-
21st July 2016, 08:31 AM
#11
Junior Member
Newbie Hubber
ஆண்மைக்கும்,அழகுக்கும்,கம்பீரத்துக்கும் இலக்கணம் கண்டவன்,தமிழ் மொழியின் ஆண்மை மிகு கம்பீரத்தை குரலால் உயர்த்தி சொன்னவனே,மன்னனாக நீ ஆண்டிருந்தால் தமிழகத்தின் தலைவிதி மாறியிருக்குமே ?
தமிழர்கள் ,தங்கள் தலையில் தானே மண்ணள்ளி போட்டு கொள்ளும் யானைகளாக விளங்கிய படியால் ,இந்த பட்டத்துக்குரிய ஆண்மை யானை போல குலம் அரவணைத்து, சிம்மம் போல ஆளுமை கொண்டு,எருது போல இலக்கை நோக்கி சீறி பாயும் உண்மை தமிழனை கலைக்கு மட்டும் என்று தாரை வார்த்தார்களோ?
நீ ஆண்டு கொண்டிருக்கிறாய் அனைத்து தமிழர் இதயத்தை. அரசுகள் போகும் வரும். நீ நிரந்தர ஆட்சியாளன்.
நீ வருடம் ஒரு முறை இந்த நாளில் மட்டும் வந்து ,புண்பட்டு துடிக்கும் எங்கள் மனதை தேற்றி செல்ல கூடாதா?
-
Post Thanks / Like - 1 Thanks, 7 Likes
-
21st July 2016 08:31 AM
# ADS
Circuit advertisement
Bookmarks