-
2nd August 2016, 06:38 PM
#11
Junior Member
Platinum Hubber
எம்.ஜி.ஆரின் ‘நாடோடி மன்னன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் விழாவுக்கு மதுரை வந்த எம்.ஜி.ஆர் நான் படித்துக் கொண்டிருந்த கல்லூரிக்கும் வரநேர்ந்தது. அவரது முன்னிலையில் பேசிய மூன்று மாணவர்களில், எனது பேச்சு அவரை மிகவும் கவர்ந்தது. அது சினிமாவைப் பற்றிய பேச்சு. ஆனால், பாராட்டுரை அல்ல. நடைமுறை யதார்த்தத்திலிருந்து தமிழ் சினிமா எவ்வளவு தூரம் விலகிப் போலித்தனமாயிருக்கிறது என்பதைப் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் அடங்கிய விமரிசன உரை அது. சினிமாத்துறையின் மிக மிக முக்கியமான மனிதரின் முன்னிலையில் தைரியமாக விமரிசித்து, தயக்கம் ஏதுமின்றிப் பேசினேன்.
எனக்கு அப்போது உனக்குள்ளதைப் போன்ற சினிமாக் கனவுகள் ஏதுமில்லை. ஆனால், அதன்மீது நேசம் இருந்தது. நமது சினிமா தமிழுக்குப் பெருமை சேர்க்கவில்லை என்கிற ஆதங்கம் இருந்த்து. அப்போது என்மீது விழுந்த எம்.ஜி.ஆரின் கவனம் ஐந்தாண்டுகளுக்குக் பிறகு, நான் ஒரு நிருபராக அமர்ந்திருந்த சந்திப்பின் போது என்னைப் பார்த்தவுடன் அடையாளம் கண்டு கொள்கிற அளவுக்குக் கூர்மையாக இருந்த்து.
Director - mahendran
-
2nd August 2016 06:38 PM
# ADS
Circuit advertisement
Bookmarks