Page 193 of 401 FirstFirst ... 93143183191192193194195203243293 ... LastLast
Results 1,921 to 1,930 of 4001

Thread: Makkal thilakam mgr part -21

  1. #1921
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    நன்றி : அண்ணன் நெல்லை எஸ்.எஸ்.மணி



  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1922
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    நன்றி : அண்ணன் நெல்லை எஸ்.எஸ். மணி


  4. #1923
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by SUNDARA PANDIYAN View Post
    மக்கள் திலகம் தான் நடித்து சம்பாதித்த பணத்தில் ராமாவரம் தோட்டத்தை வாங்கும் முன்பாகவே லாயிட்ஸ் ரோடு வீட்டை வாங்கிவிட்டார். 1952-53 காலத்தில் அந்த வீட்டிலேயே நடிகர் சங்கம் செயல்பட அனுமதித்தார். (பிறகு நடிகர் சங்கம் இடம் வாங்க பெரும்பகுதி பணத்தை கொடுத்தார்) லாயிட்ஸ் ரோடு வீடுதான் இப்ப அதிமுக கட்சி ஆபிசாக உள்ளது. அவரது குடும்பத்தினருக்கு இதில் உரிமை இல்லை. (இன்று யார் யாரோ உரிமை கொண்டாடுகிறான். வயிறு எரிகிறது)

    சென்னையில் உள்ள சில வணிக இடங்களை (டி.நகர் சத்யா பஜார் மாதிரி) கடை வாடகைக்கு விட்டு அதில் கிடைக்கும் வாடகை வருமானத்தை கட்சிக்கு வரவு வைக்க ஏற்பாடு செய்தார்.

    எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் படங்கள் நாடோடி மன்னன், அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன் படங்கள் மூலம் கிடைக்கும் வருவாயை ஏழை குழந்தைகளின் செலவுக்கு கிடைக்க ஏற்பாடு செய்து வைத்தார்.

    ராமாவரம் தோட்டத்து வீட்டில் ஒரு பகுதியை ஊமை குருடர் செவிடர் பள்ளி ஆக்கினார். இப்பவும் அங்கே பள்ளி நடக்கிறது. உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கு சாப்பாடும் போட்டு அவர்களுக்கு ஏற்ற மாதிரி படிப்பு சொல்லித் தருகிறார்கள்.

    தியேட்டர் கட்டலாம் என்று எல்லாரும் யோசனை சொன்னபோது எத்தனை பேருக்கு அதில் வேலை கிடைக்கும் என்று கேட்டுவிட்டு, ஸ்டூடியோவை விலைக்கு வாங்கி சத்யா ஸ்டூடியோ ஆக்கினார். தொழிலாளிகளை பங்குதாரராக சேர்த்தார்.

    நினைவு இடத்துக்காக யாரையும் தன் ரசிகர்கள் தொங்கிக் கொண்டு இருக்கக் கூடாது என்று நமக்கெல்லாம் தனது சென்னை மாம்பலம் அலுவலகத்தையே எழுதிவைத்தார். அங்குதான் நமது கோயிலான புரட்சித் தலைவரின் நினைவு இல்லம் உள்ளது.

    சென்னை வடபழனியில் வாங்கிய இடத்தை ஏழை குழந்தைகள் பள்ளிக் கூடம் அமைத்தார். இன்னிக்கும் அந்தப் பள்ளியில் ஏழை சாதாரண குழந்தைகள் படிக்கிறார்கள். ஜானகி அம்மாளின் உறவினர் நிர்வகித்து வருகிறார்.

    தனக்குப் பிறகு தனது சொத்துக்கள் என்ன செய்யப்பட வேண்டும் என்று புரட்சித் தலைவர் தெளிவாக உயிலே எழுதிவிட்டுச் சென்றார். மேலே சொன்ன விவரங்கள் உயிலில் குறிப்பிடப்பட்டவை. அந்த உயிலின் வாசகங்கள் புரட்சித் தலைவரின் வக்கீல் என்.சி. ராகவாச்சாரி மூலம் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.

    புரட்சித் தலைவர் அள்ளிக் கொடுத்ததில் இந்தப் பட்டியல் சிறுதுளிதான்.

    தனது உழைப்பில் சம்பாதித்த சொத்துக்களை எத்தனை நடிகர்கள் இப்படி மக்களுக்கு எழுதி வைப்பார்கள்? அதனால்தான் புரட்சித் தலைவர் ஏழைப் பங்காளர் என்று அழைக்கப்படுகிறார்.



    இதையெல்லாம் பாராட்டக் கூட வேண்டாம். உண்மை தெரிந்து கொள்ளாத, தெரிந்து கொள்ள மனம் இல்லாதவர்கள் புரட்சித் தலைவரை குறை கூறாமலாவது இருக்கலாமே?

    யாராவது ஒரு அரைவேக்காடு முகநூலில் வாந்தி எடுத்ததை எல்லாம் நம்புகிறார்கள்.

    என்ன மனிதர்கள்? …. திருந்தவே மாட்டார்கள். கருமம்.. கருமம்.
    தம்பி,

    நீ என்ன சொல்ற என்பது எனக்குப் புரிகின்றது. ஏதோ சினிமாக்களில் ஏழை பங்காளராக மக்கள் திலகம் நடிச்சதாலேதான் அவர் ஏழைகளின் தோழர் என்ற பிம்பம் ஏற்பட்டதாக சில முகநூல் அறிவிலிங்கள் கூறியதை மறுத்திருக்கின்றாய்.

    ஏழை மக்களுக்கு அவர் செய்த தொண்டுகள் பற்றியும் சொத்துக்களை எழுதி வைத்தது பற்றியும் சொல்லி படங்களில் நடிச்சதால் மட்டுமே இல்லை. நிஜமாகவே தனது சேவைகள் மூலம் புரட்சித் தலைவர் ஏழைப் பங்காளர் ஆனார் என்று சொல்கிறாய்.

    இதைப் புரிந்து கொள்ள முடியாமல் சொன்னதையே சொல்லும் கிளிப்பிள்ளைங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டாம். சுத்த வேஸ்ட்.

  5. #1924
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by MAHALINGAM MOOPANAAR View Post



    சுந்தர பாண்டியன் சார்,

    புரட்சித் தலைவர் பற்றி தவறாக எழுதுபவர்கள் பேசுபவர்கள் அவரது செல்வாக்கையும் புகழையும் பார்த்து பொறாமை கொண்டவர்கள்.

    விடுங்கள்... அந்தக் காலத்திலேயும் அப்படித்தான் எழுதினார்கள்.

    நாத்திகம் ராமசாமி என்று ஒருவர் இருந்தார். ராமசாமி என்ற அந்த நபர் ‘நாத்திகம்’ என்ற பத்திரிகையை நடத்தி வந்ததால் நாத்திகம் ராமசாமி என்று அறியப்பட்டார். புரட்சித் தலைவர் பற்றி இல்லாததும் பொல்லாததும் எழுதுவார். 1974-ம் ஆண்டில் புரட்சித் தலைவர் வீட்டில் கருப்பு பண சோதனை நடந்ததாக தன்னுடைய நாத்திகம் பத்திரிகையில் எழுதினார்.

    நாத்திகம் ராமசாமி மீது புரட்சித் தலைவர் மான நஷ்ட வழக்கு போட்டார். அதில் நாத்திகம் ராமசாமி புரட்சித் தலைவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என்றும் கோர்ட் கூறிவிட்டது.

    அதன்படி நாத்திகம் ராமசாமி புரட்சித் தலைவரிடம் மன்னிப்பு கேட்டார். 50 ஆயிரம் அந்தக் காலத்தில் பெரிய தொகை. அதைக் கட்ட தனக்கு வசதி இல்லை என்று கோர்ட்டில் நாத்திகம் ராமசாமி கெஞ்சினார்.

    உடனே, புரட்சித் தலைவர் கருணை காட்டினார். இந்த மாதிரி விஷயங்களில் நம்மாளு மேலே எனக்கு கொஞ்சம் கோவம் வரும். யாருக்கு கருணை காட்டறது, மன்னிக்கிறது என்பதற்கெல்லாம் ஒரு தகுதி இருக்கிறது. நம்மாளு எல்லாரையும் மன்னித்து விடுவார். அவரது பெரிய மனசு நமக்கு இல்லை. இதுக்கெல்லாம் அந்தப் பொம்பளைதான் (புரிகிறதா?) சரி. சும்மா டப்பா டான்ஸ் ஆட வைக்கும்.

    புரட்சித் தலைவர் தனது கருணயால் நாத்திகம் ராமசாமி அடையாள அபராதமாக ஒரு ரூபாய் அபராதம் கட்டினால் போதும் என்று சொல்லிவிட்டார். அதன்படி ஒரு ரூபாயை புரட்சித் தலைவருக்கு அபராதமாக கட்டினார் நாத்திகம் ராமசாமி.

    என் தந்தை உட்பட எங்கள் குடும்பத்தின் மூத்தவர்கள், முன்னோர்கள் காங்கிரஸ்காரர்கள். காங்கிரஸ் தலைவராக இருந்த ஐயா ஜி.கே.மூப்பனார் மீது எங்கள் குடும்பத்துக்கு மரியாதை உண்டு. நான்தான் புரட்சித் தலைவர் படங்களை பார்த்து ரசிகனாகி அவர் மீது கொண்ட பற்றால் அதிமுகவில் இணைந்தேன். சொல்ல வெட்கமாக இருந்தாலும் ஒரு உண்மையை சொல்ல வேண்டும். நாத்திகம் ராமசாமியும் ஒரு காங்கிரஸ்காரர்.

    புரட்சித் தலைவருக்கு எதிராக பொறாமையால் எழுதுபவர்கள், பேசுபவர்கள் எல்லாக் காலத்திலும் உண்டு. இவர்களுக்கும் உண்மைக்கும் ஸ்நானப் பிராப்தி கூட கிடையாது. இவர்களில் பலருக்கு ஏற்கனவே மோட்ச சம்பந்தம் (சந்தேகம்தான்?) நரக சம்பந்தம் ஏற்பட்டுவிட்டது. இன்னும் சிலர் அதை நெருக்கத்தில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

    அருமை, அருமை, அருமை.

    நன்றி அய்யா.

    தன்னை மோசமாக விமர்சிக்கின்றவர்களுக்கும் கூட கருணை காட்டும் விசயத்தில் புரட்சித் தலைவர் மேல எனக்கும் வருத்தம் உண்டு. அது அவர் மேல் உள்ள அன்பு காரணாமாக உரிமையுடன் கூடின வருத்தம்.

    ஒரு கவிஞன் இருந்தான். அவன் எல்லாரையும் மோசமாக பேசுவான். புரட்சித் தலைவரையும் மோசமாக எழுதினான். பேசினான். இத்தனைக்கும் அவனே மோசமான நடத்தை கொண்டவன். அதை அவனே சொல்லிருக்கான். தான் எத்தனை பெண்களிடம் தொடர்பு வைத்திருந்தேன் என்று சொல்லும் கேவலமானவர்களை ஆகா என்று பாராட்டுவார்கள். இதெல்லாம் ஒரு பெருமையா? மனிதன் என்றால் சில பலவீனங்கள் இருக்கும்தான். இதெல்லாம் சம்பந்தப்பட்ட இரண்டு பேரின் அந்தரங்கம். ஆனால், தான் நேர்மையாக இருந்தால் அடுத்தவனை சொல்ல வேண்டும். எவன் யோக்கியவான்?

    அந்தக் கவிஞனையும் கூட மன்னித்து புரட்சித் தலைவர் பதவி வழங்கினார். காசுக்காக கவிதையை விற்கும் அந்த எச்சப் பய உடனே போட்டான் அந்தர் பல்டி. தான் சாகிற வரைக்கும் புரட்சித் தலைவரை பாராட்டித் தள்ளினான்.

    அதுக்கும் கூட அந்தக் கவிஞன் ஒரு பிரபலம். அவன் வாயை கட்டுவதற்காக புரட்சித் தலைவர் பதவி வழங்கினார் என்று கூறுவான்கள். ஒரு பேச்சுக்கு சரி என்றே வைத்துக் கொள்ளலாம். நாத்திகம் ராமசாமி என்ன பெரிய பிரபலம்? சமூகத்தில் அந்தாளுக்கு என்ன மரியாதை இருந்தது? அந்த பத்திரிகை எத்தனை லட்சம் விற்றது? அந்த ஆளுக்கும் இரக்கம் காட்டி இருக்கிறார் புரட்சித் தலைவர்.

    ஆனால், ஒன்று புரட்சித் தலைவரை யாரெல்லாம் திட்டினானோ அவன் எல்லாம் கடைசியில் புரட்சித் தலைவரை புகழ்ந்து பேசிவிட்டுதான் செத்தான்.

  6. #1925
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like

  7. #1926
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    இன்றும் திரையுலகை ஆளும் எம்ஜிஆர்

    மக்கள் திலகம் எம்ஜிஆர் அன்றும் இன்றும் என்றும் திரையுலகை ஆள்வார். சமீபத்தில் வெளிவந்த "கவண்" திரைப்படத்தில் டி.ஆர் அவர்கள் முதல் காட்சியில் எம்ஜிஆர் பட வசனங்களை சொல்லி புரட்சித்தலைவரின் அத்தனை பட்டங்களையும் சொல்வார். அதே போல் இறுதி காட்சியில் நினைத்தபடி எல்லாவற்றையும் வெற்றியாக முடித் தாகிவிட்டது.. இப்போது ஒரு பாடல் பாடவேண்டும் என்று சொல்வார். அதற்கு ஹீரோ விஜய் சேதுபதி இந்த பாடல்தான் என்று சொல்லி "வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்"பாடலை சேர்ந்து பாடுவார்கள். கடைசியில் எழுத்து முடியும் வரை பொன்மனச்செம்மலின் அந்த கீதம் ஒலிக்கும். வெற்றி என்றால் எம்ஜிஆர்தானே.

    மேலும், பவர் பாண்டி'' படத்திலும் பல இடங்களில் மக்கள் திலகம் தோன்றுவார். ராஜ்கிரண் வைத்திருக்கும் ஷீல்டுகளில் குடியிருந்த கோயில் கதாநாயகன் தோற்றம். சிறு வயது பாண்டியாக வரும் தனுஷ் வீட்டு வாசலில் எம்ஜிஆர் போட்டோ. பல ஷாட்டுகளில் இந்த போட்டோ காணப்படுகிறது. மேலும், தனுஷ் கதாநாயகியுடன் அடிமைப்பெண் திரைப்படம் பார்ப்பார். அதன் சுவரொட்டியையும் பல இடங்களில் காண்பிப்பார்கள்.
    திரையுலகம் இருக்கும் வரை ஏன் இவ்வுலகம் இருக்கும் வரை எம்ஜிஆர் இருப்பார்.

    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

  8. #1927
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like


    இப்போதும் சினிமாக்களில் புரட்சித் தலைவர் படங்கள் பாடல் காட்சிகள் எல்லாம் காட்டப்படுவது சந்தோசமாக இருக்கிறது. அவர் படத்தை காட்டுகிறார்களே தவிர, அவரை மாதிரி நல்ல கருத்துள்ள, படிப்பினை தரும் மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்கும் படியான படங்களை எடுக்க மாட்டேன் என்கிறார்கள்.

    கதை, கருத்து, காமெடி, பாட்டு, நடிப்பு, நல்ல சிந்தனை, இப்படி எல்லாவற்றிலும் தரம் குறைந்துவிட்டது.

    சமீபத்தில் சில மாதங்கள் முன் வந்த ஒரு படத்தில் காமெடி நடிகர் ஒருவர் சின்ன பிள்ளைகள் விளையாடுமே. அதே மாதிரி ஆடு, மாடு, பசு, ...சு என்று வசனம் பேசுகிறார். இதெல்லாம் காமெடியா?

    நடுநிசி நாய்கள் என்று ஒரு படம். தந்தையே தன் மகனை…… புரிந்து கொள்ளுங்கள். எழுத முடியவில்லை.

    விஷ்ணு என்று ஒரு படத்தில் அந்தப் படத்தில் நடித்த நடிகரே சொந்த குரலில் பாடிய, தொட்டபேட்டா ரோட்டு மேலே முட்டை பரோட்டா நீ தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா’ என்று ஒரு பாட்டு.

    அந்த டூயட் பாட்டில் , ‘புதுப் புது வித்தைகளை கத்து தரட்டா.. நான் வந்தா அள்ளித்தந்தா உன் தாகம் தீருமா’ என்றெல்லாம் வரிகள் வரும். தப்பில்லை. சினிமாவில் இந்த மாதிரி பாடல்கள் எல்லாம் சகஜம்.

    ஆனால், கொடுமை என்னவென்றால் இப்படியெல்லாம் காம உணர்ச்சி கலந்த அந்த பாடலை நடிகரோடு சேர்த்து பாடிய பாடகி யார் தெரியுமா? அந்த நடிகரின் அம்மா. படத்தை இயக்கியது அந்த நடிகரின் அப்பா.

    இந்தக் கொடுமை எல்லாம் எங்கே போய் சொல்கிறது? நாடு உருப்படும்.

    பெண்களை தாயாக தெய்வமாக மதித்து படத்தில் காட்டி நல்ல எண்ணங்களை மக்களிடம் புரட்சித் தலைவர் விதைத்தார். (உடனே யாராவது ஓடி வந்து டூயட் பாடல்கள் பற்றி சொல்லப் போகிறார்கள். மனைவி, காதலியுடன் படத்தில் ஒருவன் திருவருட்பாவா பாடுவான்?)

    படங்களின் மூலம் நீதி, நேர்மை, நியாயம், தர்மம், ஒழுக்கம், சட்டத்தை மதித்தல், உதவும் குணம் எல்லாம் போதித்த புரட்சித் தலைவர் படங்கள் எங்கே?

    காமப் பாடல்களை தன் தாயோடு சேர்த்து பாடும் நடிகர்கள், வக்கிர சிந்தனையுடன் படம் எடுக்கும் டைரக்டர்கள், ஆபாசமாக அருவருப்பாக பேசும் காமெடியன்களைக் கொண்ட படங்கள் எங்கே?

    இப்பவெல்லாம் படமா எடுக்கிறார்கள்? படுபாவிகள்.

  9. #1928
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like



  10. #1929
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like

  11. #1930
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    நேற்று (17/05/2017) காலை 11மணிக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "தெய்வத்தாய் " சன்லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது .


    இன்று (18/05/2017) இரவு 7 மணி முதல் சன்லைப் சானலில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த "சர்வாதிகாரி " திரைப்படம் ஒளிபரப்பாகி வருகிறது .


Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •