-
26th May 2019, 06:20 AM
#11
Senior Member
Devoted Hubber
நடிகர்திலகம் இரண்டு வேடங்களில் 15 படங்கள் நடித்திருக்கிறார். பல படங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
உத்தமபுத்திரன் திரைப்படம் தான் நடிகர்திலகம் இரண்டு வேடங்களில் நடித்த முதல் படம்.
இந்த படத்தை பார்த்து விட்டு அன்றைய காலகட்டத்தில் இருந்த பல நடிகர்களுக்க இரட்டை வேடங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.
...
பின்னாளில் எம்ஜிஆரின் நாடோடி மன்னன் திரைப்படத்தின் முன்னோடியே உத்தமபுத்திரன் திரைப்படம் தான்.
இரட்டை வேடம் என்றால்,
ஒருவருக்கு மீசை கீழ்நோக்கியும், மற்றொருவருக்கு மேல்நோக்கியும் இருக்கும்,
அதே போல் ஒருவருக்கு முகத்தில் மரு இருக்கும், மற்றொருவருக்கு இருக்காது.
மற்றபடி உடலை வருத்தியோ அல்லது குரலில் வித்தியாசம் காண்பித்தோ நடிக்க மாட்டார்கள்.
ஆனால, நடிகர்திலகம் நடித்த இரண்டு வேடங்களில் முதல் படமான உத்தமபுத்திரன் ஆகட்டும்,
சரஸ்வதி சபதம், எங்க ஊர் ராஜா, கெளரவம், என்மகன், என்னைப்போல் ஒருவன் மற்றும் திரிசூலம் படத்திற்கு பின்பு வெளிவந்த எமனுக்கு எமன், ரத்தபாசம், விஸ்வரூபம், மாடிவீட்டு ஏழை, சங்கிலி, சந்திப்பு, வெள்ளை ரோஜா போன்ற படங்களில்,
இரண்டு பேரும் வெவ்வேறு நபர்கள் தான் என்று உணரும் வகையில், தன்னை வருத்தி உடலமைப்பிலும், குரலிலும் வித்தியாசம் காட்டியிருப்பார்.
இவரை போல் பலர் முயற்சி செய்து கூட பார்க்க முடியாது என்பது தான் உலகறிந்த உண்மை.
இதுவே இன்று வரை நடிகர்திலகத்தின் புகழ்
நிலைத்து நிற்பதற்கு காரணம்.
சிவாஜி என்று சொல்லடா....
நெஞ்சம் நிமிர்த்தி செல்லடா.....
எங்க ஊர் ராஜா திரைப்படத்திலிருந்து
அட்டகாசமான ஸ்டில் உங்களுக்காக..
நன்றி சுந்தர்ராஜன்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
26th May 2019 06:20 AM
# ADS
Circuit advertisement
Bookmarks