-
15th June 2017, 04:10 PM
#11
Senior Member
Devoted Hubber
Radhakrishnan Saijayaraman
· 4 hrs
சுமார் நாற்பது வருடங்களுக்கு முன் புதுவை ஒதியஞ்சாலை திடல் (இன்றைய அண்ணா திடல் ) நடிகர் திலகம் பேசவிருந்த பொதுக்கூட்டம் . திடல் நிரம்பி வழிகிறது . கூட்டம் தொடங்கியது . உடனே ஒரு மறைந்த தலைவர் பெயர் கூற விரும்பவில்லை , நடிகர் சிவாஜி வரவில்லை ,நடிகரை பார்க்க வந்தவர்கள் கிளம்பி செல்லலாம் என்று அறிவித்தார். ஒரு சில நிமிடங்களில் திடல் காலியாகிவிட்டது. . பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்தவர்கள் அரண்டு போய் நின்றது இன்னும் என் கண்ணில்..
சிவாஜி புதுவை வந்துவிட்டார். ஆனால் கடுமையான ஜுரம...் .அப்போது திலகம் இரவு பகல் பாராமல் படபிடிப்பில் கலந்து கொண்டிருந்த நேரம். கூட்டத்திற்கு செல்ல விரும்பியவரை நமது ரசிகர்களும் , திலக த்தின் மேல் பற்று கொண்ட கட்சி தலைவர்களும் நீங்கள் வரவேண்டாம் என்று தடுத்து விட்டனர். இது தெரியாத அந்த தலைவர்
சிவாஜியை பார்க்க வந்தவர்கள் கிளம்பலாம் என்று கூறி கூட்டத்தை காலியாக்கி விட்டார்.
நடிகர் திலகத்தின் பவர் என்ன என்பதை அன்றைய தலைவகர்ள் கண்கூடாக கண்டனர்..
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
15th June 2017 04:10 PM
# ADS
Circuit advertisement
Bookmarks