Results 1 to 10 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

Hybrid View

  1. #1
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    அவனுக்கு அவளென்றும் அவளுக்கு அவன் என்றும் சிறுவயதிலேயே சொல்லி வைத்துவிட்டார்கள்..எனில்
    வளரவளர இருவருக்கும் உள்ள உறவும் நெருக்கமும் வளர்ந்ததில் ஒன்றும் வியப்பில்லையே..

    அப்புறம் என்ன.. நெருக்கமாக பாசம் அன்பு காதல் எனக் கலந்து கட்டி ஊரெங்கும் ஆடிப் பாடிக் கொண்டிருக்கும் காதல் பறவைகளின் வாழ்வினில்..வழக்கம் போல யார் கண் பட்டதோ..நிச்சயம் நின்று விடுகிறது..இருவருக்கும் திருமணம் நடக்குமா நடக்காதா எனக் கவலை.. ஒருவரை ஒருவர் பார்த்து பேசி பழகக் கூடாது என்ற நிலை வேறு..

    கஷ்டம் தான்..

    சாதலில் கொள்கின்ற சங்கடம் தன்னையே
    காதலும் கொண்டு தரும்..

    எனப் பெரியவர்கள் (?!) வாக்கிற்கேற்ப இருவருக்கும் மனக்கலக்க்ம், குழப்பம், நோதல்..எனப் போய்க் கொண்டே இருக்கிறது.. இதில் பெண்ணுக்கு கொஞ்சம் ஆற்றாமை ஜாஸ்தியாகப் பொங்குவதால் என்ன செய்கிறாள்..

    உள்ளத்தின் வேதனையை ஓட்டிவிட எண்ணியே
    சொல்லி விடுகின்றாள் தூது..

    (யெஸ்..இதுவும் பெரியவங்க சொன்னது தான்!)

    எதைத் தூது விடறா.. அழகாய் ரோஜாப்பூப் போன்ற சிவந்த மூக்குடன் சிரித்து காற்றிலாடும் பச்சை வயல்களைப் போன்ற நிறத்துடன் கூடிய உடம்பையும் கொண்ட கிள்ளைகளை..கிள்ளை? கிளிகளை..

    (முறைப்பையனாக ந.தி - காதலன் -காதலின் பிரிவை கண்ணில் காட்டி உருக வைத்திருப்பார்-பின் காதலிக்கு நம்பிக்கை கொள்ளும் ( தன்னம்பிக்கை கொளவைக்கும் ) வார்த்தைகளைத் தொடுத்த பாட்டைப் பாடுவதாகட்டும் கலக்கி இருப்பார்..காத்லியாக..உஷா நந்தினி - கொஞ்சம் அகன்ற விழிகள், இளமைப் பருவம் என பார்க்க ஓகேயாக இருப்பார்)(படம்: பொன்னூஞ்சல்)

    இனி பாடல்..

    காதலி :
    நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்
    கொஞ்சம் சொல்லுங்களேன்
    துள்ளி வரும் முத்து கிள்ளைகளே
    பச்சை வண்ண வெற்றிலை போல்
    பறந்தோடும் போது
    பாக்கு வந்து வெற்றிலையில்
    சொன்னால் என்ன தூது
    சொன்னால் என்ன தூது

    காதலன் :வெள்ளம் ஓடட்டும் பெண்ணிடம் கூறட்டும்
    உள்ளம் வேலி கட்டை தாண்டி வந்து பூவாகட்டும்
    அந்த மேகங்கள் பாடும் ராகங்கள்
    வண்ண பெண் பார்க்க போய் வரும் தூதாகட்டும்
    மஞ்சளுக்கு நாத்து வச்சா மணக்காதோ இங்கே
    மௌனத்திலே சேதி சொன்னா புரியாதோ அங்கே

    (இவளே.. நானும் தான் ஒன்னப் பத்தி நினச்சுக்கிட்டிருக்கேன்.. நீ கிளியை அனுப்பறியா..இதோ இந்த மேகத்தை அனுப்பறேன்..ஆமா மெளனம் என்ன ஒரு மொழி..அந்த சேதி ஒனக்குப் புரியலியா - நா இருக்கேன்மா..)

    தங்க மீன்களே தாமரை பூவிலே
    பொங்கும் தேன் உண்டு என்பதை நீர் அறிவீர்களோ
    அந்த பொன் வண்டு இந்த பூ கண்டு
    இந்த தேனுண்ணும் நாள் பார்த்து விடுவீர்களோ
    பந்தியிலே காத்திருக்கு பசியோடு சொந்தம்
    பக்கத்திலே நீ இருந்து பரிமாறு கொஞ்சம்

    (ஏதோ எனக்கு ஆத்தாமை தூது விட்டேன்.. சீக்கிரம் வாங்கமாமா..)

    வெகு அழகான பாடல்..பிக்சரைஸ் பண்ணிய விதமும் ந.தி, உ.ந நடிப்பும் நன்றாக இருக்கும்..(ரொமான்ஸ் பாட்டில காதலிக்கு தன்னம்பிக்கை ஊட்டும் பாடல் இது )

    (இரண்டு வருடங்களுக்கு முன் இதே நாளில் முக நூலில் எழுதியது..இங்கே இடவில்லை என நினைக்கிறேன்..)


  2. Thanks Russellmai thanked for this post
    Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •