-
25th April 2018, 08:35 AM
#11
Senior Member
Devoted Hubber
கூண்டுக்கிளி கூண்டுக்கிளி ....இரண்டு முன்னணி நடிகர்கள் நடிக்கும் போது ஒரு ஈகோ வரும் .. வில்லன் வேடம் யார் ஏற்று நடிப்பது என்று .. துளியும் இமேஜ் பார்க்காமல் நம் தலைவர் வில்லன் வேடம் ஏற்று நடித்தார் ..
courtesy ganesh vengatraman f book
.................................................
பின்நூட்டம்
உண்மையிலேயே இந்த படத்தில் நம்மவர் கதாபாத்திரம் எமஜிஆருக்கும் எம்ஜிஆரின் கதா பாத்திரம் நம்மவருக்குத் தான். படம் சுமார் ஏழாயிரம் அடிகள் வளர்ந்த நிலையில் எம்ஜிஆர் இந்த மாதிரி கதாபாத்திரத்தில் நான் நடித்தால் என் இமேஜ் போய் விடும் எனவே தன்னால் தொடர்ந்து நடிக்க முடியாது என்று சொல்ல தலையில் இடி விழுந்தது போலானார் டிஆர் ராமண்ணா. படம் தொடரவில்லை என்றால் லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டமடைய நேரிடும் என்பதை உணர்ந்த ராமண்ணா நம்மவரிடம் தன்னைக் காப்பாற்றுமாறு சரணடைந்தார். நம்மவர் எதற்கும் தயாரானவர் தானே. கதாபாத்திரங்களை மாற்றி நடிக்க ஒப்புக் கொண்டார் நம்மவர். வில்லன் கதாநாயகனாகவும் கதாநாயகன் வில்லனாகவும் மாறிய உண்மை கதை இது. நன்றி
.................................................. .................
நம்மவர் எதற்கும் துணிந்தவர்.உதவி செய்ய முடியாத சூழ்நிலையிலும் செய்ய முடியாதவர்க்கும் செய்தவர்.விளம்பரம் செய்யாதவர்.உண்மையான பாசம் அன்பு நேர்மைக்கு கட்டுப்பட்டவர்.எதிரியாக யாரையும் எண்ணாதவர்.பழிவாங்கதெரியாதவர்.பழி போடத்தெரியாதவர்.சூழ்ச்சி பண்ண தெரியாதவர்.உழைப்பை திறமையை வைத்து முன்னேறியவர்.அந்தநாள் ரங்கோன் ராதா மங்கையர்திலகம் போன்ற பலபடங்களில் வில்லன் வேடத்தை ஏற்றுஇமேஜ் பற்றி கவலைப்படாமல் நடித்தவர் இன்னும்சிலபடங்கள்.பிற்காலத்தில் திருடன் நீதி ராஜா எங்கிருந்தோ வந்தாள்.பிறகு இளம் கதாநாயகர்களை வளரவைக்க ஜெனரல் சக்ரவர்த்தி இமயம் தீபம் அந்தக்காலத்தில் நெஞ்சிருக்கும் வரை மூன்று தெய்வங்கள்.முத்துராமனுடன் நடித்த பலபடங்கள் இவரது கதாபாத்திரம் குறைவான பலத்துடன் இருந்தாலும் இவரது நடிப்பால் அது முன்னால் நிற்கும்.நாகேஷ் ரங்காராவ் நம்பியார் எம்.ஆர்.ராதா டி.எஸ்.பாலையா கே.டி.சந்தானம் தங்கவேலு சந்திரபாபு பத்மினி சாவித்திரி சரோஜாதேவி தேவிகா சௌகார் கே.ஆர்.விஜயா வாணிஸ்ரீ என பலருடன் பல படங்களில் கதைப்படி அவர்கள் கதாபாத்திரம் நல்ல பெயரை பெற வாய்ப்பு இருந்தாலும் தன் கதாபாத்திரத்தை தனது திறமையால் நிலைநாட்டிக் கொண்டு பலமாக ஆழமாக மக்கள் மனதில் இடம்பிடித்துவிடும் கலை அவரிடம் அமைந்திருந்தது.அவர் இடத்தை தக்க வைத்துக் கொள்வார் யார் இருந்தாலும் அவருக்கு தனி மதிப்பு வந்துவிடும் மக்கள் மனதில்.அதில் அவர் மன்னன்
.....................
திரும்பிபார் படத்தை விட்டு விட்டீர்களே. இத்தோடு கணேசனின் திரையுலக வாழ்வு முடிந்தது என்று மற்றவர்களை சொல்ல வைத்த கதை. அதையும் நடிப்பு என்னும் திறமையால் வென்று காட்டியவர் நம்மவர்.
............................
அவருக்கா நடிக்கிறதைப்பற்றி பயமா?அது அவரிடம் இருந்ததே இல்லை.அவர் பூரணம்.பூர்ண சந்திரன்.அஞ்சா கலைவேந்தன்.எவனுக்கும் எதற்கும் நடிப்பு விஷயத்தில் துளிபயமில்லாத பூரணன்.
...........................
It is not villain role. Nadigarthilagam role Jeeva is a protogonist who turns negative due to circumstances. The other character Thangaraj is just a side role like SSR ,Muthuraman,Vijaykumar,jaiganesh did with our thalaivar in later stages.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
25th April 2018 08:35 AM
# ADS
Circuit advertisement
Bookmarks