-
14th December 2016, 11:07 PM
#11
Senior Member
Seasoned Hubber
வார்தா புயலின் சீற்றம் சென்னை நகரைப் புரட்டி எடுத்து விட்டது. ஆனால் இந்த இயற்கையின் சீற்றம் இயற்கையிடம் மட்டுமே காட்டப்பட்டதில் ஓரளவிற்கு ஆறுதல். மனித இனத்தை காத்து உயிர்பலி ஏதுமின்றி தன் வேலையைப் பார்த்து புயல் கடந்து விட்டது துன்பத்திலும் சிறிது இன்பம் பயத்த செயலாகியது.
இனி இதிலிருந்து மீள வேண்டியது மனிதனின் கடமை.
தொடர் மின் இணைப்பு வெட்டினால் இங்கு சென்னை நகர நண்பர்களால் பங்கேற்க இயலவில்லை என எண்ணுகிறேன். அடியேனால் பங்கேற்க முடியவில்லை என்பது வருத்தமே.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
14th December 2016 11:07 PM
# ADS
Circuit advertisement
Bookmarks