நன்றி : அண்ணன் நெல்லை எஸ்.எஸ்.மணி
நன்றி : அண்ணன் நெல்லை எஸ்.எஸ்.மணி
நன்றி : அண்ணன் நெல்லை எஸ்.எஸ். மணி
தம்பி,
நீ என்ன சொல்ற என்பது எனக்குப் புரிகின்றது. ஏதோ சினிமாக்களில் ஏழை பங்காளராக மக்கள் திலகம் நடிச்சதாலேதான் அவர் ஏழைகளின் தோழர் என்ற பிம்பம் ஏற்பட்டதாக சில முகநூல் அறிவிலிங்கள் கூறியதை மறுத்திருக்கின்றாய்.
ஏழை மக்களுக்கு அவர் செய்த தொண்டுகள் பற்றியும் சொத்துக்களை எழுதி வைத்தது பற்றியும் சொல்லி படங்களில் நடிச்சதால் மட்டுமே இல்லை. நிஜமாகவே தனது சேவைகள் மூலம் புரட்சித் தலைவர் ஏழைப் பங்காளர் ஆனார் என்று சொல்கிறாய்.
இதைப் புரிந்து கொள்ள முடியாமல் சொன்னதையே சொல்லும் கிளிப்பிள்ளைங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டாம். சுத்த வேஸ்ட்.
அருமை, அருமை, அருமை.
நன்றி அய்யா.
தன்னை மோசமாக விமர்சிக்கின்றவர்களுக்கும் கூட கருணை காட்டும் விசயத்தில் புரட்சித் தலைவர் மேல எனக்கும் வருத்தம் உண்டு. அது அவர் மேல் உள்ள அன்பு காரணாமாக உரிமையுடன் கூடின வருத்தம்.
ஒரு கவிஞன் இருந்தான். அவன் எல்லாரையும் மோசமாக பேசுவான். புரட்சித் தலைவரையும் மோசமாக எழுதினான். பேசினான். இத்தனைக்கும் அவனே மோசமான நடத்தை கொண்டவன். அதை அவனே சொல்லிருக்கான். தான் எத்தனை பெண்களிடம் தொடர்பு வைத்திருந்தேன் என்று சொல்லும் கேவலமானவர்களை ஆகா என்று பாராட்டுவார்கள். இதெல்லாம் ஒரு பெருமையா? மனிதன் என்றால் சில பலவீனங்கள் இருக்கும்தான். இதெல்லாம் சம்பந்தப்பட்ட இரண்டு பேரின் அந்தரங்கம். ஆனால், தான் நேர்மையாக இருந்தால் அடுத்தவனை சொல்ல வேண்டும். எவன் யோக்கியவான்?
அந்தக் கவிஞனையும் கூட மன்னித்து புரட்சித் தலைவர் பதவி வழங்கினார். காசுக்காக கவிதையை விற்கும் அந்த எச்சப் பய உடனே போட்டான் அந்தர் பல்டி. தான் சாகிற வரைக்கும் புரட்சித் தலைவரை பாராட்டித் தள்ளினான்.
அதுக்கும் கூட அந்தக் கவிஞன் ஒரு பிரபலம். அவன் வாயை கட்டுவதற்காக புரட்சித் தலைவர் பதவி வழங்கினார் என்று கூறுவான்கள். ஒரு பேச்சுக்கு சரி என்றே வைத்துக் கொள்ளலாம். நாத்திகம் ராமசாமி என்ன பெரிய பிரபலம்? சமூகத்தில் அந்தாளுக்கு என்ன மரியாதை இருந்தது? அந்த பத்திரிகை எத்தனை லட்சம் விற்றது? அந்த ஆளுக்கும் இரக்கம் காட்டி இருக்கிறார் புரட்சித் தலைவர்.
ஆனால், ஒன்று புரட்சித் தலைவரை யாரெல்லாம் திட்டினானோ அவன் எல்லாம் கடைசியில் புரட்சித் தலைவரை புகழ்ந்து பேசிவிட்டுதான் செத்தான்.
இன்றும் திரையுலகை ஆளும் எம்ஜிஆர்
மக்கள் திலகம் எம்ஜிஆர் அன்றும் இன்றும் என்றும் திரையுலகை ஆள்வார். சமீபத்தில் வெளிவந்த "கவண்" திரைப்படத்தில் டி.ஆர் அவர்கள் முதல் காட்சியில் எம்ஜிஆர் பட வசனங்களை சொல்லி புரட்சித்தலைவரின் அத்தனை பட்டங்களையும் சொல்வார். அதே போல் இறுதி காட்சியில் நினைத்தபடி எல்லாவற்றையும் வெற்றியாக முடித் தாகிவிட்டது.. இப்போது ஒரு பாடல் பாடவேண்டும் என்று சொல்வார். அதற்கு ஹீரோ விஜய் சேதுபதி இந்த பாடல்தான் என்று சொல்லி "வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்"பாடலை சேர்ந்து பாடுவார்கள். கடைசியில் எழுத்து முடியும் வரை பொன்மனச்செம்மலின் அந்த கீதம் ஒலிக்கும். வெற்றி என்றால் எம்ஜிஆர்தானே.
மேலும், பவர் பாண்டி'' படத்திலும் பல இடங்களில் மக்கள் திலகம் தோன்றுவார். ராஜ்கிரண் வைத்திருக்கும் ஷீல்டுகளில் குடியிருந்த கோயில் கதாநாயகன் தோற்றம். சிறு வயது பாண்டியாக வரும் தனுஷ் வீட்டு வாசலில் எம்ஜிஆர் போட்டோ. பல ஷாட்டுகளில் இந்த போட்டோ காணப்படுகிறது. மேலும், தனுஷ் கதாநாயகியுடன் அடிமைப்பெண் திரைப்படம் பார்ப்பார். அதன் சுவரொட்டியையும் பல இடங்களில் காண்பிப்பார்கள்.
திரையுலகம் இருக்கும் வரை ஏன் இவ்வுலகம் இருக்கும் வரை எம்ஜிஆர் இருப்பார்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
இப்போதும் சினிமாக்களில் புரட்சித் தலைவர் படங்கள் பாடல் காட்சிகள் எல்லாம் காட்டப்படுவது சந்தோசமாக இருக்கிறது. அவர் படத்தை காட்டுகிறார்களே தவிர, அவரை மாதிரி நல்ல கருத்துள்ள, படிப்பினை தரும் மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்கும் படியான படங்களை எடுக்க மாட்டேன் என்கிறார்கள்.
கதை, கருத்து, காமெடி, பாட்டு, நடிப்பு, நல்ல சிந்தனை, இப்படி எல்லாவற்றிலும் தரம் குறைந்துவிட்டது.
சமீபத்தில் சில மாதங்கள் முன் வந்த ஒரு படத்தில் காமெடி நடிகர் ஒருவர் சின்ன பிள்ளைகள் விளையாடுமே. அதே மாதிரி ஆடு, மாடு, பசு, ...சு என்று வசனம் பேசுகிறார். இதெல்லாம் காமெடியா?
நடுநிசி நாய்கள் என்று ஒரு படம். தந்தையே தன் மகனை…… புரிந்து கொள்ளுங்கள். எழுத முடியவில்லை.
விஷ்ணு என்று ஒரு படத்தில் அந்தப் படத்தில் நடித்த நடிகரே சொந்த குரலில் பாடிய, தொட்டபேட்டா ரோட்டு மேலே முட்டை பரோட்டா நீ தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா’ என்று ஒரு பாட்டு.
அந்த டூயட் பாட்டில் , ‘புதுப் புது வித்தைகளை கத்து தரட்டா.. நான் வந்தா அள்ளித்தந்தா உன் தாகம் தீருமா’ என்றெல்லாம் வரிகள் வரும். தப்பில்லை. சினிமாவில் இந்த மாதிரி பாடல்கள் எல்லாம் சகஜம்.
ஆனால், கொடுமை என்னவென்றால் இப்படியெல்லாம் காம உணர்ச்சி கலந்த அந்த பாடலை நடிகரோடு சேர்த்து பாடிய பாடகி யார் தெரியுமா? அந்த நடிகரின் அம்மா. படத்தை இயக்கியது அந்த நடிகரின் அப்பா.
இந்தக் கொடுமை எல்லாம் எங்கே போய் சொல்கிறது? நாடு உருப்படும்.
பெண்களை தாயாக தெய்வமாக மதித்து படத்தில் காட்டி நல்ல எண்ணங்களை மக்களிடம் புரட்சித் தலைவர் விதைத்தார். (உடனே யாராவது ஓடி வந்து டூயட் பாடல்கள் பற்றி சொல்லப் போகிறார்கள். மனைவி, காதலியுடன் படத்தில் ஒருவன் திருவருட்பாவா பாடுவான்?)
படங்களின் மூலம் நீதி, நேர்மை, நியாயம், தர்மம், ஒழுக்கம், சட்டத்தை மதித்தல், உதவும் குணம் எல்லாம் போதித்த புரட்சித் தலைவர் படங்கள் எங்கே?
காமப் பாடல்களை தன் தாயோடு சேர்த்து பாடும் நடிகர்கள், வக்கிர சிந்தனையுடன் படம் எடுக்கும் டைரக்டர்கள், ஆபாசமாக அருவருப்பாக பேசும் காமெடியன்களைக் கொண்ட படங்கள் எங்கே?
இப்பவெல்லாம் படமா எடுக்கிறார்கள்? படுபாவிகள்.
நேற்று (17/05/2017) காலை 11மணிக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "தெய்வத்தாய் " சன்லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது .
இன்று (18/05/2017) இரவு 7 மணி முதல் சன்லைப் சானலில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த "சர்வாதிகாரி " திரைப்படம் ஒளிபரப்பாகி வருகிறது .
Bookmarks