மணி காட்சி*மட்டும் சென்னை*ஆல்பட்டில் ரசிகர்களின் சிறப்பு*காட்சியாக*நடைபெறும்*என்று விநியோகஸ்தர் தகவல் அளித்துள்ளார்
Last edited by puratchi nadigar mgr; 13th March 2020 at 11:23 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
14th March 2020, 09:43 AM
#2779
Junior Member
Diamond Hubber
அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்புக்கு சொந்தக்காரர்!
M.G.R. முதல்வராக அரியணையில் அமரும் வரை அவர்தான் தமிழ் திரையுலகின் வசூல் சக்கரவர்த்தியாகவும்; அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும்; நம்பர் 1 ஹீரோவாகவும் இருந்தார். நாடகத்தில் நடித்து, சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்து, சாதாரண நடிகராக அறிமுகமாகி, துணை பாத்திரங்களில் நடித்து, பின்னர் கதாநாயகனாக உயர்ந்து நம்பர் 1 இடத்தை அவர் பிடித்தது ஏதோ குருட்டு அதிர்ஷ்டத்தால் அல்ல. அதற்கு பின்னால் இருந்தது அவருடைய ஈடுபாடு மிகுந்த திட்டமிட்ட கடும் உழைப்பு.
எம்.ஜி.ஆரின் 100-வது படம் ஜெமினியின் ‘ஒளிவிளக்கு’. எஸ்.எஸ்.வாசன் தயாரித்தார். எம்.ஜி.ஆரின் முதல் படமான ‘சதிலீலாவதி' கதையை எழுதியவர் வாசன். ஜெமினி பேனரில் அவர் தயாரித்த படமே எம்.ஜி.ஆரின் 100வது படமாகவும் அமைந்தது சிறப்பு. இந்தியில் நடிகர் தர்மேந்திரா நடித்த ‘பூல் அவுர் பத்தர்’ என்ற படமே தமிழில் ‘ஒளிவிளக்கு’ ஆக மாறியது.
படத்தில் ஒரு காட்சியில் தீ பிடித்து எரியும் வீட்டில் சிக்கிக் கொண்டு தவிக்கும் குழந்தையை எம்.ஜி.ஆர். காப்பாற்றுவார். இதில் அவருக்கு தீக்காயம் ஏற்பட்டு உயிருக்குப் போராடும் நிலை யில், அவரை காப்பாற்ற இறைவனிடம் மன்றாடி சவுகார் ஜானகி பாடும்
‘ஆண்டவனே உன் பாதங் களை நான் கண்ணீரில் நீராட்டினேன்...’
பாடல் 1984-ல் எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது, தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது.
‘ஒளிவிளக்கு' படத்தில் இன்னொரு விசேஷம். எம்.ஜி.ஆர். மது குடிப்பது போன்ற காட்சி அமைப்பு. படங்களில் கூட சிகரெட், மதுவை தொடாத எம்.ஜி.ஆர். குடியின் தீமையை உணர்த்துவதற் காக, தானே குடிப்பது போல நடித்த ஒரே படம். குடியின் தீமையை உணர்த்தும் வகையில்
‘தைரிய மாக சொல் நீ மனிதன்தானா? நீ தான் ஒரு மிருகம். இந்த மதுவில் விழும் நேரம்...’
பாடலில் எம்.ஜி.ஆரின் மனசாட்சி அவர் வடிவில் மேலும் 4 பேராக; மொத்தம் 5 எம்.ஜி.ஆர்கள் பல வண்ண உடைகளில் திரையில் தோன்றும் காட்சியில் தியேட்டர் இரண்டுபடும்.
இப்போது போல எல்லாம் அப்போது சினிமாவில் தொழில்நுட்பம் முன்னேறவில்லை. ‘மாஸ்க்' முறையில் ஒவ்வொரு எம்.ஜி.ஆராக இந்தக் காட்சியை எடுத்திருப்பார்கள். காட்சி சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக, காலையில் இருந்து இரவு முதல் பல நாட்கள் இந்தப் பாடல் காட்சிக்காக எம்.ஜி.ஆர். மெனக்கெட்டார்.
பாடல் காட்சி முழுவதும் படமாக்கப்பட்டது. ஜெமினி ஸ்டுடியோவிலேயே ரஷ் போட்டு பார்க்க வேண்டும். படத்தின் தயாரிப்பு வேலை களை எஸ்.எஸ்.வாசனின் மகனும் ‘ஆனந்த விகடன்’ ஆசிரியராக இருந்தவரும் ஊழியர்களால் மரியாதையாக ‘எம்.டி’ என்று அழைக்கப்பட்டவரு மான எஸ்.பாலசுப்ரமணியன் கவனித்து வந்தார். பின்னர், எம்.ஜி.ஆர். நடித்த ‘சிரித்து வாழ வேண்டும்' படத்தையும் இவர்தான் இயக்கினார்.
பாடல் காட்சிக்காக காலையில் இருந்து இரவு வெகு நேரமாகியும் நடித்துக் கொடுத்த எம்.ஜி.ஆர். களைப்பு காரணமாக, பாடல் காட்சியின் ரஷ் பார்க்காமலேயே நள்ளிரவில் வீட்டுக்குப் புறப்பட்டார். ‘‘ரஷ் பார்த்துவிட்டு எப்படி வந்திருக்கிறது என்று எனக்கு போன் பண்ணி சொல்லுங்கள்’’ என்று சொல்லிவிட்டு வீட்டுக்குக் கிளம்பினார்.
சிறிய அரங்கில் ரஷ் பார்த்தபோது ‘தைரியமாக சொல் நீ... ’
பாடல் காட்சி சிறப்பாக வந்திருந்தது. உடனே, ‘‘எம்.ஜி.ஆருக்கு போன் செய்து நல்லா வந்திருக்குன்னு சொல்லிடுப்பா..’’ என்று உதவியாளரிடம் கூறினார் பாலசுப்ரமணியன். அப்போது, பின்னாலிருந்து அவரது தோள் மீது ஒரு கை விழுந்தது. திரும்பிப் பார்த்தபோது புன்னகையுடன் நின்றிருந்தார் எம்.ஜி.ஆர்.
விஷயம் என்னவென்றால், களைப்பால் வீட்டுக்குக் கிளம்பிய எம்.ஜி.ஆருக்கும் பாடல் காட்சி எப்படி வந்திருக்கிறது என்று பார்க்க ஆசை. அதனால், களைப்பை உதறிவிட்டு ரஷ் திரையிடும் அரங்குக்குள் வந்து, படம் பார்த்துக் கொண்டிருந்தவர்களைத் தொந்தரவு செய்யாமல் அமைதியாக பின்னால் அமர்ந்திருக்கிறார். தொழிலில் அவ்வளவு ஆர்வம். அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு!
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த தமிழின் முதல் வண்ணப்படம் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’. எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் முதன்முதலில் பகுதி கலரில் தயாரிக்கப்பட்ட படம் ‘நாடோடி மன்னன்.’ சரவணா ஃபிலிம்ஸ் பட நிறுவனம் தயாரித்த முதல் வண்ணப்படம் ‘படகோட்டி.’ விஜயா கம்பைன்ஸ் தயாரித்த தமிழின் முதல் வண்ணப்படம் ‘எங்க வீட்டுப் பிள்ளை.’ ஏவி.எம் சார்பில் தயாரிக்கப்பட்ட ‘அன்பே வா’ படம்தான் அந்நிறுவனத்தின் முதல் வண்ணப்படம். ஜெமினி நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ் வண்ணப்படம் ‘ஒளிவிளக்கு’. சத்யா மூவிஸ் பேனரில் தயாரான முதல் வண்ணப்படம் ‘ரிக் ஷாக்காரன்’. தேவர் ஃபிலிம்ஸ் முதல் வண்ணப்படம் ‘நல்ல நேரம்’. இந்த எல்லா படங்களிலும் கதாநாயகன் வண்ணமிகு நாயகன் எம்.ஜி.ஆர்.......... Thanks.........
-
14th March 2020, 11:23 PM
#2780
Junior Member
Diamond Hubber
கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும் உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு
உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும்
பொய்யே சொல்லாதது
காவலரே வேஷமிட்டால் கள்வர்களும்
வேறுருவில் கண் முன்னே தோணுவது சாத்தியமே
காத்திருந்து கள்வனுக்கு கைவிலங்கு பூட்டிவிடும் கண்ணுக்கு தோணாத சத்தியமே
போடும் பொய்த்திரையை கிழித்து விடும் காலம்
புரியும் அப்போது மெய்யான கோலம் (கண்ணை)
ஓம் முருகா என்று சொல்லி உச்சரிக்கும் சாமிகளே
ருத்திராட்ச பூனைகளாய் வாழுரீங்க
சீமான்கள் போர்வையிலே சாமான்ய மக்களையே
ஏமாத்தி கொண்டாட்டம் போடூறீங்க
பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை
உண்மை எப்போதும்தூங்குவதும் இல்லை (கண்ணை)
பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு
கண் மூடி போகிறவர் போகட்டுமே
என் மனதை நான் அறிவேன்
என் உறவை நான் மறவேன்
எது ஆன போதிலும் ஆகட்டுமே
நன்றி மறவாத நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும் (கண்ணை)
குறிப்பு :
இந்த பாடலைப் பற்றி சுவையான தகவல் ஒன்று உண்டு .
முதலில் பாடலை இயற்றிய மருதகாசி 'பொன் பொருளைக் கண்டவுடன் ...'என்று வரும் இடத்தில 'தன் வழியே போகிறவர் போகட்டுமே' என்று முதலில் எழுதினாராம் .மக்கள் திலகம் தன் வழி சரியாக இருந்தால் அதில் போவதில் என்ன தவறு என்று கேட்டவுடன் அதில் இருக்கும் உண்மையை உணர்ந்து 'கண் மூடி போகிறவர் போகட்டுமே ......'என்று மாற்றி எழுதினாராம் .......... Thanks.........
Bookmarks