-
6th January 2017, 03:43 PM
#11
Junior Member
Devoted Hubber
ராஜா சார் ஏற்கனவே இசை அமைத்த பாடலை மறுசுழற்ச்சி செய்ய ஏதோ காரணம் இருந்தால் அதை அவர் அழகாக செய்து விடுவார். ஒரே ராகத்தில் 50 பாடல்கள் இசை அமைத்தாலும், 50க்கும் வெவ்வேறு ஆடை ஆபரண அணிகலன்களை அணிவித்து நம்மால் எந்த வித்தியாசத்தையும் கண்டு பிடிக்கமுடியாதபடி ஆக்கி விடுவதில் கெட்டிக்காரர். வகை தொகை இல்லாமல் எத்தனையோ பாடல்களை இதற்க்கு உதாரணமாய் சொல்ல முடியும்.
ராஜா மகள் பாடல் பிள்ளை நிலா படத்தில் 1985ல் வெளிவந்தது. இதற்க்கு முன்னர் நான் அளித்த உயிரே உறவே பாடலுக்கும் ராஜா மகளுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா என்று நான் "சொல்லவில்லை". சொடக்கு போட்டு சொன்னாலும் 3 வித்யாசங்களுக்கு மேல் சொல்ல முடியவில்லை..
அங்கு ஜானகி பாலு, இங்கு ஜானகி ஜெயச்சந்திரன்.
அங்கு மோகன் சசிகலா, இங்கு மோகன் ராதிகா.
வார்த்தைகள் வேறு , பாடலுக்கான சூழ்நிலை வேறு.
ரிஷிவானியோ கீரவாணியோ... கேட்பதற்கு சுகமாக இருக்கிறது அல்லவா? ராஜாவை கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க..
-
6th January 2017 03:43 PM
# ADS
Circuit advertisement
Bookmarks