-
14th January 2017, 01:56 PM
#11
அன்பு நண்பர்கள் அனைவருக்கும் இதயம் நிறைந்த உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
மிகவும் கனத்த இதயத்தோடு கொண்டாட வேண்டிய பொங்கலாக அமைந்து விட்டது.
ஒருபுறம் கொத்துக்கொத்தாக விவசாயிகள் மரணம்.
மறுபுறம் மழையும் இன்றி நதிகளில் நீர் வரத்தும் இன்றி பாதி கதிர்கள் வந்த நிலையில் காய்ந்துகிடக்கும் வயல் வெளிகள். போட்ட முதலீட்டை முழுவதும் இழந்து நிற்கும் விவசாயிகள்.
தண்ணீர் இல்லாததால் இப்போதே துவங்கி விட்ட தண்ணீர் பஞ்சம், அதை தொடர்ந்து அச்சுறுத்தும் உணவுப் பஞ்சம்.
தமிழரின் வீர விளையாட்டான ஏறு தழுவுதல் இவ்வாண்டும் இல்லாமல் போன ஏமாற்றம்.
கையில் பணப்புழக்கம் இன்றி தவிக்கும் மக்கள்.
என்று பலவாறு நம்மை சந்தோஷம் இழக்க வைத்த பொங்கல்.
விரைவில் சுபிட்சம் திரும்ப இறைவனை வேண்டுவோம்.
-
14th January 2017 01:56 PM
# ADS
Circuit advertisement
Bookmarks