நேற்று நியூஸ் 7 சேனலில் ஒளி பரப்பான மறைந்த நகைச்சுவை நடிகர் கே.பி.சந்திரபாபு அவர்களை பற்றிய செய்தி தொகுப்பில் பல நடந்த உண்மைகளை நேரிடையாக எடுத்துச் சொன்னார்கள்,
எம்ஜிஆர் ஐ வைத்து "மாடி வீட்டு ஏழை" திரைப்படம் தயாரித்தப் போது 3000 அடிகள் வரை வளர்ந்த பின் எம்ஜிஆர் பணப்பிரட்சனை செய்ததால் தனது கிரீன்வேஸ் சாலை பங்களாவை அடமானம் வைத்து பணம் கொடுத்தும் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற எம்ஜிஆர் ஒத்துழைப்பு கிடைக்காததால் கோபமடைந்த சந்திரபாபு. அதுவரை முடித்து வைத்து இருந்த பிளிம் ரோ...லையும் தீயிட்டு கொளுத்தி மீள முடியாத கடன் சுமையால் சிக்கி போதைக்கு அடிமையாகி விட்டார் என குறிப்பிட்டதோடு,..
கடைசி காலங்களில் நடிகர் திலகம் சிவாஜி உதவியதையும் ராஜா,நீதி என பட வாய்ப்புகள் கொடுத்தார் எனவும்
கே.பி.சந்திரபாபு அவர்கள் இறந்த போது நடிகர் திலகம் வெளி ஊரில் ஒரு கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு இருந்ததாகவும் உடனடியாக அந்த விழாவை ரத்து செய்து விட்டு சென்னை வந்து சந்திரபாபு அவர்களது உடலை நடிகர் சங்கம் கட்டிடத்தில் வைத்து பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்கு வழி வகுத்து பெருமை படுத்தி தி.நகரிலிருந்து ஜெமினி பாலம் வழியாக சாந்தோம் சர்ச் வரையிலான இறுதி யாத்திரையை உடனிருந்தே நடத்தினார் என்ற முக்கிய நிகழ்வுகளை குறிப்பிட்டார்கள்,
இனி வரும் காலங்களில் ஊடகங்கள் உண்மை செய்திகளை கொடுப்பார்கள் என நம்பலாம்,
இதற்கு முன் நடிகர் திரு ராஜேஷ் அவர்கள் நடிகர் திலகம் தேர்தலில் தோற்றதற்கு பின்னால் இருந்த உண்மைகளை டிவி நிகழ்ச்சியில் எடுத்துச் சொல்லி இருந்தார் அதாவது "நடிகர் திலகம் அமெரிக்க மருத்துவமனையில் எம்ஜிஆர் க்கு கொடுத்து இருந்த வாக்குறுதியால் அதைக் காப்பற்ற வேண்டி தெரிந்தே தேர்தலில் நின்று தோல்வியை சந்தித்தார்" என புரியும் படி எடுத்துச் சொல்லி இருந்தார்,
பின்னர் சில நாட்கள் கழித்து சென்னையில் ரஷ்யன் கல்ச்சுரல் அகாடமியில் அதை நினைவு படுத்தும் போது " இது போன்ற எத்தனையோ நிகழ்வுகள் இருக்கிறது முன்னரெல்லாம் " நாம் அதை குறிப்பிட்டு பேசும்போது எல்லாம் அரசியல்வாதிகளிடமிருந்து கடும் எதிர்ப்பு வந்து விடும் அதனால் எதையும் எடுத்துச் சொல்லுவதை பல வருடங்களுக்கு மேலாக விட்டு விட்டேன்,
ஆனால் தற்போது எந்த எதிர்ப்பும் வரவில்லை
உண்மையை ஏற்றுக்கொள்ள தயாராகி விட்டார்கள் என நினைக்கிறேன் இனி நாம் தொடரலாம்,
இவ்வாறு கூறி இருந்தார்,
புகைப்பட இணைப்பு :- மதுரையில் நடைபெற்ற வசந்த மாளிகையின் 50 வது நாள் வெற்றி விழா ஊர்வலத்தில்,
Thanks Sekar
..........................
சந்திர பாபுவின் இறுதிச்சடங்கு செலவை நம் ஐயாவே ஏற்றுக் கொண்டார் ..
................
Bookmarks