-
21st September 2019, 06:06 PM
#1301
Junior Member
Diamond Hubber
ஐயா ஒரு பையன் எம்ஜிஆருக்கு மாலை போட்டு அந்த மாலையை அவனுக்கே திருப்பி போட்டார் எம்ஜிஆர்.நீங்கதான் போட்டுக்கணும் என்று அந்த பையன் வற்புறுத்தி மீண்டும் மாலையை அவனுக்கே அணிவித்தான். இந்த மாதிரி காட்சிகளின் போது பொதுமக்கள் கரவொலியும் விசில் ஒலிகளும் எழுந்தன என்று படிக்கும் பொழுது புல்லரித்து போனேன்.காரணம் .மாலை மட்டும் போடவில்லை.அங்கம் முழுவதும் முத்தமிட்டேன். அந்த பையன் தான் பெரும் பாக்கியசாலியும் நித்தம் நித்தம் வாழும் தெய்வம் புரட்சி தலைவரை வணங்கி கொண்டு இருக்கும் கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் அறக்கட்டளை செயலாளர் ஷிவபெருமாள். நான் தான்.இதில் ஒரு மாபெரும் அதிசயம் என்ன வென்றால் 36 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தை கோடிட்டு காட்ட ஒரு புகைப்படம் தேவைபடும் பொழுது அதில் சம்மந்தப்பட்ட ஒருவனின் உழைப்பாலும் அவன் சார்ந்த அமைப்பின் பேனரே வருகிறது என்றால் புரட்சி தலைவர் இன்றும் மகா சக்தியாக விளங்குகிறார் என்பதற்க்கு இதைவிட ஒரு எடுத்துக்காட்டு வேறு இல்லை. இந்த பதிவை போட்ட சகோதரருக்கு ஆயிரம் நன்றி கள்.இதில் ஒரு சம்பவம் என்னவென்றால் தலைவர் உண்ணாவிரதம் உட்கார்ந்த சில நிமிடங்களில் ஒரு அதிகாரி வாக்கிடாக்கியில் புரட்சி தலைவரிடம் ஓடி வந்து மேடம் (அன்னை இந்திரா) உங்கள் கோரிக்கையை நிறைவேற்றிவிட்டதாகவும் தாங்கள் உண்ணாவிரதம் இருந்தால் தமிழ் நாடு கொந்தளிக்கும் என்று சொன்னார்கள் என்று அந்த அதிகாரி கூறிய பொழுது தலைவர் உட்கார்ந்து விட்டு உடனே எழுந்தால் நன்றாக இருக்காது என்று கூறிவிட்டு இதை உண்ணாவிரதமாக எடுத்து கொள்ள வேண்டாம் என்று மேடத்திடம் சொல்லி விடுங்கள் என்று சொல்லியதை நான் அருகே இருந்து கேட்டேன். மாலை போட நான் பட்ட கஷ்டம் தலைவர் என்னிடம் பேசியது எல்லாவற்றையும் போட்டால் நெடிய பதிவாகிவிடும்.இந்த பந்தலில் தலைவருக்கு திருஷ்டி கழிக்க பூசணிக்காய்களோட கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் அண்ணன் பாஸ்கரன் டேவிட் மற்றும் பலர் அமர்ந்து இருந்ததை பார்த்தேன்.இந்த நிகழ்ச்சி யின் புகைபடத்தை பல வருடங்களாக தேடுகிறேன் கிடைக்கவில்லை.அது ஒன்று தான் என் கவலை.. நன்றி.......... Thanks...........
-
21st September 2019 06:06 PM
# ADS
Circuit advertisement
-
21st September 2019, 06:10 PM
#1302
Junior Member
Diamond Hubber
*பச்சைக்கிளி முத்துச்சரம்*
மேட்டா ரூங்ராத் என்ற பெயரைக் கேள்விப்பட்டதுண்டா? அவர் யாரென்று தெரியுமா?’ என இன்றைய தலைமுறையினரைக் கேட்டால், உதட்டைப் பிதுக்குவார்கள். 55 வயதைக் கடந்தவர்கள் சட்டென்று சொல்லி விடுவார்கள்.
“என்னங்க? அவரையா தெரியாது? எம்.ஜி.ஆரின் பச்சைக்கிளி ஆயிற்றே!” என்று பளிச்சென்று கூறுவர்கள்.
உலகம் சுற்றும் வாலிபனில் கௌரவ வேடத்தில் நடித்த தாய்லாந்து நடிகை தான் மேட்டா ரூங்ராத். ‘பச்சைக்கிளி.. முத்துச்சரம்.. முல்லைக்கொடி யாரோ? பாவை என்னும் பேரில் வரும் தேவன் மகள் நீயோ?’ என்ற பிரபலமான பாடலுக்கு எம்.ஜி.ஆரோடு ஜோடி சேர்ந்து ஆடியவர்.
25 வயது இளம் மங்கையான மேட்டா ரூங்ராத் அதே பாடலின் வாயசைப்பில் ‘பொன்னின் நிறம் பிள்ளை மனம் வள்ளல் குணம் யாரோ? மன்னன் எனும் பேரில் வரும் தேவன் மகன் நீயோ?’என்று எம்.ஜி.ஆரைப் புகழும் வரிகள் வரும் போது, ரசிகர்கள் விசிலடித்து ஆர்ப்பரித்தனர்.
உலகம் சுற்றும் வாலிபன் வெளி வந்து 46 வருடங்கள் ஆகி விட்டன. தற்போது மேட்டா ரூங்ராத்துக்கு வயது 71 ஆகிறது. முதுமை என்று சொல்ல முடியாத அளவுக்கு ’சிக்’ என்றிருக்கிறார். அந்தக் குழந்தை முகமும் இன்னும் மாறவே இல்லை. இந்த ‘ரீவைண்ட்’ அந்தக் கால ரசிகர்களுக்காக மட்டுமல்ல!
பகிர்வு......... Thanks..........
-
21st September 2019, 06:11 PM
#1303
Junior Member
Diamond Hubber
நமது தங்க தலைவரின் ரசிகர்கள் / பக்தர்கள் அனைவருக்கும் புரட்சி தலைவரின் ஆசியுடன் இனிய காலை வணக்கம்...
இன்று செப்டம்பர் 21-ம் தியதி
இதே தினத்தில் தான் 1956-ம் ஆண்டு
தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம் ஜி ஆர் நடித்த முதல் திரைப்படமான " தாய்க்கு பின் தாரம் " வந்து மிக பெரிய வெற்றியை பெற்றது.
சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பா தேவரால் தொடங்கப்பெற்ற தேவர் பிலிம்ஸாரின் முதல் படமான ‘தாய்க்குப் பின் தாரம்’ கண்ணதாசனின் வசனத்திலேயே வளர்ந்து வந்தது. கவிஞர் ‘திர்க்கோஷ்டியூர்’ தொகுதி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட நேர்ந்ததாலும், கழகப்பணிகளில் பெரும் நேரம் செலவிட்டதாலும் கவிஞரின் உதவியாளர் ச. அய்யாப்பிள்ளை அப்படத்தின் வசனங்களைத் தொடர்ந்து எழுதினார். இருப்பினும் கவிஞரின் மேற்பார்வையில் வசனங்கள் மெருகூட்டப்பட்டன. புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த இத்திரைப்படம் மகத்தான வெற்றியைக் கண்டது.
தாய்க்கு பின் தாரம்’ படத்தோட இறுதியில ஒரு சல்லிக்கட்டு காட்சி வரும். ரொம்ப பிரபலமான தொழிநுட்ப வசதிகள் இல்லாத காலத்துலே வந்த ரொம்ப தத்ரூபமான காட்சி அது.
நன்றி..
என்.வேலாயுதன்
திருவனந்தபுரம்........... Thanks...........
-
21st September 2019, 06:12 PM
#1304
Junior Member
Diamond Hubber
-
21st September 2019, 06:23 PM
#1305
Junior Member
Diamond Hubber
"தாய்க்கு பின் தாரம்" 1956ம் ஆண்டு வெளியாகி தொடர்ந்து பிரம்மாண்ட வெற்றி கண்ட மக்கள் திலகம் அவர்களின் 3 காவியம்... இதில் இடம்பெற்ற காளைமாட்டு சண்டை காட்சியை ஆதாரமாக கொண்டே முரசொலி நாளிதழின் logo அடையாளம் இடம் பெற்றதாக அப்பொழுது கருத்து நிலவியதாம்... Thanks.........
-
21st September 2019, 11:19 PM
#1306
Junior Member
Diamond Hubber
-
21st September 2019, 11:25 PM
#1307
Junior Member
Diamond Hubber
-
22nd September 2019, 01:14 PM
#1308
Junior Member
Diamond Hubber
MGR வாழ்க
இந்த படம் முகநூலில் வந்தது இதை பதிவுசெய்த கழக தொண்டன்
ஜெயலலிதா படத்தை சிறிதாக போட்டு எடப்பாடியின் படத்தை பெரிதாக போட்டு விட்டீர்களே என்று கண்டித்துள்ளார்
இதுதான் முற்பகலில் செய்தவினை
அண்ணா திமுகவே ஆரம்பித்தவர் எம்ஜிஆர்
இரட்டை இலை சின்னத்தை நமக்கு தந்தவர் எம்ஜிஆர்
உலகத்திலேயே பல முதலமைச்சர்கள் உருவாக்கிய தனிப்பெரும் சக்தி எம்ஜிஆர்
எம்ஜிஆர் அள்ளி அள்ளி கொடுத்த காரணத்தினால் தான் ஏழை மக்கள் அவர் மேல் உயிரையே வைத்திருக் கின்றார்கள்
வள்ளலாகவும் வாழ்ந்து மறைந்தார்
எம்ஜிஆர் பெயரைச் சொன்ன காரணத்தினால் நாங்கள் ஜெயலலிதாவுக்கு வாக்களித்தோம்
ஆனால் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன்
அவர் மரணம் அடையும் வரை
எம்ஜிஆருக்கு கட்டவுட் வைப்பது கிடையாது
எம்ஜிஆருக்கு பிளக்ஸ் போர்டு வைப்பது கிடையாது
எம்ஜிஆரை பற்றி அண்ணா திமுக பொதுக்கூட்டத்தில் புகழ்ந்து பேசக் கூடாதுஎன்று வாய்மொழி உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் எம்ஜிஆருக்கு சிலை வைக்க அனுமதி கேட்டால் தர மறுத்து விட்டார் ஜெயலலிதா
எம்ஜிஆரின் விசுவாசமுள்ள மூத்த கட்சி நிர்வாகிகளை புறக்கணித்தது
இதையெல்லாம் நினைக்கும் போது
அண்ணா திமுகவை அடிபட்டு உதைபட்டு வளர்த்த எம்ஜிஆர் ரசிகர்களின் வயிறு எரிகிறது
அது போன்ற ஒரு நிகழ்வு
நீங்கள் பார்க்கின்ற படத்தில் ஜெயலலிதா படத்தை சிறிதாக போட்டு உள்ளார்கள்
ஆகவே ஜெயலலிதாவும் ஆதரவாளர் தன் வயித்தெரிச்சலை கொட்டி இந்தப் பதிவைப் போட்டிருந்தார்
,அந்தப் படத்தை எடுத்து இப்பொழுது உங்களிடம் நான் பதிவு செய்துள்ளேன்
முற்பகலில் செய்த வினை........... Thanks.........
-
22nd September 2019, 01:17 PM
#1309
Junior Member
Diamond Hubber
வணக்கம் ... மதுரையில் பேனர் தடைசெய்யப்பட்டுள்ளது . பேனரையே போஸ்ட்டராக்கி "நினைத்ததைமுடிப்பவன்" புரட்சித்தலைவரை வரவேற்ற மதுரை தலைவரின் பக்தர்கள்... நன்றி மதுரை.எஸ் குமார்... Thanks...
-
22nd September 2019, 01:20 PM
#1310
Junior Member
Diamond Hubber
அடுத்தவரை அழித்து நாம் வாழ்ந்து விடலாம் என்ற எண்ணம் வரவே கூடாது. ஏனெனில் இவ்வுலகில் வாழ்கின்ற தனி ஜீவன் ஒவ்வொன்றுமே விலை மதிப்பற்றது தான், இதில் சாதி மத பேதம் ஏற்றத்தாழ்வுகள் ஏதும் கிடையாது, அதை விலை பேசவும் முடியாது என்று சொன்ன "உலகம் சுற்றும் வாலிபனி"ன் உன்னத தத்துவத்துடன் நட்புறவுகள் அனைவருக்கும் நற் காலை வணக்கம்........ Thanks...
Bookmarks