-
30th November 2016, 07:57 AM
#11
Junior Member
Newbie Hubber
வாசு,
நான் கோடு போட்டால் நீ ரோடு போட்டு (தங்க நாற்கரம்) அலம்பல் பண்ணி விட்டாய். என் வேண்டுகோளை ஏற்று என்னுடைய இதயத்துடன் ஈஷியிருக்கும் காட்சியை தரவேற்றியதற்கு நன்றி.
நீ விவரித்து எனக்கு மேலும் வேலையில்லாமல் பண்ணி விட்டாய். எழுத்தில் மனோதத்தவம் பேசும் புது மெருகு.
எனக்கு வேற யாரு இருக்கா உங்களைத்தானே நம்பணும் என்ற தேவர் புலம்பலை போல கார்த்திக் கைவிட்டுவிட,சாரதா கௌரவ நடிகையாகி விட, முரளி பழைய பெருங்காய டபபா ஆகிவிட,ராகவேந்தர் அப்போப்போ தலை காட்ட,புதிய பதிவர்களோ ,நாங்கள் பாட்டுக்கு எங்கள் பதிவை போடுவோம் பதில் வினை-எதிர்வினையா மன்னிக்க என்று செல்ல ,என்னத்தை சொல்ல?எவ்வளவு நாள் உதாசீனத்துடன் போராடி தங்கத்தை இலவசமாகவே ,நன்றி என்ற வார்த்தை கூட இன்றி வழங்கி கொண்டிருக்க போகிறோமோ?
-
30th November 2016 07:57 AM
# ADS
Circuit advertisement
Bookmarks