Results 1,611 to 1,620 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

Threaded View

  1. #11
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    293
    Post Thanks / Like
    Natarajen Pachaiappan




    சிவாஜியா ? வசனமா ?




    சில விஷயங்கள் இலைமறை காயாகத்தான் எக்காலத்திலும் பேச வேண்டியுள்ளது. அதில் நானும் விதி விலக்கல்ல. அதை அப்படியே எடுத்துக்கொள்வதும் அதின் உண்மை நிலையை உரைத்தலும் உங்களை போன்றோரிடந்தான் உள்ளது. நெருப்பை துணி கொண்டு எத்தனை நாள் மூடுவது ?
    ...

    'திராவிடநாடு அலுவலகம்' அங்குதான் 'கணேசன்' தங்கியிருக்கிறார்... 'எம்.ஜி.ஆரால்' முடியாது என்ற சிவாஜி பாத்தித்தை "கணேசா
    உன்னால் முடியும் தம்பி" என நம்பி... அண்ணா, கணேசனிடம் 90 பக்க வசனங்கள் கொண்ட "சிவாஜி கண்ட ஹிந்து சாம்ராஜ்யம்" சிவாஜியின் பாத்திரத்திற்கான பகுதியை (portion) பிற்பகல் 3.00 மணியளவில் கொடுத்துவிட்டு இரவு 10.00மணிக்கு வருவதாக சொல்லி வருத்தத்தோடு கிம்புகிறார்.
    ...

    சொன்னது போலவே வந்துவிட்டார். "என்ன கணேசா... படித்துவிட்டாயா?
    கணேசன் சிரித்தவாறு அவரை இருக்கையில் அவரை அமரவைத்து விட்டு ஏற்ற இறக்கங்களுடன் வசனங்களை பேசி நடித்தும் காட்டிவிட்டார்.

    அண்ணா அப்படியே கணேசனை கட்டி அணைத்துக்கொண்டு.. "என்ன கணேசா உன் மனப்பாட சக்தி...3மணி நேர நாடகத்தை
    7மணி நேரத்தில் படித்துவிட்டாயே...?"


    867அடி... 1000அடி ஒரு ரீல் 2000அடி 2ஷாட் 2கட்... ஓக்கே என்றார் "இயக்குநர் பீம்சிங்"
    அது கலைஞரின் ஓரங்க நாடகம் "சேரன்செங்குட்டுவன்" பாத்திரம் சிவாஜிக்கு
    படம் "ராஜா ராணி" ஒரே மூச்சில் பேசி முடித்தார். நல்லபடியாக முடிந்ததற்கு சிவாஜி அவர்களை அனைவரும் புகழ்ந்தனர்.



    'ரஷ்-ரப்' பிரிண்ட் காப்பியை பார்க்கும் போது சவுண்ட் இன்ஜினியருக்கு தெரியவந்தது. ஒரே வருத்தம். காரணம் அதில் வசனம் பதிவாகவில்லை. எவ்வளவு கஷ்டப்பட்டு சிவாஜி நடித்தார். பீம்சிங்கிற்கு என்ன செய்வதென்று புரியவில்லை. இதை எப்படி சிவாஜி அவர்களிடம் சொல்வது? என்று யோசித்தனர். எப்படியோ அறிந்துக்கொண்ட சிவாஜி, அவர்களை நொந்துக்கொள்ளாமல் சர்வ சாதாரணமாக "நான் வசனத்தை மைக்ல பேசிர்றேன்... பாப்போம் என்றார். '867அடி' மிக துள்ளியமாக படத்தை பார்க்காமலே ஏற்ற தாழ்வுடன் துள்ளியமான நேர இடைவெளிகளை மனதில்கொண்டு பேசினார். டப்பிங்குக்கு, சிவாஜி அவர்கள் மைக்கில் பேசிய வசனம் படத்தில் அவருடைய நடிப்பிற்கும் உதட்டசைவிற்கும் மிக கண கச்சிதமாக பொருந்தியது. பீம்சிங் சிவாஜி அவர்களை நேரில் பார்த்து கட்டித் தழுவிக்கொண்டார்.



    சிவாஜி நினைவு நாள் விழாவில் கலந்துக்கொண்டு பேசிய 'பீம்சிங்'அவர்களின் மகன் தேசியவிருது பெற்ற 'எடிட்டர் பீ.லெனின்' அவர்கள், விழாவிற்கு வருகைதந்திருந்த நடிகர்களை பார்த்து "நீங்களெல்லாம் படத்தை பார்த்துத்தான் டப்பிங் பேசறீங்க ஆனால் படத்தை பாக்காமலே டப்பிங் பேசியவர் சிவாஜி ஒருத்தர்தான்" என்று அன்றைய 'சேரன் செங்குட்டுவனை' ஞாபகபடுத்தினார்.




    இப்போது சொல்லுங்கள் வசனத்தால் சிவாஜி பெயர் பெற்றாரா ? சிவாஜியால் வசனம் பெயர் பெற்றதா ?



    அன்புடன்...

    சிவாஜியின் பக்தன் ப.நடராசன்/:





    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •