-
9th July 2018, 08:35 PM
#11
Junior Member
Diamond Hubber
பெங்களுரில் இன்று தலைவரின் 101வது பிறந்த நாள் விழா. டவுண்ஹாலில் நடைப்பெறுக்கிறது. விழாவிற்கு அண்ணன் சைதை திரு. துரைசாமி அவர்கள். திரு. எம். ஏ. முத்து அண்ணன் மதுரை முன்னாள் மேயர் திரு. நவநீதக்கிருஷ்ணன் திரு. துரைகருணா அண்ணன் உடன்....
கர்நாடகா மாநிலம் பெங்களூர் டவுன் ஹால் 8-7-2018 ஞாயிறு நடந்த எம்ஜிஆர் 101 வது பிறந்த நாள் விழாவில் முன்னாள் பிரதமர் தேவகவுடா சவுகார்ஜானகி ஐசரிகணேஷ் சைதை துரைசாமி துரைகருணா ஆகியோர் கர்நாடக அதிமுக அமைப்பாளர் கிருஷ்ணராஜ் தலைமையில் நடந்த்து.தேவகவுடா பேசும் போது எம்ஜிஆர் அவர்களை இரண்டு முறை பார்த்திருக்கிறேன்.எம்ஜிஆர் ரசிகர்களை பார்ப்பது மகிழ்ச்சி என்றார்.
ஒரு காலத்தில் குல்லா கண்ணாடி பற்றி கிண்டல் செய்தவர்கள் இன்று 101 குழந்தைகளுடன் மீண்டும் பிறந்துள்ளார்.
101 குழந்தை களுக்கும் எம்ஜிஆர் மாதிரி குல்லா கண்ணாடி ஜிப்பா வேஷ்டி அறிந்து வந்தனர்.திரைப்படத்தில் எம்ஜிஆர் அவர்களுக்கு உடைகள் தைப்பவர் பாக்தாத் திருடன் முதல் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரை பணியாற்றிய எம்.ஏ. முத்து வந்திருந்தார்.
எம்ஜிஆர் - ஜெயலலிதா பற்றி கன்னடத்தில் புத்தகத்தை வெளியிட்டார் முன்னாள் பிரதமர் தேவகவுடா அவர்கள்.
[ சவுகார் ஜானகி பேசும் போது என்னை பண்பட்ட நடிகை என்று எம்ஜிஆர் பாராட்டினார். ஒளிவிளக்கு படத்தில் இறைவா உன் மாளிகை பாட்டு எனக்கு பெயர் தந்த்து. எம்ஜிஆர் இல்லாத போதும் இவ்வளவு ரசிகர்கள் வந்த்து எனக்கு அதிசயமாக உள்ளது என்றார்.
சவுகார்ஜானகி - எம்.ஏ.முத்து அவர்கள்.
[: எம்ஜிஆர் அவர்கள் மறைந்து 30 வருடம் திரைப்படத்தில் நடித்து 40 வருடம் ஆன பிறகும் ரசிகர்கள் மக்கள் வருகிறார்கள் என்றால். அது எம்ஜிஆர் அவர்களுக்கு மட்டும் தான். இதைத்தான் இன்று தேவகவுடா அவர்களும் சவுகார்ஜானகி அவர்களும் வியப்பதாக பாராட்டி பேசினார்கள்... Thanks Friends...
Last edited by suharaam63783; 9th July 2018 at 08:40 PM.
-
9th July 2018 08:35 PM
# ADS
Circuit advertisement
Bookmarks