Results 1,831 to 1,840 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

Threaded View

  1. #11
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    காமராசர்-

    ஒரு நல்ல மனம் கொண்ட எளிமையான அரசியல்வாதி. தமிழகத்தின் மிக சிறந்த முதல்வர். இந்த வரிசையில் அண்ணா வந்திருப்பார் இன்னும் சில ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருந்தால்.ராஜாஜி தொடர்ந்திருந்தால் தமிழகம் இன்னும் நன்றாக திட்டத்துடன் முன்னேறி இருக்கும்.

    முன்னேற்றம் என்பதெல்லாம் பூஜ்யத்திலிருந்து தொடங்கியதால் ஏற்பட்ட விறு விறு மாற்றங்களே. அந்த காலகட்டத்தில் அவர் இருந்தது அவருடைய அதிர்ஷ்டம்.பல முன்னேற்ற திட்டங்கள்,இலவச கல்வி,மதிய உணவு ,பிற்படுத்த பட்டோர் நலம் போன்ற பல திட்டங்களுக்கு இந்த பச்சை தமிழனுக்கு (ஆசான் பெரியார்) புகழ் சேராமல் யார் யாருக்கோ போய் சேர்ந்தது. மது என்பது தமிழகத்தை எட்டியே பார்க்கவில்லை.

    சத்யமூர்த்தி ,ராஜாஜியுடன் ஏற்பட்ட பிணக்கில் இவரை தூக்கி விட, ராஜாஜியும் பார்ப்பன எதிர்ப்பு அலையை புரிந்து கொள்ளாமல், கவர்னர் ஜெனெரல் என்ற பதவியில் இருந்து விட்டு பல படிகள் தாழ்ந்து தமிழக முதல்வர் ஆனார். குலதொழில்-கல்வி திட்டம் மிக மிக தொலை நோக்கு கொண்டது. பல சமூகங்கள் முன்னேறி இருக்கும். இந்த திட்டம் தோல்வியடைய பார்ப்பனர்களுக்கு தொழிலே இல்லாமல் போனது ,பார்ப்பன சூழ்ச்சியாய் பார்க்க பட்டது.

    காமராசர் ,ஆட்சியை துறந்து(காமராஜ் திட்டம்) ,பக்தவத்சலம் போன்ற தகுதி,திறமை,நேர்மை இல்லாதவர்களிடம் ஆட்சியை ஒப்படைத்தது ,திராவிட இயக்கங்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்தது. மத்திய அரசுடன் இணங்கிய திராவிட இயக்கங்கள், கச்ச தீவு,காவிரி,முல்லை-பெரியார் பிரச்சினை,இலங்கை தமிழர் பிரச்சினை ,மது விலக்கு , கல்வி,சுகாதாரம் எல்லாவற்றிலும் தமிழகத்துக்கு துரோகம் இழைத்து ,இந்தியாவுக்கே மோசமான முன்னுதாரணம் ஆனது.

    எனக்கு காமராசர்,அண்ணா, கருணாநிதி போன்றோருடன் ,ஓரளவு மதிப்பு உண்டு.

    காமராசரின் மிக பெரிய தோல்விகளுக்கு காரணமான தலைமை தகுதியில்லாத குணங்கள்.(அண்ணாவிற்கு தலைவராக முதல் மதிப்பெண் கொடுக்கலாம் )

    மாற்றத்தை உணராத பழமை பிடிவாதம்.

    கருத்துக்களை சரியாக வெளியிட தெரியா விட்டாலும்,பல பேச்சாளர்களை வளர்த்திருக்கலாம்.

    செல்வாக்கு மிக்க சிவாஜி போன்றவர்களை சரியாக உபயோக படுத்தாத உதாசீனம்.சிவாஜி என்ற ஒரு அற்புதமான தூய மனம் கொண்ட ,சுத்தமான மனிதருக்கு,இவரால் இழப்புகள் மிக அதிகம். சிவாஜியின் உன்னதம் தொட்ட காலங்கள்(purple patch ) ,அவர் அரசியல் யமனிடம் இருந்து விலகியிருந்த 1957 முதல் 1964 வரையான காலங்களே.

    தன்னுடைய மாநிலத்தை சேர்ந்த கலைஞர்களை , பல்திறமை கொண்டவர்களை தேசிய அளவில் இவர் செல்வாக்கை வைத்து இனம் காட்டவில்லை.ஒரு அவ்ரங்கசீப் போல ரசனை கெட்ட ஆள்.சிவாஜிக்கு உலக அளவில் வந்த பெருமைக்கு ஈடாக, இந்தியாவில் வராமல் போனதற்கு ,இந்த மாதிரி ரசனை கெட்டவர்களின் பின்னால் போனதே காரணம்.

    இரண்டாம் நிலை தலைவர்களை வளர்க்காமல், அடுத்த தலைமையை இனம் காட்டாமல் போனது.சுத்தமாக தலைமை குணமே இல்லாத அரைகுறை அரசியல்வாதி.

    இந்திரா எதிர்ப்பு அலையை ,ஜெயப்ரகாஷ் போன்று சரியாக திட்டமிடாதது.

    தன்னுடன் தன் கட்சிக்கும் சமாதி கட்டியது.

    தமிழகத்தின் பிரத்யேக நலன்களை புறக்கணித்து,தனித்தன்மை துறந்து ,தேசியத்தில் இணைய துடித்து, தேசிய தலைமை தேடி வந்த போதும் ஏற்று கொள்ளாத தாழ்மையுணர்வு. இது அவரை இரண்டுங்கெட்டான் அரசியல் ஞான சூன்யமாக இனம் காட்டி விட்டது.

    ஜனநாயகத்தில் ,மக்கள் மன மாற்றங்களை உணராத ,குண்டு சட்டியில் குதிரை ஓட்டியவர்.(மொழி கொள்கையிலும் தெளிவில்லை)

    ஆனாலும் ,அவருடைய நல்ல மனம் கொண்ட,மக்களிடம் நிஜமான அக்கறை கொண்ட ,நல்லாட்சிக்கு தலை வணக்கம்.
    Last edited by Gopal.s; 15th July 2016 at 08:13 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •