-
24th November 2019, 10:37 PM
#2071
Junior Member
Diamond Hubber
-
24th November 2019 10:37 PM
# ADS
Circuit advertisement
-
24th November 2019, 10:39 PM
#2072
Junior Member
Diamond Hubber
-
24th November 2019, 10:39 PM
#2073
Junior Member
Diamond Hubber
-
24th November 2019, 10:40 PM
#2074
Junior Member
Diamond Hubber
-
24th November 2019, 10:41 PM
#2075
Junior Member
Diamond Hubber
-
25th November 2019, 05:12 AM
#2076
Junior Member
Diamond Hubber
-
25th November 2019, 05:26 AM
#2077
Junior Member
Diamond Hubber
-
25th November 2019, 12:00 PM
#2078
Junior Member
Diamond Hubber
சூப்பர்ஸானிக் ஹீரோவின் சூப்பர்ஹிட் ஃபிலிம்
குலேபகாவலி
[29.7.1955 - 29.7.2013] : 59வது ஆண்டு துவக்கம்
சீர்மேவும் சென்னையின் சீரான புள்ளிவிவரம்
COMMERCIAL CLASSIC என்கின்ற அந்தஸ்தில் கண்ணியத்தோடு போற்றப்படும் கலையுலக கனவானின் "குலேபகாவலி" முதல் வெளியீட்டில், 29.7.1955 வெள்ளியன்று சென்னையில் கெயிட்டி, ஸ்ரீகிருஷ்ணா, உமா, ராஜகுமாரி ஆகிய நான்கு திரையரங்குகளிலும் மற்றும் தென்னகமெங்கும் வெளியானது.
சென்னை 'கெயிட்டி'யில் 29.7.1955 முதல் 13.10.1955 வரை 77 நாட்கள் வெற்றிமுரசு கொட்டியது. 14.10.1955 வெள்ளியன்று 'கெயிட்டி'யில் "அனார்க்கலி" மொழிமாற்று[டப்பிங்] திரைப்படம் வெளியானது.
இதே போல 'ஸ்ரீகிருஷ்ணா' திரையரங்கிலும் 29.7.1955 முதல் 13.10.1955 வரை 77 அபார வெற்றி நாட்கள். 14.10.1955 வெள்ளியன்று 'ஸ்ரீகிருஷ்ணா'வில், ஜெமினி-சாவித்திரி இணைந்து நடித்த "மாமன் மகள்" திரைப்படம் வெளியானது.
'உமா'வில் 29.7.1955 தொடங்கி 29.9.1955 முடிய 63 வளமான வெற்றி நாட்கள். 30.9.1955 வெள்ளியன்று 'உமா'வில் "ஷாஹி மெஹ்மான்" என்ற ஹிந்தித் திரைப்படம் வெளியானது.
அதே போல 'ராஜகுமாரி'யிலும் 29.7.1955 அன்று ஆரம்பித்து 29.9.1955 முடிய 63 வனப்பான வெற்றி நாட்கள். 30.9.1955 வெள்ளியன்று இந்த அரங்கில் 'குரு தத்'தின் "Mrs. & Mr. 1955", ஹிந்தித் திரைப்படம் வெளியானது.
ஆக, குணக்குன்றாகக் கோலோச்சியவரின் "குலேபகாவலி", முதல் வெளியீட்டில், சிங்காரச் சென்னையில் ஓடிய நாட்கள் மிகச் சரியாக:
கெயிட்டி - 77 நாட்கள்
ஸ்ரீகிருஷ்ணா - 77 நாட்கள்
உமா - 63 நாட்கள்
ராஜகுமாரி - 63 நாட்கள்
மொத்தத்தில், சென்னை மற்றும் தென்னகமெங்கும் மிகமிக வெற்றிகரமாக ஓடி, பாக்ஸ்-ஆபீஸில் மிகப் பெரிய பரபரப்பை உண்டாக்கிய COMMERCIAL CLASSIC, "குலேபகாவலி"............ Thanks.........
-
25th November 2019, 12:01 PM
#2079
Junior Member
Diamond Hubber
அறிந்த தகவல் அறியாத செய்தி
புதிய தொடர் எழுவதற்கு முன் சில தகவல்கள் பகிர்ந்து கொள்கிறேன். பாசம் படத்தில் வரும் ஒரு வசனம் இந்த உலகத்தில் நாம் எதை விரும்புகிறமோ. அது நமக்கு கிடைப்பதில்லை. .எதை ஒதுக்கிறமோ. அது நமது காலடியில் இருக்கும். .இது எந்தளவுக்கு உண்மை என்று, நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. அவரவர் அனுபவத்தில் கண்டிருப்பீர்கள். .வட இந்திய பின்னனி பாடகி லதா மங்கேஷ்கர் அகில இந்தியா அறிந்த சிறந்த பின்னனி பாடகி பல விருதுகளை குவித்தவர் இது யாவரும் அறிந்ததே. ஆனால் அறியாதது. . வட இந்தியாவில் உள்ள அனைத்து நடிகர்களும் நடிகைகளும் .பல தலைவர்கள் லதா மங்கேஷ்கர் தான் அகில இந்தியாவிலேயே சிறந்த பாடகியாக கருத்துக்கள் தெரிவித்துள்ளனர். ஏன் தமிழ் நாட்டில் உள்ள சில நடிகர்கள் நடிகைகள் மற்றும் தலைவர்கள் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் .ஆனால் வாத்தியார் மட்டும் அதற்கு ஒப்புதல் தரவில்லை காரணம். தமிழகத்தில் உள்ள P. சுசீலா தான் என்னைப் பொருத்தவரைக்கும் சிறந்த பாடகி. தமிழ் நாட்டில் உள்ள சிறந்த பாடகர் இருக்கும் போது வடமாநிலத்தில் உள்ளவர்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. எனக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் நான் எப்பவும் சுசீலா ரசிகர் லதா மங்கேஷ்கர் நல்ல பாடகிதான் அதற்காக சுசீலா விட சிறந்தவர் என்பது ஏற்றுக் கொள்ள வில்லை என்றார், வாத்தியாரின் கருத்துக்கள் அறிந்த பின் தமிழ் நாட்டில் கருத்து தெரிவித்தார்கள் தலை குனிந்தனர். .....
அதேப்போல் P. சுசீலா அவர்கள் தனது 70 வது வயதில் அறக்கட்டளை நிறுவனம் தொடங்கினார். . அந்த அறக்கட்டளையின் ஐந்தாம் ஆண்டு விழாவும் சுசீலாவின் 75 . ம் ஆண்டு பவள விழா சேர்ந்து ஜெயா டிவி சிறப்பாக நடத்தியது. அதில் அனைத்து நடிகர்களும் நடிகைகளும் பல தலைவர்களும் சுசீலாவை வாழ்த்தி புகழாரம் சூட்டியுள்ளார்கள் அப்போது தந்த தகவல்தான் நான் மேலே குறிப்பிட்டது.
அனைவரும் சுசீலாவை வாழ்த்தினர் பாராட்டினர் புகழ்ந்தனர் போற்றினார்கள் இந்நிகழ்ச்சியின் கடைசி நாளன்று P. சுசீலா அவர்கள் கூறினார்கள். ...
இன்று நான் அறக்கட்டளை மூலம் பல உதவிகள் செய்கிறேன் என்றால், அந்த எண்ணம் செயலும் நமக்கு வசதி வாய்ப்பு வாழ்க்கை அமைந்த பிறகு நமக்கு தேவையானது சேர்த்த பிறகு நமது தேவைக்கு அதிகமாக சேர்ந்த பிறகுதான் இந்த எண்ணம் நமக்குள் எழுந்துள்ளது என எண்ணி வருத்தம் அடைகிறேன். .காரணம்
பிறருக்காக வாழும் போதும் பிறர்க்கு உதவி செய்யும் போதும். அதன் மூலம் பிறர் அடையும் பலனும். சந்தோஷம் மகிழ்ச்சியும் அவர்கள் நம்மை மனதார வாழ்த்தும் போதும். மனம் அமைதி பெறுகிறது சாந்தம் அடைகிறது. இதை ஆரம்பத்தில் செய்யாதை எண்ணி வருத்தம் அளிக்கிறது. . இப்போது தான் எனக்கு புரிகிறது அண்ணன் எம்ஜிஆர் அவர்கள் பேர் புகழுக்காக தர்மம் செய்ய வில்லை. அதிலே கிடைக்கும் சந்தோஷம் வேறு எதிலும் இல்லை. பிறர்க்கு உதவிசெய்யும் போது மனம் மகிழ்ந்து செய்கிறார். கொடுப்பதில் சந்தோஷம் கண்டவர். இருக்கும் போது வசதி வந்த பிறகு செய்வது வள்ளல்தனம் அல்ல அது பிறவிலே வரணும். . அண்ணன் எம்ஜிஆர் அவர்களுக்கு மட்டுமே அந்த குணம் இருந்தது. அதனால் தான் அவர்க்குகொடைவள்ளல் பொன்மனச்செம்மல் என்ற பட்டம் பொருந்தியது.
இன்று வரை அவர் பேர் புகழும் அழியாத தங்கமா ஜொலிக்கிறது காரணம் அவரது வள்ளல் குணம் தான். .நீங்களும் உங்கள் தேவைக்கு அதிகமாக இஇருந்ததால் பிறர்க்கு உதவி மகிழ்ச்சி கொள்ளுங்கள். .என்றார். ........... Thanks........
-
25th November 2019, 12:02 PM
#2080
Junior Member
Diamond Hubber
மக்கள் திலகத்தின் படங்களை பார்த்து ரசிகராக - பின்னர்
மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்ற தலைவராக பணியாற்றி
பின்னர் காங்கிரஸ் இயக்கத்தில் ஒரு தலைவராக உருவெடுத்து
1980ல் கர்நாடக முதல்வராக பதவியேற்ற பெருமைக்குரியவர்
திரு குண்டுராவ் அவர்கள் ஒரு முறை கூறிய பேட்டி
''1951ல் சர்வதிகாரி படத்தை பார்த்து எம்ஜிஆர் ரசிகனானேன் .
பின்னர் மைசூர் -குடகு பகுதியில் எம்ஜிஆர் மன்றம் தொடங்கி
அவரது எல்லா படங்களையும் பல முறை பார்த்து அவருடய
தீவிர ரசிகனாக மாறினேன் .
அவரது நடிப்பு - பாடல்கள் - சுறுசுறுப்பு - எல்லாமே என்னை மிகவும் கவர்ந்தது . அவருடைய படங்களை பார்த்த பின்தான்
அரசியலில் ஈடு பட வேண்டும் என்று எண்ணம் தோன்றி
இன்று ஒரு மாநில முதல்வராக அமர்வதற்கு முழு காரணம்
மக்கள் திலகம் என்று கூறியுள்ளார் .
1970களில் மக்கள் திலகம் படங்கள் கர்நாடக மாநிலத்தில் படபிடிப்பு நடந்த நேரத்தில் திரு குண்டுராவ் பல ஒத்துழைப்பு
கொடுத்துள்ளார் .
மதுரையில் நடந்த உலக தமிழ் மாநாட்டில் மக்கள் திலகம் அவர்கள் அன்றைய கர்நாடக முதல்வராக இருந்த திரு குண்டுராவை சிறப்பு அழைப்பாளராக வரவழைத்து கௌரவ
படுத்தினார் ........... Thanks........
Bookmarks